செய்திகள்

கேரள எம்.பி.க்கள் சென்ற ஏர் இந்தியா விமானம் சென்னையில் அவசரமாக தரையிறங்கியது

சென்னை, ஆக. 11– திடீரென நடுவானில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கேரளாவிலிருந்து டெல்லி செல்ல இருந்த ஏர் இந்தியா விமானம் சென்னையில் அவசரமாக தரையிறங்கியது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து தலைநகர் டெல்லிக்கு திருநெல்வேலி காங்கிரஸ் எம்.பி. ராபர் ப்ரூஸ், கேரள எம்.பி.க்கள் கே.சி.வேணுகோபால், கொடிக்குனில் சுரேஷ், அதூர் பிரகாஷ், கே.ராதாகிருஷ்ணன் உள்பட 150 பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம் நேற்று இரவு புறப்பட்டது. அப்போது நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறை விமானி கண்டறிந்தார். […]

Loading

செய்திகள்

சூலூர் இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்

கோவை, ஆக. 11– கொலை வழக்கை சரியாக விசாரிக்காததால் சூலூர் இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியை சேர்ந்த ஜெயராமன் என்பவரை சென்னையில் கொலை செய்து காரில் கொண்டு வந்து மலுமிச்சம்பட்டியில் உள்ள ஒரு கிணற்றில் கல்லைகட்டி போட்டனர். விசாரணையில் 2 மாதங்களுக்கு முன்பு இந்த கொலை சம்பவம் நடந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவருடைய உடல் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டது. அந்த உடல் எலும்புக்கூடாக காணப்பட்டது. இந்த கொலையை செய்ததாக பாளையங்கோட்டையை […]

Loading

செய்திகள்

5 மாதங்களுக்கு பிறகு பத்திரமாக பூமிக்கு திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்

வாஷிங்டன், ஆக.11-– சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து 5 மாதங்களுக்கு 4 விண்வெளி வீரர்கள் பத்திரமாக பூமிக்கு வந்தடைந்தனர். விண்வெளி ஆராய்ச்சியில் உலக நாடுகள் பலவும் போட்டி போடுகின்றன. இதற்காக சர்வதேச விண்வெளி நிலையம் அமைத்து ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்த போட்டியில் சமீப காலமாக தனியார் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்களும் இணைந்துள்ளன. அதன்படி எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் ஒரு குழு அனுப்பப்பட்டது. அதில் அமெரிக்க விண்வெளி வீரர்கள் ஆன் […]

Loading

செய்திகள்

எம்.ஜி.ஆர். குறித்து பேசுவதற்கு திருமாவளவனுக்கு தகுதி இல்லை: எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு

சேலம், ஆக.10-– எம்.ஜி.ஆர். பற்றி பேசுவதற்கு திருமாவளவனுக்கு தகுதி இல்லை என்று அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்து உள்ளார். சேலம் மாவட்டம் ஓமலூரில் பல்வேறு மாற்றுக்கட்சிகளை சேர்ந்தவர்கள் அண்ணா தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி நேற்று அங்குள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நடந்தது. அப்போது பல்வேறு கட்சிகளில் இருந்து சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விலகி கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அண்ணா தி.மு.க. வில் இணைந்தனர். பின்னர் அவர் கட்சியில் சேர்ந்தவர்களுக்கு கட்சி […]

Loading

செய்திகள்

அன்புமணி ராமதாசின் தலைவர் பதவி ஓராண்டு நீட்டிப்பு பா.ம.க. பொதுக்குழுவில் அதிரடி முடிவு

சென்னை, ஆக. 9– சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடந்த பொதுக்குழுக் கூட்டத்தில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸின் பதவிகாலத்தை ஓராண்டு நீட்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பாமகவில் அதன் நிறுவனர் ராமதாசுக்கும், அவரின் மகனும் மற்றும் கட்சியின் தலைவருமான அன்புமணி இடையேயான மோதல் கோர்ட் வரை சென்றுவிட்டது. ஆக.19ம் தேதி பாமக பொதுக்குழு நடைபெறும் என்று ஒரு பக்கம் ராமதாஸ் அறிவிக்க, மறுபுறம் தாமும் இன்று (9–ந் தேதி) பொதுக்குழுக் கூட்டத்தை கூட்டுவதாக அன்புமணி அறிவித்தார். இதற்கு எதிராக […]

