செய்திகள்

சென்னையில் பெண்களின் பாதுகாப்புக்காக 80 இளஞ்சிவப்பு ரோந்து வாகனங்கள் : முதல்வர் ஸ்டாலின் கொடி அசைத்து துவக்கினார்

சென்னை, நவ. 11– முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று தலைமைச் செயலகத்தில், காவல்துறை சார்பில் பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்காக, மாநகரங்களின் பயன்பாட்டிற்காக 12 கோடி ரூபாய் செலவில் 80 இளஞ்சிவப்பு ரோந்து வாகனங்களின் சேவைகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த இளஞ்சிவப்பு ரோந்து வாகனங்கள், தாம்பரம், ஆவடி, சேலம், கோயம்புத்தூர், திருப்பூர், திருச்சி, திருநெல்வேலி, மதுரை மாநகரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ரோந்து பணி மேற்கொண்டு பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் தனிக்கவனம் செலுத்த ஈடுபடுத்தப்படும். 2025-–2026–ம் ஆண்டு […]

Loading

செய்திகள்

மாதவரத்தில் போதைப் பொருள்: அண்ணன் – தம்பி உள்பட 5 பேர் கைது

சென்னை, ஆக. 23– மாதவரத்தில் போதைப் பொருள் வைத்திருந்து அண்ணன் – தம்பி உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண் உத்தரவின்பேரில், போதை பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு போதைப்பொருட்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு குற்றவாளிகளையும், வலைபின்னல் தொடர்புகளில் உள்ளவர்களையும் கண்டறிந்து கைது செய்து, உரிய நடவடிக்கை எடுத்து வரப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக, போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், தனிப்படையினர் மற்றும் மாதவரம் காவல் […]

Loading

செய்திகள்

சுதந்திர தினத்தை முன்னிட்டு திருச்சி சந்திப்பு ரயில்நிலையத்தில்

திருச்சி, ஆக.12– சுதந்திர தினத்தை முன்னிட்டு திருச்சி சந்திப்பு ரயில்நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாா் மற்றும் இருப்புப் பாதை காவல்நிலையப் போலீஸாா் இணைந்து தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனா். நாடு முழுவதும் வரும் 15-ஆம் தேதி சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் சுதந்திரதினத்தை முன்னிட்டு ரயில்வே பாதுகாப்புப்படை, ரயில்வே காவல்துறை, வெடிகுண்டு தடுப்புப் பிரிவு காவல்துறையினா் இணைந்து தீவிர சோதனை நடத்தி வருகின்றனா். திருச்சி ரயில்வே பாதுகாப்புப் படை […]

Loading

செய்திகள்

மதுரை ஹோலிபேமிலி பள்ளியில் மாநகர போக்குவரத்து காவல் சார்பாக மாணவர்களுக்கு

மதுரை, ஆக.12– தமிழகத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க தமிழகம் முழுவதும் அனைத்து கல்லூரி மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழி மேற்கொள்ளப்பட்டது. அதன் ஒரு பகுதியாக மதுரை மாநகர காவல் துறையின் சார்பாக ஆரப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள ஹோலிபேமிலி தனியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவியர்களுக்கு போதைப்பொருள் எதிர்ப்பு மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வழிமுறைகளை பற்றிய விழிப்புணர்வினை திலகர்திடல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் அ.தங்கமணி வழங்கினார். இதில் […]

Loading

செய்திகள்

திருப்பூரில் சப்-இன்ஸ்பெக்டரை வெட்டிக் கொன்ற தந்தை – 2 மகன்கள்

திருப்பூர், ஆக. 6– திருப்பூர் அருகே சப்-இன்ஸ்பெக்டர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டை அருகே உள்ள குடிமங்கலம் பகுதியில் மடத்துக்குளம் அதிமுக எம்எல்ஏ மகேந்திரனுக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இங்கு திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மூர்த்தி என்பவரும், அவரது மகன்கள் தங்கபாண்டியன், இளைய மகன் மணிகண்டன் என்பவர்களும் குடும்பத்துடன் தங்கி பணியாற்றி வருகின்றனர். மூன்று பேரும் நேற்று இரவு […]

Loading

செய்திகள்

சப்–இன்ஸ்பெக்டரை தாக்க அரிவாளுடன் பாய்ந்த 17 வயது சிறுவன் மீது போலீஸ் துப்பாக்கி சூடு

திருநெல்வேலி, ஜூலை 29– நெல்லை பாப்பாகுடியில் இரு தரப்பு மோதலை தடுக்க சென்ற போலீசாரை அரிவாளால் வெட்ட முயன்றதாக கூறி 17 வயது சிறுவன் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் பாப்பாக்குடியில் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த எஸ்.ஐ., இருதரப்பினர் மோதலை தடுக்க முயற்சித்தார். அப்போது அந்த கும்பலில் இருந்த ஒருவர் எஸ்.ஐ., முருகன் மீது தாக்குதல் நடத்திவிட்டு அவரது வீட்டில் […]

Loading

செய்திகள்

திருநெல்வேலியில் 400 போதை மாத்திரைகளுடன் வாலிபர் கைது

திருநெல்வேலி, ஜூலை 29– திருநெல்வேலியில் 400 போதை மாத்திரைகளுடன் வாலிபர் கைது செய்யப்பட்டார். திருநெல்வேலி மாவட்டம், மூலக்கரைப்பட்டி பகுதியில் போதை மாத்திரைகள் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அரசனார்குளம் பஸ் ஸ்டாப் அருகே சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த அம்பலம், மேற்கு தெருவை சேர்ந்த ஜோசப் (வயது 21) என்பவரை போலீசார் சோதனை செய்து பார்த்தனர். அப்போது அவர் மனித உடலுக்கும், உயிருக்கும் கேடு […]

Loading

செய்திகள்

அஜித்குமார் மரண வழக்கு: ஐகோர்ட் மதுரை கிளையில் விசாரணை அறிக்கை தாக்கல்

மதுரை, ஜூலை 8– கோவில் காவலாளி அஜித்குமார் மரணம் தொடர்பாக விசாரணை நடத்திய மதுரை மாவட்ட நீதிபதி, தனது அறிக்கையை ஐகோர்ட் மதுரைக் கிளையில் இன்று தாக்கல் செய்தார். சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட கோயில் காவலாளி அஜித்குமார், தனிப்படை காவலர்கள் தாக்கியதில் உயிரிழந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் விசாரிக்க ஐகோர்ட் மதுரைக் கிளை உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து 4 நாட்கள் நீதிபதி சுந்தர்லால் […]

Loading

செய்திகள்

சாமானியருக்கு அநீதி இழைக்கும் அறமற்ற துறையாக தமிழக காவல் துறை: விஜய் கண்டனம்

சென்னை, ஜூலை 1– சாமானியருக்கு அநீதி இழைக்கும் அறமற்ற துறையாக தமிழக காவல் துறை செயல்படுவதாக தமிழக வெற்றிக் கழக (த.வெ.க.) தலைவர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் திருபுவனத்தில் கோவில் காவலாளி அஜித்குமார் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு விசாரணையில் தாக்கப்பட்டு மரணமடைந்த விவகாரத்தில் போலீசார் 5 பேர் கைது செய்யப்பட்டு, 15 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இதுகுறித்து விஜய் தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். […]

Loading