செய்திகள்

மெட்ரோ ரெயில்களில் புகையிலை பயன்படுத்தினால் அபராதம்

சென்னை, ஜூலை 30– மெட்ரோ இரயில்கள் மற்றும் நிலையங்களில் மெல்லக்கூடிய புகையிலை பொருட்களைப் பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: புகையிலையை உட்கொள்வது உடல்நலத்திற்கு மிகவும் தீங்கு விளைவிப்பதுடன், பொது இடங்களில் சுகாதாரமற்ற நிலைமைகள் பரவுவதற்கும் காரணமாகிறது. மெட்ரோ இரயில்கள் மற்றும் நிலையங்களில் மெல்லும் புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துவதாலும், அதன் விளைவாக எச்சில் துப்புவதாலும், குப்பைகள் போடுவதாலும் அதிகரித்து வரும் பொதுமக்கள் மற்றும் […]

Loading

செய்திகள்

போரை நிறுத்தும்படி எந்த தலைவரும் இந்தியாவிடம் கூறவில்லை’’:

புதுடெல்லி, ஜூலை.30- போரை நிறுத்தும்படி எந்தவொரு உலகத் தலைவரும் இந்தியாவிடம் கோரிக்கை விடுக்கவில்லை,” என மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான சிறப்பு விவாதத்தின்போது பிரதமர் மோடி திட்டவட்டமாக தெரி வித்தார். இந்தியா கொடுத்த பதிலடியை தாங்க முடியாமல் பாகிஸ்தான் நாடுதான் போரை நிறுத்தும்படி, நம்மிடம் மண்டியிட்டது. நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 21-ந் தேதி தொடங்கியது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் விவகாரம் உள்ளிட்ட பிரச்சினை களை விவாதிக்க வேண்டும் என்று கோரி காங்கிரஸ் உள்ளிட்ட […]

Loading

செய்திகள்

காவிரி–குண்டாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

சிவகங்கை, ஜூலை.30- அண்ணா தி.மு.க. ஆட்சி அமைந்ததும் தீபாவளியின்போது பெண்களுக்கு சேலை வழங்கப்படும், காவிரி–குண்டாறு இணைப்பு திட்டம் நிறைவேற்றப்படும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அண்ணாசிலை முன்பு திரண்ட தொண்டர்கள், மக்கள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:- தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளாக மக்கள் நிம்மதி இன்றி வாழ்ந்து வருகின்றனர். எங்கு பார்த்தாலும் போதைப்பொருள், கட்டப்பஞ்சாயத்து, சட்டம்–ஒழுங்கு சீர்கேடு, கொலை, கொள்ளை சம்பவங்கள் நடந்து வருகின்றன. தமிழகத்தில் உள்ள இளைஞர்கள், போதையின் பாதையில் […]

Loading

செய்திகள்

திருமங்கலத்தில் கார் மோதியதில் பைக்கில் சென்ற மாணவர் பலி

சென்னை, ஜூலை 29– திருமங்கலத்தில் கார் மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற கல்லூரி மாணவர் பலியானார். அயனாவரத்தைச் சேர்ந்த அபிஷேக் (20), நித்தின் சாய் (19) ஆகியோர் தனியார் கல்லூரியில் படித்து வருகின்றனர். இவர்கள் 2 பேரும் இன்று மோட்டார் சைக்கிளில் சென்னை திருமங்கலம் பகுதியில் சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை அபிஷேக் ஓட்டியுள்ளார். பின்னால் நித்தின் சாய் அமர்ந்திருந்தார். அவர்கள் 2 பேரும் திருமங்கலம் பகுதியில் வந்த போது, மோட்டார் சைக்கிள் மீது கார் ஒன்று […]

Loading

செய்திகள்

எதிர்க்கட்சிகள் அமளி: மாநிலங்களவை ஒத்திவைப்பு

புதுடெல்லி, ஜூலை 29– நாடாளுமன்ற மாநிலங்களவையில் ஏற்பட்ட அமளி காரணமாக அவை பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரின் 7-ம் நாளான இன்று இரு அவைகளும் வழக்கம்போல் காலை 11 மணிக்கு கூடின. மாநிலங்களவை அதன் துணைத் தலைவர் ஹரிவன்ஷ் தலைமையில் கூடியது. அப்போது எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி மற்றும் பிற மாநிலங்களில் மேற்கு வங்கத் தொழிலாளர்கள் அவமரியாதையுடன் நடத்தப்படுவதாகக் கூறப்படும் […]

