சிறுகதை விழாக்கள்

சிறுகதை … தீ மிதித் திருவிழா ….! விழா 36 …. ராஜா செல்லமுத்து

சொய்ங்… சொய்ங்…. சொய்ங்.. என்ற சத்தத்தோடு பிரதான சாலையில் வந்து கொண்டிருந்தது ஒரு ஆம்புலன்ஸ். “கொஞ்சம் ஆம்புலன்ஸ்க்கு வழி விடுங்க .கொஞ்சம் ஆம்புலன்ஸ் வழி விடுங்க “ என்று தார்ச்சாலையில் வந்து கொண்டிருந்த வாகனங்களை எல்லாம் ஓரம் ஒதுக்கினார்கள், போக்குவரத்துக் காவலர்கள். வேகமாகச் சென்று கொண்டிருந்த வாகனங்கள் எல்லாம் அந்த ஆம்புலன்ஸ்க்கு வழி விட்டன. ” இந்த ஆம்புலன்ஸ்ல யாரு போறதோ? பாவம்.அவங்களுக்கு எதுவும் நடந்திரக்கூடாது “ என்று கையெடுத்துக் கும்பிட்டாள், சாலையில் நின்றிருந்த ஒரு பெண். […]

Loading

செய்திகள்

பணியின்போது மாரடைப்பால் நடத்துநர் உயிரிழப்பு

சென்னை, ஆக. 17– திருவெற்றியூர் மாநகரப் பேருந்து நடத்துநர் பணியின்போது மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜா கடையை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 54). சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்து திருவொற்றியூர் வரை தடம் எண் 56சி பேருந்தில், ஓட்டுநர் பாண்டியனும் ரமேஷும் காலை 6 மணியளவில் பயணிகளை ஏற்றுக் கொண்டு வந்த நிலையில் திடீரென ரமேஷுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதனையடுத்து அவரை திருவொற்றியூர் உள்ள ஆகாஷ் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், […]

Loading

செய்திகள்

ராமநாதபுரத்தில் ரெயில்வே கேட் மூடப்படாத விவகாரம்; கேட் கீப்பர் பணியிடை நீக்கம்

ராமநாதபுரம், ஆக. 17– வாலாந்தரவை ரெயில் நிலையம் அருகே ரெயில் வந்தபோது கேட் மூடப்படாத விவகாரத்தில் கேட் கீப்பர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சென்னையிலிருந்து ராமேஸ்வரம் நோக்கி கடந்த நேற்று முன் தினம் இரவு சேது விரைவு ரெயில் சென்றுகொண்டிருந்தது. ராமநாதபுரம் ரெயில் நிலையத்தை கடந்து ராமேஸ்வரம் நோக்கி வாலாந்தரவை ரெயில்வே கேட் அருகே ரெயில் வந்த போது அப்பகுதியில் இருந்த ரெயில்வே கேட் மூடப்படாமல் இருந்தது. இதனை கண்டு சுதாரித்துக் கொண்ட ரெயில் ஓட்டுநர், துரிதமுடன் […]

Loading

செய்திகள்

வி.ஜி.சந்தோசத்தின் 89வது பிறந்த நாள் விழாவில் 186வது திருவள்ளுவர் சிலை திறப்பு

சென்னை, ஆக. 17– விஜிபி குழுமத்தின் தலைவர் டாக்டர் வி.ஜி.சந்தோசத்தின் 89ம் ஆண்டு பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு, விஜிபி ஹெரிடேஜ் ரிசார்ட்டில் வள்ளுவர் கார்டன் திறப்பு, நலத்திட்ட உதவிகள் வழங்குதல், நூல் வெளியீட்டு விழா ஆகியவை நடைபெற்றது. மேலும் பிறந்தநாள் விழாவில் முக்கிய பிரமுகர்கள் நேரில் கலந்து கொண்டு வி.ஜி. சந்தோசத்தை நேரில் வாழ்த்தினர். தொழில், தமிழ், சமூக சேவை எனப் பன்முகத் தளங்களில் முத்திரை பதித்த விஜிபி குழுமத்தின் தலைவர் டாக்டர் வி.ஜி. சந்தோசத்தின் 89வது […]

Loading

செய்திகள்

பயிர் காப்பீடு திட்டத்தில் விவசாயிகளுக்கு அதிக இழப்பீடு தொகை பெற்று தந்தது அ.தி.மு.க. அரசு

