சென்னை, ஆக.7– அப்பல்லோ குழந்தைகள் மருத்துவமனையில் இதுவரை 6 ஆயிரம் குழந்தைகளுக்கு இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அந்த மருத்துவமனை மருத்துவர்கள் நெவில் சாலமன், முத்துக்குமரன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:– இந்தியாவில் குழந்தைகளுக்கான இருதய அறுவை சிகிச்சையில் அப்பல்லோ மருத்துவமனை புதிய மைல் கல்லை எட்டியுள்ளது. இதுவரை இங்கு 6 ஆயிரத்து-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு திறந்த நிலை அறுவை சிகிச்சைகளும், 10 ஆயிரம் குழந்தைகளுக்கு இருதய இடையீட்டு சிகிச்சைகளும் செய்யப்பட்டுள்ளன. குழந்தைகளுக்கு இருதய […]
![]()


