செய்திகள்

சட்டசபையில் அண்ணா தி.மு.க. பங்கேற்கவில்லை

சென்னை, ஜன. 24– சட்டசபையில் இன்று கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான முதலமைச்சரின் பதிலுரையில் அண்ணா தி.மு.க. உறுப்பினர்கள் யாரும் பங்கேற்கவில்லை. இன்று காலை 9.30 மணிக்கு சபை கூடியது. மதிப்பீட்டுக் குழுவின் அறிக்கையை அதன் தலைவர் எஸ். காந்திராஜன் சமர்ப்பித்தார். அதே போல் அரசு உறுதிமொழிக் குழுவின் அறிக்கையை அதன் தலைவர் தி.வேல்முருகன் சமர்ப்பித்தார். பின்னர் அரசினர் சட்டமுன் வடிவுகள் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து கவர்னரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் […]

Loading

செய்திகள்

தி.மு.க எம்.எல்.ஏ. பொன்னுசாமி, ஏ.வி.எம். சரவணன் உள்ளிட்டோருக்கு இரங்கல் சட்டசபை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

சென்னை, ஜன. 21– சேந்தமங்கலம் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ. பொன்னுசாமி, ஏ.வி.எம். சரவணன் மறைவுக்கு சட்டசபையில் இரங்கல் தீர்மானம் கொண்டுவரப்பட்டு சட்டசபை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. தமிழக சட்டசபையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் கவர்னர் உரையுடன் நேற்று தொடங்கியது. ஆனால், தமிழ்த்தாய் வாழ்த்தை தொடர்ந்து தேசிய கீதம் பாடப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டி, தனது உரையை புறக்கணித்து கவர்னர் ஆர்.என்.ரவி வெளியேறினார். அதனைத் தொடர்ந்து, கவர்னர் உரையை சபாநாயகர் மு. அப்பாவு தமிழில் வாசித்தார். அந்த உரை […]

Loading

செய்திகள்

சட்டசபையில் உரையாற்றாதது ஏன்? கவர்னர் மாளிகை விளக்கம்

சென்னை, ஜன. 20: பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல்கள் அதிகரித்துள்ளது, ஒரே ஆண்டில் சுமார் 20,000 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தமிழக சட்டசபையில் உரையாற்றாமல் கவர்னர் ஆர்.என். ரவி வெளிநடப்பு செய்தது குறித்து விளக்கம் அளித்து கவர்னர் மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது. சட்டசபையில் அரசு தயாரித்த உரையை கவர்னர் வாசிக்க மறுத்ததற்கான காரணங்கள் குறித்து விளக்கம் அளித்து கவர்னர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:– ஆளுநரின் ஒலிவாங்கி (மைக்) மீண்டும், மீண்டும் அணைக்கப்பட்டது மற்றும் அவர் […]

Loading

செய்திகள்

தமிழக சட்டசபை நாளை கூடுகிறது: கவர்னர் முழுமையாக உரை நிகழ்த்துவாரா?

சென்னை, ஜன. 19– அரசியல் பரபரப்புக்கு இடையில் தமிழக சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் நாளை கவர்னர் உரையுடன் தொடங்கும் நிலையில் கவர்னர் உரை நிகழ்த்துவாரா? என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் கவர்னர் உரையுடன் தொடங்குவது மரபாக இருந்து வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம் நாளை (செவ்வாய்கிழமை) காலை 9.30 மணிக்கு கூட இருக்கிறது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் – மே […]

Loading

செய்திகள்

கரூர் கூட்ட நெரிசலில் பலியான 41 பேருக்கு அஞ்சலி; இரங்கல் தீர்மானம்

சென்னை, அக்.14– தமிழக சட்டசபை இன்று காலை 9.30 மணிக்கு கூடியது. கரூர் சம்பவத்தில் பலியான 41 பேரின் குடும்பத்துக்கு சட்டசபையில் இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.கூட்டம் தொடங்கியதும் சபாநாயகர் அப்பாவு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் 8 பேர் மறைவு குறித்து இரங்கல் குறிப்புகளை வாசித்தார். மறைந்த சட்டமன்ற உறுப்பினர்களான புரட்சி மணி, குணசேகரன், கோவிந்தசாமி, அமர்நாத், […]

Loading