செய்திகள்

தொடர்ந்து 3-வது நாளாக குறைந்த தங்கம் விலை: சவரன் ரூ.73,280க்கு விற்பனை

சென்னை, ஜூலை 26– சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து 3-வது நாளாக இன்றும் குறைந்துள்ளது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு இறுதியில் ஒரு சவரன் தங்கம் ரூ.58 ஆயிரமாக இருந்தது. பின்னர் தங்கம் விலை படிப்படியாக உயர்ந்து, கடந்த 23ம் தேதி ஆபரணத் தங்கம் ரூ.75 ஆயிரத்தை தாண்டி வரலாற்றில் புதிய உச்சத்தை பதிவு […]

Loading

செய்திகள்

சென்னை புழல் பகுதியில் 2 வயது ஆண் குழந்தை விற்க முயற்சி:

சென்னை, ஜூலை 26– 2 வயது ஆண் குழந்தையை விற்க முயன்ற தாய் உள்பட 3 பெண்கள் கைது செய்யப்பட்டனர். சென்னை, புழல் பகுதியில் வசித்து வரும் கார்த்திக் என்பவர் இ சேவை மையத்தில் வேலை செய்து வருகிறார். கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் புழல், கதிர்வேடு பகுதியைச்சேர்ந்த தீபா என்பவர் அறிமுகமாகியுள்ளார். தீபாவிடம், அவரது தோழியான வித்யா (எ) வித்யாராணி என்பவர் குழந்தைகள் தன்னிடம் இருப்பதாகவும், குழந்தையை பணம் கொடுத்து வாங்க யாராவது இருந்தால் அவர்களிடம் […]

Loading

செய்திகள்

கும்மிடிப்பூண்டி சிறுமி பாலியல் வன்கொடுமை: 2 நாட்களாய் போலீசுக்கு ‘டிமிக்கி’ கெொடுத்து வந்து மேற்கு வங்காளத்து இளைஞன் கைது

கும்மிடிப்பூண்டி, ஜூலை 26– கும்மிடிப்பூண்டி சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் 12 நாட்களாய் போலீசுக்கு டிமிக்கி கொடுத்து வந்த மேற்கு வங்காள இளைஞன், சூளூர்ப்பேட்டை ரெயில் நிலையத்தில் கைது செய்யப்பட்டான். திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கம் பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமி, கடந்த 12 ஆம் தேதி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். இந்தச் சம்பவம் குறித்து, ஆரம்பாக்கம் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, குற்றவாளியை தீவிரமாக தேடி வந்தனர். இதற்காக […]

Loading

செய்திகள்

வீரர்களின் துணிச்சலை நினைவூட்டும் கார்கில் வெற்றி தினம்: தியாகத்தை நினைவு கூர்ந்த மோடி!

புதுடெல்லி, ஜூலை 26– இன்று கார்கில் வெற்றி தினம். இதையொட்டி வீரர்கள் செய்த தியாகங்களை நினைவு கூர்ந்து ஜனாதிபதி, பிரதமர் புகழஞ்சலி செலுத்தியுள்ளனர். இந்தியாவின் லடாக் யூனியனில் உள்ள கார்கில் மலைப் பகுதியை குறுக்கு வழியில் ஆக்கிரமித்த பாகிஸ்தானை அடித்து விரட்டி நம் ராணுவ வீரர்கள் 1999 ஜூலை 26ல் வெற்றிக் கொடி நாட்டினர். போரில் வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கார்கில் தினம் கடைபிடிக்கப்படுகிறது. ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்ட எக்ஸ் […]

Loading

செய்திகள்

தமிழக பண்பாட்டை உலகம் முழுவதும் பரப்பிய பெரியபுராணம்

சென்னை, ஜூலை 26– சேக்​கிழார் ஆராய்ச்சி மையம் சார்​பில் 33-ம் ஆண்டு தெய்வ சேக்​கிழார் விழா சென்​னை​யில் நடை​பெற்​றது. பல்வேறு ஆதீன கர்த்​தர்​கள் பங்​கேற்​றனர். சேக்​கிழார் ஆராய்ச்சி மையம், ஸ்ரீராமச்​சந்​திரா மருத்​து​வம் மற்​றும் ஆராய்ச்சி பல்​கலைக்​கழகம் சார்​பில் 33-ம் ஆண்டு தெய்வ சேக்​கிழார் விழா சென்னை திரு​வான்​மியூர் ராமச்​சந்​திரா கன்​வென்​ஷன் மையத்​தில் நடந்து வரு​கிறது. 2-ம் நாள் விழா நேற்று நடை​பெற்றது. இந்நிகழ்ச்​சி​யில் தரு​மபுரம் ஆதீனம் 27வது குரு​மகா சந்நிதானம் கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்​பந்த பரமாச்​சா​ரிய […]