Loading

செய்திகள்

சாத்தூர் அருகே வீட்டில் பட்டாசு தயாரித்த போது விபத்து: 3 பேர் பலி

சாத்தூர், ஆக. 9– சாத்தூர் அருகே வீட்டில் பட்டாசு தயாரித்த போது ஏற்பட்ட விபத்தில் 3 பேர் பலியானார்கள். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியில் வெம்பக்கோட்டை அருகே விஜயகரிசல்குளம் என்ற இடத்தில் வீடு ஒன்றில் சிலர் பட்டாசு தயாரித்தனர். அப்போது, வெடி மருந்துகள் திடீரென வெடித்ததில் தீப்பற்றி கொண்டது. அது மளமளவென பரவி பட்டாசுகள் வெடித்து சிதறின. இந்த சம்பவத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Loading

செய்திகள்

சி.பி.ஐ. விசாரணையில் முன்னுக்குப்பின் முரணான பதிலளிக்கும் நிகிதா

சிவகங்கை, ஆக. 9– அஜித்குமார் வழக்கில் சி.பி.ஐ. விசாரணையில் நிகிதா முன்னுக்குப்பின் முரணான தகவல்கள் அளிப்பதால் அவர் பொய் புகார் கொடுத்தாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் காளி கோவில் காவலாளி அஜித்குமாரை, நிகிதா என்பவர் தனது நகை திருடப்பட்டதாக அளித்த புகாரில் அழைத்து சென்ற தனிப்படை போலீசார், விசாரணை என்ற பெயரில் சித்திரவதை செய்ததில், அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த […]

Loading

செய்திகள்

பாகிஸ்தான் ராணுவத்தின் 6 போர் விமானங்களை சுட்டு வீழ்த்திய இந்திய விமானப்படை

பெங்களூரு, ஆக. 9– ஆப்பரேஷன் சிந்தூர் நடந்தபோது பாகிஸ்தானுக்கு சொந்தமான 6 போர் விமானங்களை சுட்டு வீழ்த்தினோம் என்று இந்திய விமானப்படை அறிவித்துள்ளது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, இந்திய ராணுவம், ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையை மேற்கொண்டது. இதில் நீண்ட காலமாக செயல்பட்ட 6 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்திய விமானப்படை தாக்குதலில், எத்தனை பாகிஸ்தான் விமானங்கள் அழிக்கப்பட்டன என்ற விவரத்தை இன்று விமானப்படை வெளியிட்டுள்ளது. பாகிஸ்தான் விமானப்படைக்கு சொந்தமான 6 […]

Loading

செய்திகள்

ஜம்முவில் 9வது நாளாகத் தொடரும் ஆப்பரேஷன் அகல்

ஸ்ரீநகர், ஆக. 9– ஜம்மு – காஷ்மீரின் வனப்பகுதியில், 9 நாள்களாக பயங்கரவாதிகளுக்கு எதிராகப் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்டு வரும் ஆப்பரேஷன் அகல் நடவடிக்கைகளின்போது 2 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் உள்ள அகல் வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக உளவுத்துறை தகவல் கிடைத்தது. அப்பகுதியில் போலீசாருடன் இணைந்து பாதுகாப்பு படையினர் 9 நாட்களாக தொடர்ந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ராணுவ நடவடிக்கைக்கு ஆப்பரேஷன் அகல் […]

Loading

செய்திகள்

டெல்லியில் கனமழை; 100 விமானங்கள் தாமதம், ரெட் அலர்ட் அறிவிப்பு

புதுடில்லி, ஆக. 9– டெல்லியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் 100க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவைகள் பாதிக்கப்பட்டு உள்ளன. டெல்லியில் பருவமழை தீவிரமடைந்து கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ரக்‌ஷா பந்தன் பண்டிகையான இன்று அம்மாநில மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சாஸ்திரி பவன், ஆர்கே புரம், மோதி பாக், கித்வாய் நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் கொட்டிய மழையால் சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் […]

Loading