சென்னை, ஜூலை 22– நடப்புக் கல்வியாண்டில் அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் 574 தற்காலிக கௌரவ விரிவுரையாளர்கள் பணியமர்த்தப்பட உள்ளனர் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்தார். சென்னை ராணி மேரி கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அமைச்சர் கோவி. செழியன், அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் தற்காலிக அடிப்படையில் நிரப்பபடவுள்ள 574 கௌரவ விரிவுரையாளர்கள் நியமனத்திற்கான விண்ணப்ப பதிவு இணையதளத்தினை தொடங்கி வைத்தார். இதுகுறித்து அமைச்சர் கோவி. செழியன் […]
![]()


