செய்திகள்

உத்திரமேரூரில் அண்ணா திமுக சார்பில் துண்டு பிரசுரம் விநிநோயகம்

காஞ்சிபுரம் ஜன. 12– காஞ்சிபுரம் மாவட்டம் அண்ணா திமுக மாவட்ட அம்மா பேரவை சார்பில் உத்திரமேரூர் பஜாரில் தொழில் நிறுவனங்கள் , சிறு கடைகள் , வியாபாரிகள் , பொதுமக்கள் ஆகியோரிடம் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கேயுஎஸ். சோமசுந்தரம் ஏற்பாட்டில் சிறப்பு அழைப்பாளராக காஞ்சிபுரம் மாவட்ட கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் கலந்து கொண்டு கழக அரசின் சாதனைகளை எடுத்துரைத்து 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடியார் தலைமையிலான அதிமுக ஆட்சி அமையும் […]

Loading

செய்திகள்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை

காஞ்சிபுரம் டிச. 24– காஞ்சிபுரம் மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். நினைவு நாளையொட்டி வி.சோமசுந்தரம் தலைமையில் பல்வேறு பகுதியில் எம்.ஜி.ஆர். திருவுருவப்படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம் அண்ணா திமுக சார்பில் எம்ஜிஆரின் 38 வது நினைவு நாளை முன்னிட்டு காஞ்சிபுரம் பகுதிக்கு உட்பட்ட களக்காட்டூர் பகுதியில் ஒன்றிய செயலாளர் களக்காட்டூர் ராஜி ஏற்பாட்டில் , ஓரிக்கை பகுதியில் ஒன்றிய செயலாளர் தும்பவனம் டி ஜீவானந்தம் முன்னிலையில் பகுதி செயலாளர் கோல்டு எம். ரவி , […]

Loading

செய்திகள்

காஞ்சிபுரம் ஸ்ரீ சக்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேகம்

காஞ்சிபுரம், டிச. 16: காஞ்சிபுரம் ராகவேந்திரா நகரில் அமைந்துள்ள ஸ்ரீ சக்தி விநாயகர் கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் செந்தமிழ் முறையில் சிறப்பாக நடைபெற்றது காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே 41வது வார்டு ராகவேந்திரா நகர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ சக்தி விநாயகர் ஆலயம் கடந்த 2003ல் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக தற்போது மிகுந்த பொருட்செலவில் மீண்டும் புனரமைக்கப்பட்டு கணபதி ஓமத்துடன் முதல் கால பூஜை நடைபெற்றது மேலும் காலை […]

Loading

செய்திகள்

காஞ்சிபுரம் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 569 வழக்குகளுக்கு தீர்வு

காஞ்சிபுரம் டிச. 16: தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின் பேரிலும் தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் வழிகாட்டுதலின் படியும் காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய மக்கள் நீதிமன்றத்தை காஞ்சிபுரம் முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி தீப்தி அறிவுநிதி வழிகாட்டுதலின்படி தொழிலாளர் நல நீதிமன்ற நீதிபதி எஸ் சுஜாதா, தலைமையில் வட்ட சட்டப் பணிகள் குழுவின் தலைவர் /முதன்மை சார்பு நீதிபதி கே.எஸ். அருண் சபாபதி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் தலைமை குற்றவியல் நீதித்துறை […]

Loading

செய்திகள்

காஞ்சிபுரத்தில் அண்ணல் லயன்ஸ் சங்கம் துவக்கம்

காஞ்சிபுரம், நவ. 23: பன்னாட்டு லயன்ஸ் சங்கத்திடமிருந்து புதியதாக சாசனம் பெற்ற காஞ்சிபுரம் அண்ணல் லயன்ஸ் சங்கதத்தின் தொடக்க விழா காஞ்சிபுரம் ஹோஸ்ட் லயன்ஸ் சங்கக் கட்டிடத்தில் நடைபெற்றது. துவக்க விழாவில் லயன்ஸ் மாவட்ட ஆளுநர் லயன் என்.டி. பாஸ்கரன் கலந்து கொண்டு புதிய சங்கத்தை துவக்கி வைத்து, புதிய சங்க நிர்வாகிகளிடம் சாசனச் சான்றிதழை வழங்கினார். லயன்ஸ் பன்னாட்டு இயக்குனர் லயன் எஸ்.மகேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மாவட்ட முதல் துணை ஆளுநர் […]

Loading

செய்திகள்

காஞ்சிபுரம் கூட்டுறவு வாரவிழாவில் 1111 மகளிருக்கு நல உதவிகள்: அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்

காஞ்சிபுரம் நவ. 17– காஞ்சிபுரம் செவிலிமேடு தனியார் திருமண மண்டபத்தில் கூட்டுறவு துறை சார்பில் சர்வதேச கூட்டுறவு ஆண்டை முன்னிட்டு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நடப்பு ஆண்டில் “தன்னிறைவு பெற உதவும் கருவிகளாகக் கூட்டுறவுச் சங்கங்கள்” என்ற தலைப்பில் 7 நாள் விழா நடைபெறுகிறது. இவ்விழாவில் 1111 உறுப்பினர்களுக்கு ரூ10.96 கோடி மதிப்பீட்டில் மகளிர் சுய உதவிக்குழுக் கடன், 37 பயனாளிகளுக்கு ரூ.26 லட்சம் மதிப்பீட்டில் கால்நடை […]

Loading

செய்திகள்

காஞ்சிபுரம் அண்ணா பட்டு விற்பனை வளாகம் : ஸ்டாலின் திறந்தார்

சென்னை, நவ. 13– முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று தலைமைச் செயலகத்தில், கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறை சார்பில் காஞ்சிபுரம், வள்ளல் பச்சையப்பன் சாலையில் அமைந்துள்ள காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் அண்ணா பட்டு விற்பனை வளாகத்தை 3 கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டு காணெலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார். காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் 1971-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, தொடர்ச்சியாக லாபகரமாக செயல்பட்டு […]

Loading