செய்திகள்

டெல்லி – குருகிராம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை

புதுடெல்லி, செப் 27– புதுடெல்லி குருகிராம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று (சனிக்கிழமை) அதிகாலை தடுப்புச் சுவரில் கார் மோதி ஏற்பட்ட விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு, போலீசார் விரைந்தனர். இந்த விபத்தில் 3 பெண்கள் மற்றும் 3 ஆண்கள் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். ஒரு ஆண் படுகாயமடைந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உத்தரபிரதேசத்திலிருந்து குருகிராமுக்கு, ஆறு பேர் காரில் ஏதோ ஒரு வேலைக்காக வந்திருந்த போது அதிகாலை […]

Loading

செய்திகள்

தண்டவாளத்தில் வேன் கவிழ்ந்து விபத்து: காரணம் என்ன? தெற்கு ரெயில்வே விளக்கம்

சென்னை, ஆக. 26– தண்டவாளத்தில் வேன் கவிழ்ந்த விபத்துக்கான காரணம் குறித்து தெற்கு ரெயில்வே சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பகுதியில் இயங்கி வரும் ஒரு தனியார் பள்ளிக்கு, நேற்று வழக்கம் போல் கோ.பவழங்குடி பகுதியை சேர்ந்த 9 மாணவ-மாணவிகள் தனியார் வேனில் பள்ளிக்கூடத்திற்கு புறப்பட்டனர். வேனை விஜயமாநகரத்தை சேர்ந்த சேகர் (வயது 35) என்பவர் ஓட்டிச் சென்றார். காலை 8 மணி அளவில் கோ.பூவனூர் ரெயில்வே கேட் அருகே வேன் சென்றது. அப்போது […]

Loading

செய்திகள்

சாலையோர மரத்தில் கார் மோதி விபத்து: 3 பேர் பலி

விருத்தாசலம், ஆக. 20– விருத்தாசலம் அருகே இன்று அதிகாலை மரத்தின் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் பலியானார்கள். கடலூர் மாவட்டம், விருத்தாசலம் ஒன்றியம் எருமனூர் கிராமத்தை சேர்ந்த ஐயப்பன், ஆதினேஷ், வேலு, வெங்கடேசன், கௌதம், நடராஜ் ஆகிய 6 இளைஞர்களும் காரில் வேப்பூர் நோக்கி சென்றுள்ளனர். கார் விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லூர் அருகே சென்றுகொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், காரில் பயணித்த எருமனூர் […]

Loading

செய்திகள்

தாம்பரம் அருகே ‘பைக் – டாக்சி’ மீது கார் மோதி விபத்தில் மேலும் ஒருவர் பலி

சென்னை, ஆக. 18– தாம்பரம் அருகே இன்று அதிகாலை ‘பைக் – டாக்சி’ மீது கார் மோதிய விபத்தில் மேலும் ஒருவர் பலியானார். இதனால் பலி எண்ணிக்கை 2ஆக உயர்ந்தது. திருவள்ளூர் மாவட்டம், அத்திப்பட்டு, சீனிவாசா நகரைச் சேர்ந்தவர் பால்ராஜ் (வயது 48). இவர், ரேபிடோ நிறுவனத்தில் ‘பைக் – டாக்சி’ ஓட்டி வருகிறார். நேற்று அதிகாலை 2.40 மணியளவில் பால்ராஜ் தனது மோட்டார்சைக்கிளில் சென்னை கிழக்கு தாம்பரத்தில் இருந்து திருப்பூர் மாவட்டம், தசாவர் நாயக்கர்பட்டியைச் சேர்ந்த […]

Loading

செய்திகள்

மதுரையிலிருந்து பெங்களூரு சென்ற ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து: 30 பேர் காயம்

கிருஷ்ணகிரி, ஆக. 19– கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே இன்று அதிகாலை ஆம்னி பஸ் கவிழ்ந்த விபத்தில் 30க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். மதுரையிலிருந்து நேற்றிரவு கர்நாடக மாநிலம் பெங்களூர் நோக்கி 46 பயணிகளுடன் எஸ்.பி.எஸ்., என்ற தனியார் ஆம்னி பஸ் சென்றது. தருமபுரி அதியமான் கோட்டை முதல் கர்நாடக மாநிலம் நெரலூர் வரை புதிதாக அமைக்கப்படும் தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை சென்று கொண்டிருந்த போது கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே கருக்கனஹள்ளி பகுதியில் அந்த […]

Loading

செய்திகள்

திருமங்கலத்தில் கார் மோதியதில் பைக்கில் சென்ற மாணவர் பலி

சென்னை, ஜூலை 29– திருமங்கலத்தில் கார் மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற கல்லூரி மாணவர் பலியானார். அயனாவரத்தைச் சேர்ந்த அபிஷேக் (20), நித்தின் சாய் (19) ஆகியோர் தனியார் கல்லூரியில் படித்து வருகின்றனர். இவர்கள் 2 பேரும் இன்று மோட்டார் சைக்கிளில் சென்னை திருமங்கலம் பகுதியில் சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை அபிஷேக் ஓட்டியுள்ளார். பின்னால் நித்தின் சாய் அமர்ந்திருந்தார். அவர்கள் 2 பேரும் திருமங்கலம் பகுதியில் வந்த போது, மோட்டார் சைக்கிள் மீது கார் ஒன்று […]

Loading

செய்திகள்

கன்னியாகுமரியில் அரசு பஸ் – மோட்டார் சைக்கிள்

கன்னியாகுமரி, ஜூலை 26– கன்னியாகுமரியில் அரசு பஸ், மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பள்ளி மாணவர்கள் 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.கன்னியாகுமரி மாவட்டம் தேங்காப்பட்டணம் பகுதியை சேர்ந்த சிறுவர்கள் அப்சல் (வயது 17), அஜ்மல் (வயது 16), நாசில் (வயது 15), அஜித் (வயது 17). இதில் அஜ்மல் பிளஸ் 2, நாசில் பிளஸ் 1 படித்து வந்தனர். இவர்கள் 4 பேரும் நண்பர்கள் ஆவர். இந்நிலையில் குழித்துறையில் நடைபெற்று வரும் […]

Loading

செய்திகள்

பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி 2 பெண்கள் பலி

தொண்டி, ஜூலை 24– தொண்டி அருகே இன்று அதிகாலை பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 2 பெண்கள் பலியானார்கள். ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே மிகவும் பிரசித்தி பெற்ற தலமான வல்மீக நாதர் சமேத பாகம்பிரியாள் அம்மன் கோவிலுக்கும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் கிழக்கு கடற்கரை சாலை வழியாக நடைபயணமாக வருகிறார்கள். அந்த வகையில் ராமநாதபுரம் எம்.எஸ்.கே. நகர் பகுதியைச் சேர்ந்த 18 பெண்கள் ஒரு குழுவாக வந்து […]

Loading

செய்திகள்

கள்ளக்குறிச்சியில் கார் டயர் வெடித்து விபத்து: ஒரே குடும்பத்தின் 4 பேர் பலி

கள்ளக்குறிச்சி, ஜூலை 20– கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அருகே அன்று நடந்த பயங்கர கார் விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருக்கோவிலூர்-விழுப்புரம் நெடுஞ்சாலையில், மணலூர்பேட்டை அருகே சென்று கொண்டிருந்த கார், டயர் வெடித்ததால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 4 பேர் பலி இந்த கோர விபத்தில், காரில் பயணித்தவர்களில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், மேலும் 5 பேர் படுகாயம் […]

Loading