கடலூர், ஜன.20– வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் கூடுவெளி அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் அண்ணாமலை பல்கலைகழகத்தில் பயிலும் 1,027 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.1.89 கோடி மதிப்பீட்டிலான மடிக்கணினிகளை வழங்கினார். கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், சட்டமன்ற உறுப்பினர் ம.சிந்தனைச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசியதாவது:– முதலமைச்சர் கல்விக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து பல்வேறு சிறப்புத் திட்டங்களை அறிவித்து அதனை அனைத்து மாணவர்களுக்கும் கொண்டுசேர்க்கும் வகையில் […]
![]()


