செய்திகள்

கறிக்கோழி பண்ணை விவசாயிகளை கைது செய்வதா: ஓபிஎஸ் கண்டனம்

சென்னை, ஜன. 19: கறிக்கோழி பண்ணை விவசாயிகளை கைது செய்துள்ள தி.மு.க. அரசுக்கு ஓ. பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் தர்மபுரி, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், திண்டுக்கல், விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட கறிக்கோழிப் பண்ணைகள் பெரிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு கோழி வளர்ப்புத் தொழிலை மேற்கொண்டு வருகின்ற நிலையில், கூலி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த […]

Loading

செய்திகள்

கோரிக்கைகளை நிறைவேற்றாமல் கறிக்கோழி பண்ணை விவசாயிகளை கைது செய்வதா? எடப்பாடி கண்டனம்

சென்னை, ஜன.17– கறிக்கோழி பண்ணை விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றாமல், அவர்களை கைது செய்வதா? என தி.மு.க. அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– தமிழ்நாடு முழுவதும் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணை விவசாயிகளும், 5 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் கறிக்கோழி வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டு, கறிக்கோழி விற்கும் நிறுவனங்களுடன் ஒப்பந்த அடிப்படையில் கூலிக்கு கோழி வளர்ப்பு தொழில் செய்து […]

Loading

செய்திகள்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறை

சென்னை, ஜன. 10: பெருங்குடி பகுதியில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் குற்றவாளிக்கு 7 வருடங்கள் சிறை தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. 2024ம் ஆண்டு, பெருங்குடி பகுதியில் வசித்து வந்த 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தொடர்பாக தரமணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், போக்சோ சட்டப்பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, 44 வயது நபர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டார். இவ்வழக்கு தொடர்பாக, […]

Loading

செய்திகள்

சென்னை அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது

சென்னை, ஜன. 5: வெனிசுலா அதிபர் கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கைது செய்யப்பட்டனர். வெனிசுலாவின் தலைநகர் கராகஸ் நகரில் நேற்று முன்தினம் அதிகாலை 2 மணியளவில் சுமார் 7 இடங்களில் அமெரிக்க ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலை தொடர்ந்து வெனிசுலாவில் அவசர நிலை பிரகடனம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, வெனிசுலா நாட்டின் அதிபரும், அவரது மனைவியும் நாடு கடத்தப்பட்டதாக […]

Loading

செய்திகள்

டெல்லி கலவரம்: உமர் காலித், ஷர்ஜீல் இமாமுக்கு சுப்ரீம் கோர்ட் ஜாமீன் மறுப்பு

புதுடெல்லி, ஜன. 5: டெல்லி கலவர வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள உமா் காலித், ஷா்ஜீல் இமாமுக்கு ஜாமீன் வழங்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் குல்பிஷா பாத்திமா, மீரான் ஹைதர், ஷிபா உர் ரஹ்மான், முகமது சலீம் கான் மற்றும் ஷதாப் அகமது ஆகியோருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. வடகிழக்கு டெல்லியில் கடந்த 2020ம் ஆண்டு பிப்ரவரியில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு (சிஏஏ) எதிா்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டங்கள், வன்முறையாக மாறி நாடு முழுவதும் […]

Loading

செய்திகள்

வெனிசுவேலாவுடன் இணைந்து பணியாற்ற அமெரிக்காவுக்கு இடைக்கால அதிபர் அழைப்பு

கராகஸ், ஜன. 5: வெனிசுவேலாவுடன் இணைந்து பணியாற்ற அமெரிக்காவுக்கு அந்நாட்டின் இடைக்கால அதிபராக பொறுப்பேற்றுள்ள டெல்சி ரோட்ரிகஸ் அழைப்பு விடுத்துள்ளார். வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை அமெரிக்க படைகள் கைது செய்தது. தொடர்ந்து அவர்கள் அமெரிக்காவுக்கு நாடுகடத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, வெனிசுவேலாவின் இடைக்கால அதிபராக டெல்சி ரோட்ரிகஸை நியமித்து அந்நாட்டு உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், அரசின் உயர்நிலை அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புத் துறை அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை […]

Loading

செய்திகள்

திருப்பரங்குன்றத்தில் மறியலில் ஈடுபட்ட 62 பேர் மீது வழக்கு

மதுரை, டிச. 22: திருப்பரங்குன்றத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர், பொதுமக்கள் உள்பட 62 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்கா சந்தனக்கூடு விழாவை முன்னிட்டு மலை மீது உள்ள சிக்கந்தர் தர்காவில் நேற்று கொடியேற்ற இஸ்லாமியர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதனைக் கண்டித்து மலை அடிவாரத்தில் உள்ள பழனி ஆண்டவர் கோயில் தெரு குடியிருப்பு வாசிகள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு திருநகரில் உள்ள தனியார் […]

Loading

செய்திகள்

அம்பத்தூரில் கஞ்சா கடத்தல் பெண் உள்பட 3 பேர் கைது

சென்னை, டிச. 16: அம்பத்தூரில் கஞ்சாவை கடத்தி வந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். தமிழ்நாடு அரசின் போதையில்லா தமிழ்நாடு என்ற கோட்பாட்டை வலியுறுத்தி ஆவடி காவல் ஆணையர் சங்கர் உத்தரவின் பேரில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களுக்கு எதிரான நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக அம்பத்தூர் எஸ்டேட் காவல் உதவி ஆய்வாளருக்கு கஞ்சா விற்பனை தொடர்பாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில் அம்பத்தூர் எஸ்டேட், கருக்கு வாகன சோதனை சாவடியில் போலீசார் வாகன சோதனை நடத்தினர். […]

Loading

செய்திகள்

சிதம்பரத்தில் கஞ்சா வியாபாரியை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த போலீசார்

சிதம்பரம், நவ. 23: சிதம்பரத்தில் பிரபல கஞ்சா வியாபாரியை காவல் துறையினர் இன்று துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர்.கடலூர் மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார். கஞ்சா வியாபாரிகளை கைது செய்ய தனிப்படை அமைத்து அவர்கள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். நேற்று முன்தினம் இரவு கடலூர் ஆல்பேட்டை சோதனை சாவடியில் அரசு பஸ்சில் கஞ்சா கடத்தி வந்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 4 கிலோ கஞ்சா […]

Loading

செய்திகள்

அண்ணாமலை பெயரை சொல்லி ரூ. 10 லட்சம் மோசடி: பாஜக நிர்வாகிகள் 3 பேர் கைது

கோயம்புத்தூர், அக். 6– தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பெயரைச் சொல்லி ரூ. 10 லட்சம் மோசடி செய்த பா.ஜ.க. நிர்வாகிகள் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கோவை மாவட்டம் அன்னூர் அடுத்த குமாரபாளையம் பகுதியைச் சேர்ந்தவர்கள் நாகராஜ் -– நாகமணி தம்பதியினர். இவர்களது மூத்த மகன் திருமூர்த்தி கடந்த 2023 ஆம் ஆண்டு சாலை விபத்தில் உயிரிழந்தார். இது தொடர்பான வழக்கு நடைபெற்று, ரூ.50 லட்சம் இழப்பீடு நீதிமன்றம் மூலம் பெறப்பட்டுள்ளது. இந்த […]

Loading