செய்திகள்

சித்த மருத்துவ மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும்: துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பேச்சு

சென்னை, ஜன. 4: புற்றுநோய் போன்றவற்றுக்கும் சித்த மருத்துவ முறையில் தீர்வு இருப்பதால், அவற்றை கண்டறிந்து சிகிச்சை அளிக்க முன்வர வேண்டும் என ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். ‘குணப்படுத்த முடியாததாக கருதப்படும் நோய்களுக்கான தீர்வுகளைக் கண்டறிய சித்த மருத்துவத்தில் அறிவியல் ஆராய்ச்சியை மேற்கொள்ள இளம் மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும்’ என்று துணை ஜனாதிபதி கூறினார். சித்த மருத்துவத்தின் தந்தை என போற்றப்படும் அகத்தியரின் பிறந்த தினத்தையொட்டி ஆண்டுதோறும் சித்தா தினம் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், மத்திய ஆயுஷ் […]

Loading

செய்திகள்

வேலூர் ஸ்ரீபுரம் சக்தி அம்மா 50-வது ஜெயந்தி விழா: துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் சிறப்புரை

வேலூர், ஜன. 4: ஸ்ரீபுரத்தை உருவாக்கி, தங்ககோயிலை உலகிற்கு வழங்கிய ஸ்ரீ சக்தி அம்மாவின் 50–வது ஜெயந்தி விழா இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த பொன்விழா ஜெயந்தியில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சக்தி அம்மாவுக்கு மறியாதை செலுத்தி சிறப்புரை ஆற்றினார். அரியூர் மலைக்கோடியில், ஸ்ரீ சக்தி அம்மா தன் தவ வலிமையால் நாராயணி பீடத்தை ஏற்படுத்தி நாராயணிக்கு கோயில் கட்டி சிறப்பித்தார். இந்த நிலையில், தெய்வத்தின் கட்டளையினால் சக்தி அம்மா தெய்வத்தின் […]

Loading

செய்திகள்

சி.பி.ராதாகிருஷ்ணனை அனைத்து எம்.பிக்களும் ஆதரிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

திருவண்ணாமலை, ஆக. 18– துணை ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனை, தமிழக எம்.பி.க்கள் அனைவரும் ஆதரித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் சென்று பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், இன்று திருவண்ணாமலைக்கு வந்த எடப்பாடி பழனிசாமி அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அதன்பிறகு […]

Loading

செய்திகள்

துணை ஜனாதிபதிக்கு போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன்

புதுடெல்லி, ஆக.18- துணை ஜனாதிபதி தேர்தலில், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக, தமிழகத்தைச் சேர்ந்தவரும், மஹாராஷ்டிரா மாநில கவர்னருமான சி.பி.ராதாகிருஷ்ணன் (வயது 68) தேர்வு செய்யப்பட்டு உள்ளார். நாட்டின் 16-வது துணை ஜனாதிபதியாக கடந்த 2022-ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெகதீப் தன்கர் கடந்த மாதம் 21-ந் தேதி திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். தனது உடல் நிலையை கருத்தில் கொண்டு பதவி விலகுவதாக ஜனா திபதிக்கு அவர் கடிதம் அனுப்பினார். அவரது ராஜினாமாவை […]

Loading