சென்னை, நவ. 24: கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக இன்று த.வெ.க. நிர்வாகிகள் சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். கரூர் வேலுச்சாமிபுரத்தில் செப்டம்பர் 27–ந் தேதி விஜய் பங்கேற்ற தவெக பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். 110 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை நெரிசல் சம்பவம் நடைபெற்றபோது அங்கு ஆம்புலன்ஸுடன் வந்திருந்த வாகன ஓட்டுநர்கள், உரிமையாளர்கள், […]
![]()


