சிறுகதை விழாக்கள்

சிறுகதை … குட முழக்கு விழா…! விழா 19 …. ராஜா செல்லமுத்து

வானம் சாட்சியாக, பூமி சாட்சியாக அத்தனை தெய்வங்களின் சாட்சியாக நடக்கத் தயாராக இருந்தது, கடற்கரையில் அமைந்த திருக்கோயிலின் குடமுழுக்குத் திருவிழா. கண்ணுக்கெட்டிய தூரம் வரை, பெருங்கடல் சூழ்ந்திருந்தாலும் புனித நதிகளில் இருந்து தீர்த்தங்கள் கொண்டு வந்திருந்தனர், புண்ணியத் தலங்களிலிருந்து வந்த ஆன்மீகவாதிகள். கோயில் முழுவதும் பந்தல் போடப்பட்டு, ஆங்காங்கே சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்தனர், ஆன்மீகச் சொற்பொழிவாளர்கள் , அவர்களின் பக்திப் பேச்சில் மயங்கிக் கிடந்தனர் பக்தர்கள் . ஆன்மீகம், சொற்பொழிவு இது எதையும் கவனிக்காமல் தங்கள் வியாபாரம் மட்டுமே […]

Loading

சிறுகதை விழாக்கள்

சிறுகதை … தள்ளுபடி விழா..! விழா 18 …. ராஜா செல்லமுத்து

ஆடி மாதம் ஆனாலே தெருத் தெருவுக்கு தள்ளுபடி விற்பனையை ஆரம்பித்து விடுவார்கள் வியாபாரிகள். தக்காளி முதல் தங்கம் வரை அத்தனையும் இந்தத் தள்ளுபடியில் அடங்கும். ” என்ன புவனா ,இந்த வருசம் ஆடித்தள்ளுபடியில துணிமணிகள் நிறைய வாங்கலாமா ? “ஆமா கெளசல்யா, எந்த வருசமும் இல்லாத அளவுக்கு இந்த வருசம் ஆடித்தள்ளுபடியில அதிகமான ஜவுளிகள் வர்றதா சொல்றாங்க. “ “ம்…ஆடித் தள்ளுபடி விற்பனைன்னு விளம்பரம் போட்ட முதல் தேதியிலேயே நாம போனம்னா, நல்ல நல்ல ஜவுளிகள அள்ளிட்டு […]

Loading

கதைகள் சிறுகதை

சிறுகதை … இனிய பிறந்தநாள் … ஓட்டேரி செல்வ குமார் …

இன்று வசுந்தராவுக்கு ஐந்தாவது பிறந்தநாள் இரவு மணி எட்டு இருக்கும் பிறந்த நாளுக்காக கேக் வெட்டி கொண்டாட வேண்டும் என்று வீட்டில் உள்ளவர்கள் முடிவு செய்து கிருஷ் பேக்கரியில் கேக் ஆர்டர் கொடுத்துவிட்டு வந்து விட்டார்கள் வீட்டை சுற்றிலும் புதிய அலங்காரமாக பொருள்களும் “ஹாப்பி பர்த்டே” என்கின்ற வாசகர்களும் ஆங்காங்கே எழுதப்பட்டு ஒட்டப்பட்டிருந்தது அக்கம் பக்கத்து வீட்டு சிறுவர்களும் சிறுமிகளும் வச்சுவின் அண்ணன் பவன் நண்பர்களும் அங்கே கூடிவிட்டனர் வச்சு தன் பங்கிற்கு பிறந்தநாள் ஆடை அணிந்து […]

Loading

கதைகள் சிறுகதை விழாக்கள்

சிறுகதை … பிரிவு உபச்சார விழா….! … விழா 15 ராஜா செல்லமுத்து

அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிரிவு உபச்சார விழா வெகுவாகக் கொண்டாட ஏற்பாடானது. ஆட்சியர் அலுவலகம் முழுவதும் பலூன், வண்ணக் காகிதங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. ” இன்னைக்கு யாருக்குப் பிரிவு உபச்சார விழா ? ” என்று ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த ஒருவர் கேட்க ” தெரியலையே? யாராவது உயர் அதிகாரி ரிடையர் ஆவாங்க போல, அதான் அலுவலகமே, அலங்காரம் செய்யப்பட்டிருக்கு ” என்று அவரும் பதில் சொல்ல, அலுவலகம் மொத்தமும் அன்று களை கட்டியிருந்தது. அலுவலகத்தின் பிரதான […]

Loading

கதைகள் சிறுகதை

நவராத்திரி விழா ….! – ராஜா செல்லமுத்து

அன்று சுந்தரியின் வீட்டில் நவராத்திரி விழா வெகு சிறப்பாகக் கொண்டாட ஏற்பாடானது.அதுவரையில் இல்லாத அளவிற்கு வீட்டைச் சுத்தம் செய்தாள் சுந்தரி. கொலுப்படிகளில் விதவிதமான கொலுப்பொம்மைகளை அடுக்கி வைத்தாள். ஒரே இடத்தில் அத்தனை பொம்மைகளையும் பார்ப்பதற்கு கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. ஒன்பது நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் துர்க்கையின் ஒன்பது அவதாரங்களைப் பொம்மையின் காட்சிகளாக வைக்க வேண்டும். ஊர் , உறவுகள் நண்பர்களிடம் சொல்லி, இந்த நவராத்திரி விழாவைச் சிறப்பாக கொண்டாட வேண்டும், விழா தொடங்கும் ஒன்பது நாட்களுக்கும் […]

Loading

கதைகள் சிறுகதை விழாக்கள்

பரிசளிப்பு விழா…! – விழா 11 ராஜா செல்லமுத்து

உயர்ந்து வளர்ந்த அந்த ஏற்றுமதி இறக்குமதி நிறுவனத்தில் ஒவ்வொரு வருடமும் பரிசளிப்பு விழா நடத்துவார்கள். அது அந்த நிறுவனத்தின் ஆண்டு விழாவைப் போலவே இருக்கும்.வருடம் முழுவதும் ஓடியாடி வேலை செய்த ஊழியர்களை உற்சாகப்படுத்துவதற்காகச் செய்யப்படும் அந்த விழாவில் நிறுவனத்தில் திறமையாகப் பணிபுரிபவர்கள். உயர் பதவியில் இருப்பவர்கள், பணியாளர்கள், ஓட்டுநர்கள். வெளியில் இருந்து நிறுவனத்திற்கு வேலை செய்யும் ஊழியர்கள் என்று அத்தனை பேரையும் தேர்வு செய்து பரிசளிப்பு விழா நடத்துவார்கள். அந்த நிறுவனத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை […]

Loading