Loading

செய்திகள்

பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட 3 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர்: மக்களவையில் அமித்ஷா தகவல்

புதுடெல்லி, ஜூலை 29– பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மக்களவையில் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். ப.சிதம்பரம் பாகிஸ்தானுக்கு நற்சான்றிதழ் வழங்க விரும்புகிறார் என்றும் அமித்ஷா குற்றஞ்சாட்டினார். மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் மற்றும் பஹல்காம் தாக்குதல் குறித்து நேற்று பிற்பகல் 2 மணிக்கு விவாதம் தொடங்கியது. மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் விளக்கத்தை தொடர்ந்து இன்று 2வது நாளாக அவையின் உறுப்பினர்கள் விவாதத்தில் […]

Loading

செய்திகள்

மயிலாப்பூர் அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயில் திருக்குளம் ஆய்வு

சென்னை, ஜூலை 29– எடப்பாடி பழனிசாமி பேசுவது எல்லாமே பொய் தான். அதற்காக தான் உருட்டலும் திரட்டலும் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். அதற்கு தகுந்த ஒரே தலைவர் தமிழக அரசியல் களத்தில் எடப்பாடி ஒருவர் தான் என்று அமைச்சர் காட்டமாகத் தாக்கினார். தி.மு.க. ஆட்சி பொறுப்பை ஏற்ற பிறகு நடைபெற்ற இடைத்தேர்தல்கள், நாடாளுமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல் என அனைத்திலும் வெற்றியை சந்தித்தது. இந்த வெற்றிகள் அனைத்துமே தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி, திறம்பட செயல் தன்மை உள்ள […]

Loading

செய்திகள்

12–ம் வகுப்பு துணைத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் நடப்பு கல்வியாண்டிலேயே அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேரலாம்

சென்னை, ஜூலை 29– 12–ம் வகுப்பு பொதுத் தேர்வில் தவறிய மாணவர்களின் உயர்கல்வி கனவை நனவாக்க துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இக்கல்வியாண்டே (2025-–26) இளநிலை பட்டப்படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளதாவது:–- ஏழை, எளிய மாணவர்கள் உயர்கல்வியினை பெறவேண்டும், அனைவருக்கும் சமமான உயர்கல்வி கிடைத்திட வேண்டும் என்பதற்காக, அரசுக்கல்லூரி இல்லாத பகுதிகளில் நடப்பாண்டில் […]

Loading

செய்திகள்

பாகிஸ்தான் தாக்குதலில் பலியானவர்களின் 22 குழந்தைகளைத் தத்தெடுக்கும் ராகுல்

புதுடெல்லி, ஜூலை 29– ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத் தொடர்ந்து, பாகிஸ்தான் நடத்திய ஷெல் தாக்குதலில் பெற்றோர்களை இழந்த 22 குழந்தைகளை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தத்தெடுக்க முடிவு செய்துள்ளார். பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய ராணுவம் கடந்த மே மாதம் 7–ந்தேதி ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டது. முப்படைகளும் இணைந்து நள்ளிரவு 1.05 மணி முதல் 2.30 மணி வரை 25 நிமிடத்திற்குள் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள […]

Loading

செய்திகள்

22 நர்சுகளுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது: உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்

சென்னை, ஜூலை.29- சிறப்பாக பணியாற்றிய 22 நர்சுகளுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று, தமிழ்நாடு நர்சிங் மற்றும் மகப்பேறு கவுன்சிலின் நூற்றாண்டு தொடக்க விழா நடந்தது. இதில், சிறப்பாக பணியாற்றிய 22 நர்சுகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கினார். மேலும், தமிழ்நாடு நர்சிங் மற்றும் மகப்பேறு கவுன்சிலின் நூற்றாண்டு தொடக்க விழா இலச்சினை (லோகோ) மற்றும் காலண்டர் தொகுப்பை வெளியிட்டார். […]

Loading