திருவண்ணாமலை ஆக.17- ‘பயிர் காப்பீடு திட்டத்தில் இந்தியாவிலேயே விவசாயிகளுக்கு அதிக இழப்பீடு தொகை பெற்று தந்த ஒரே அரசு அ.தி.மு.க. அரசு தான்’ என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார். நேற்று காலை திருவண்ணாமலையில் தனியார் தங்கும் விடுதியில் விவசாயிகள், வணிகர்கள், நெசவாளர்கள் சங்க பிரதிநிதிகள், மலைவாழ் மக்கள் பிரதிநிதிகளோடு எடப்பாடி பழனிசாமி கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:- ‘’விவசாயிகள் நெசவாளர்கள் நலனுக்காக கடந்த அண்ணா தி.மு.க. ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. ஒரு அரசுக்கு […]

Loading

செய்திகள்

அன்புமணியுடன் எதுவும் பேசவில்லை: ராமதாஸ்

விழுப்புரம் பட்டானூரில் திட்டமிட்டபடி நாளை சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும், வதந்திகளை நம்பாதீர்கள் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணி ராமதாசுக்கும் இடையே மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்றைய தினம் ராமதாசின் மனைவி சரஸ்வதியின் பிறந்தநாள் என்பதால் அன்புமணி ராமதாஸ், தனது தாயார் சரஸ்வதியுடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடினார். தாயாரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ராமதாசுடன் அன்புமணி பங்கேற்ற […]

Loading

சிறுகதை விழாக்கள்

சிறுகதை … கொடிச்சீலைத் திருவிழா … ! திருவிழா 35…. ராஜா செல்லமுத்து

புதுவருடத்திற்கு முதல் நாள் இரவு, ஊரே திருவிழாக் கோலம் பூண்டிருந்தது. திரும்பும் திசையெங்கும் தீபாவளியைத் திரும்பக் கொண்டு வந்தது போன்று பட்டாசு, மத்தாப்புகள் வெடித்துக் கொண்டாடினர், ஊர் மக்கள் ” ஹேப்பி நியூ இயர்..!” ” இனிய புத்தண்டு நல் வாழ்த்துகள் “ என்று கண்ணில் படுபவர்களுக்கு எல்லாம் வாழ்த்துச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அந்த ஊரில் நான்கு தெருவையும் இணைக்கும் இடத்திலிருந்தது ஒரு தேவாலயம். ஜாதி, மதம், இனம் அத்தனையும் கடந்து அந்தத் தேவாலயத்திற்குச் சென்று வருவார்கள் […]

Loading

செய்திகள்

சென்னையில் நாய்களைக் கட்டுப்படுத்தி ‘ரேபிஸ்’ பாதிப்பைத் தவிர்க்க நடவடிக்கை : தி.மு.க. அரசுக்கு ஓபிஎஸ் வேண்டுகோள்

சென்னை, ஆக 16– நாய்களின் வெறிச்செயலால் மனிதர்களுக்கு ஏற்படும் ஆபத்தினைத் தடுக்காத தி.மு.க. அரசுக்கு ஓ. பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் இதில் உடனடியாகத் தலையிட்டு, பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய நாய்களைக் கட்டுப்படுத்தி ரேபிஸ் பாதிப்பினை தவிர்க்கவும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அவர் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார். இதுகுறித்து முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– சென்னை மாநகரத்திற்குட்பட்ட நாய்களை இணையதளம் வழியாக பதிவு செய்யும் ஒரு திட்டத்தை சென்னை […]

Loading

செய்திகள்

சென்னையிலிருந்து தனுஷ்கோடி வரை இந்தியப் பெண்கள் மோட்டார் சங்கம் 2 சக்கர வாகனப் பேரணி: உதயநிதி துவக்கினார்

சென்னை, ஆக 16– துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் அதிகமானவர்கள் பங்கேற்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்திய பெண்கள் மோட்டார் சங்கம் சார்பில் சென்னையிலிருந்து ராமேஸ்வரம் தனுஷ்கோடி வரை மேற்கொள்ளும் இருசக்கர வாகனப் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் – 2025 ஒவ்வொரு மாவட்டத்திலும் 6–ம் வகுப்பு முதல் 12–ம் வகுப்பு வரை பயிலும் 19 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கும், 25 வயதிற்குட்பட்ட கல்லூரி மாணவர்களுக்கும், […]

Loading

செய்திகள்

கெஜ்ரிவால் பிறந்தநாள்: ஸ்டாலின் வாழ்த்து

சென்னை, ஆக 16– ‘ஆம்ஆத்மி’ கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து கூறியுள்ளார். இது சம்பந்தமாக அவர் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:– ‘‘ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். தாங்கள் நல்ல உடல்நலத்தோடு நீண்டகாலம் மக்கள் சேவையாற்றி, வெற்றியைப் பெற வாழ்த்துகிறேன். பொதுமக்களின் உரிமைகளுக்கான போராட்டத்தைத் தங்கள் தலைமைத்துவம் மேலும் வலுப்படுத்தட்டும்’’. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Loading