திருச்செந்தூர், செப். 23– குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இந்தியாவில் கா்நாடக மாநிலம் மைசூர் சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலுக்கு அடுத்ததாக தமிழகத்தில் உலக பிரசித்தி பெற்ற தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன்கோவில் தசரா பெருந் திருவிழா பிரம்மாண்டமாகவும் சிறப்பாகவும் கொண்டாடப்படுகிறது. திருவிழா ஆண்டு தோறும் 11 நாள்கள் நடைபெறும். அதன்படி, குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீஸ்வரா் உடனுறை முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா இன்று தொடங்கி, அக்டோபர் 2–ந் தேதி மகிசாசூரசம்ஹாரத்துடன் நிறைவு பெறுகிறது. […]
![]()


