விழுப்புரம், ஜூலை.17- திண்டிவனம் அருகே பல்லவர் கால விஷ்ணு சிற்பம் கண்டெடுக்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே மரக்காணம் சாலையில் அமைந்துள்ளது வன்னிப்பேர் கிராமம். இப்பகுதியில் விழுப்புரத்தை சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் செங்குட்டுவன் கள ஆய்வில் ஈடுபட்டார். அப்போது ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சிற்பங்கள் மற்றும் கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து அவர் கூறியதாவது:- இங்கிருக்கும் சிவன் கோவில் அருகில் விளைநிலப் பகுதியில் மண்ணில் சாய்ந்த நிலையில் சுமார் 2½ அடி உயரத்தில் மூத்ததேவி சிற்பம் காணப்படுகிறது. தலை […]
![]()


