செய்திகள்

நெரிசலில் சிக்கி உயிரிழந்த 39 பேரில் 37 பேரின் அடையாளம் தெரிந்தது

கரூர், செப்.28– கரூரில் விஜய் பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 39 பேரில் 37 பேரின் பெயர் விவரங்கள் தெரியவந்துள்ளன. கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் நேற்று இரவு பிரச்சாரம் மேற்கொண்டார். விஜய் பேசி முடித்து புறப்பட்ட பின்னர், கூட்டம் கலைந்து செல்லும்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 50-க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்தனர். அவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த கூட்ட நெரிசல் சம்பவத்தில் 39 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் […]

Loading

செய்திகள்

கரூர் உயிரிழப்பு சம்பவம்: ஜனாதிபதி, பிரதமர், தலைவர்கள் இரங்கல்

சென்னை, செப். 28– தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தேர்தல் பிரசாரத்தில் கூட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் கரூரில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 39 பேர் உயிரிழந்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் துயரச் செய்தி அறிந்து வேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது […]

Loading

கரூரில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு முதல்வர் ஆறுதல்
செய்திகள்

கரூர் சோகம்: உயிரிழந்தவர்களின் குடும்பங்களைச் சந்தித்து ஆறுதல் கூறிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

கரூர், செப். 28 – கரூர் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலையில் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நேரில் சென்று, பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார். இரவோடு இரவாகக் கரூர் பயணம்: நேற்று (சனிக்கிழமை) இரவு சென்னை தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய முதலமைச்சர், பின்னர் திருச்சியில் விமானம் மூலம் வந்து […]

Loading

செய்திகள்

கரூர் த.வெ.க. கூட்டத்தில் பெரும் சோகம்: நெரிசலில் சிக்கி 39 பேர் பலி; பலர் படுகாயம்

கரூர், செப். 28 – கரூர் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) தலைவர் விஜய் கலந்துகொண்ட தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளும் அடங்குவர். 80-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. உயிரிழப்பு விவரம்: தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அளித்த தகவலின்படி, […]

Loading