Loading

சிறுகதை விழாக்கள்

யானையூட்டு விழா..! விழா 23 – ராஜா செல்லமுத்து

நேற்று வரை, கோயில்களில் அடைந்து கிடந்த யானைகளுக்கு இன்று முதல் சில நாட்களுக்கு விடுதலை. சந்தோஷத்தின் உச்சிக்குப் போன யானைகள் தன் அகலக் காதுகளை இன்னும் கொஞ்சம் அகலமாய் விரித்து சர் சர் சர்ரென வீசிக் கொண்டிருந்தன. தன் தந்தங்களைத் துதிக்கை கொண்டுத் தடவிப் பார்த்துக் கொண்டன. தூண் போன்ற தன் கால்களை அப்படியும் இப்படியுமாய் ஆட்டிக் கொண்டிருந்தன. இருப்பிடம் விட்டு வேறு இடம் போகத் தயாராக இருப்பதால், சொல்ல முடியாத மகிழ்ச்சியில் திளைத்து புத்துணர்ச்சி விழாவிற்குப் […]

Loading

செய்திகள்

யூடியூப் பார்த்து உடல் எடையை குறைக்க முயன்ற மாணவர் உயிரிழப்பு

கன்னியாகுமரி, ஜூலை 25– யூடியூப் பார்த்து உடல் எடையை குறைக்க முயன்ற மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள பர்ணட்டிவிளையை சேர்ந்தவர் நாகராஜன், சுங்கவரி துறையில் ஏட்டாக பணியாற்றி வருகிறார். இவருடைய மகன் சக்தீஷ்வர் (வயது17). இவர் பிளஸ்-2 தேர்ச்சி பெற்று என்ஜினீயரிங் கல்லூரியில் சேர தயாராகி வந்தார். இந்தநிலையில் நேற்று காலையில் வீட்டில் இருந்த சக்தீஷ்வர் திடீரென மூச்சு திணறி மயங்கி கீழே விழுந்தார். உடனே அவரை பெற்றோர் […]

Loading

செய்திகள்

குன்றத்தூரில் கள்ளக்காதலுக்காக 2 குழந்தைகளுக்கு பாலில் தூக்க மாத்திரை கொடுத்து கொலை செய்த வழக்கு

காஞ்சிபுரம், ஜூலை 24– குன்றத்தூரில் 2 குழந்தைகளுக்கு பாலில் தூக்க மாத்திரை கொடுத்து கொலைச் செய்த வழக்கில் தாய் அபிராமி, கள்ளக்காதலன் குற்றவாளி என காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்தவர் விஜய் (30). இவர் சென்னையில் உள்ள பிரபலமான தனியார் வங்கியில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இதற்காக விஜய், தனது குடும்பத்துடன் குன்றத்தூர் அருகே உள்ள மூன்றாம் கட்டளை அகத்தீஸ்வரம் கோயில் தெருவில் ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந்தார். விஜய்க்கு […]

Loading

செய்திகள்

நடுவானில் மாயமான ரஷ்ய விமான விபத்தில் 49 பேர் பலியா?

மாஸ்கோ, ஜூலை 24– ரஷ்யாவில் 49 பேருடன் சென்ற ஏ.என்.24 ரக பயணிகள் விமானம் கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பை இழந்து மாயமாகி உள்ளது. இந்த விமான விபத்தில் பயணம் செய்த 49 பேரும் உயிர் பிழைக்க வாய்ப்பில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள அமுர் மாகாணத்தில், அங்காரா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ஏ.என்.24 ரக விமானம் சென்று கொண்டு இருந்தது. இந்த விமானத்தில் 5 குழந்தைகள் உட்பட 43 பயணிகள் மற்றும் 6 பணியாளர்கள் […]

Loading

செய்திகள்

ரஷியாவில் 49 பயணிகளுடன் சென்ற விமானம் மாயம்

மாஸ்கோ, ஜூலை 24– ரஷ்யாவில் 49 பேருடன் சென்ற ஏ.என்.24 ரக பயணிகள் விமானம் கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பை இழந்து மாயமாகி உள்ளது. விமானம் விபத்தில் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள அமுர் மாகாணத்தில், அங்காரா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ஏ.என்.24 ரக விமானம் சென்று கொண்டு இருந்தது. இந்த விமானத்தில் 5 குழந்தைகள் உட்பட 43 பயணிகள் மற்றும் 6 பணியாளர்கள் பயணித்துள்ளனர், விமானம் – சீனாவின் எல்லையையொட்டிய ரஷியாவின் […]

Loading