செய்திகள்

புதுடெல்லி சிபிஐ அலுவலகத்தில் 7 மணி நேர விசாரணை நிறைவடைந்தது: சென்னை திரும்பினார் விஜய்

புதுடெல்லி, ஜன. 13– கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக புதுடெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரான த.வெ.க. தலைவர் விஜய்யிடம் 7 மணி நேர விசாரணை முடிந்த நிலையில் அவர் புதுடெல்லியிலிருந்து சென்னை திரும்பினார். மீண்டும் 19–ந் தேதி ஆஜராக சம்மன் சிபிஐ சார்பில் அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ந் தேதி த.வெ.க. தலைவர் விஜய் கரூருக்கு சென்றார். அங்கு பிரச்சார பஸ்சில் நின்று பேசினார். அப்போது […]

Loading

செய்திகள்

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்; டெல்லி சிபிஐ அலுவலகத்தில் தவெக நிர்வாகிகள் ஆஜர்

புதுடெல்லி, டிச. 29: கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் வழக்கில் விசாரணைக்காக டெல்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் தவெக நிர்வாகிகள் ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமார், மதியழகன் உள்ளிட்டோர் ஆஜர் ஆகினர். கரூர் வேலுச்சாமிபுரத்தில் செப்டம்பர் 27ல் த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்ற கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் இறந்தனர். இச்சம்பவம் தொடர்பாக கரூரில் முகாமிட்டு சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். தவெக நிர்வாகிகள், கரூர் ஆட்சியர், காவல் துறை உயரதிகாரிகள், பலியானவர்களின் குடும்பத்தினா், […]

Loading

செய்திகள்

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்  6வது நாளாக சிபிஐ விசாரணை

கரூர், நவ. 14– கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கில் கூட்ட நெரிசலில் காயம் அடைந்தவர்கள் 7 பேரிடம் இன்று சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். கரூர் மாவட்டம், வேலுச்சாமிபுரத்தில் செப்டம்பர் 27-ஆம் தேதி விஜய் பங்கேற்ற தவெக பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 110 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்ற உத்தரவின்படி சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நெரிசல் சம்பவம் நடைபெற்றபோது அங்கு ஆம்புலன்சுடன் […]

Loading

செய்திகள்

கரூரில் சி.பி.ஐ. அதிகாரிகள் 3வது நாளாக விசாரணை

10 வணிகர்கள் நேரில் ஆஜராகி விளக்கம் கரூர், நவ. 3– கரூரில் சி.பி.ஐ. அதிகாரிகள் 3வது நாளாக தொடர் விசாரணை நடத்தினர். கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக ஐ.பி.எஸ். அதிகாரி பிரவீன்குமார் தலைமையிலான சி.பி.ஐ. அதிகாரிகள் கரூர் தாந்தோணிமலையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் தங்கி விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் நேற்று முன்தினம் இந்த வழக்கு தொடர்பாக வீடியோகிராபர் ராஜசேகரன் உள்பட 4 பேரிடம் விசாரணை நடத்தினர். மேலும் கூட்ட நெரிசல் சம்பவம் நடைபெற்ற […]

Loading

செய்திகள்

‘‘காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார் விஜய்’’: கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தகவல்

கரூர், அக். 28– கரூர் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டோரின் காலில் விழுந்து விஜய் மன்னிப்பு கேட்டதாக விஜய்யை சந்தித்தவர்கள் கூறினர். கரூரில் செப்டம்ர் 27–ந் தேதியில், விஜய் தலைமையில் நடைபெற்ற தவெக பிரசாரக் கூட்டத்தில் சிக்கி 41 பேர் பலியான நிலையில், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நடந்த 3 நாள்கள் பிறகு, பாதிக்கப்பட்டோரை விடியோ அழைப்பில் தொடர்புகொண்ட விஜய், அவர்களை விரைவில் சந்திப்பதாக உறுதியளித்தார். இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டோரை சென்னைக்கு வரவழைத்து, நேற்று மாமல்லாபுரத்தில் […]

Loading

செய்திகள்

தலைமறைவாக இருந்த புஸ்ஸி ஆனந்த் 16 நாட்களுக்கு பின் விஜய்யுடன் சந்திப்பு

சென்னை, அக். 14– கரூர் கூட்ட நெரிசலில் 41 உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து தலைமறைவாக இருந்த புஸ்ஸி ஆனந்த் 16 நாட்களுக்கு பின் த.வெ.க. தலைவர் விஜய்யை சந்தித்து பேசினார். கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த மாதம் 27-ந் தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக பிரசார கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், துணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார், கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் உள்பட சிலர் […]

Loading

செய்திகள்

கரூர் துயர சம்பவம்: உயிரிழந்தோர் குடும்பங்களுடன் வீடியோ காலில் பேசி ஆறுதல் கூறிய விஜய்

கரூர், அக். 7– கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் நேற்று மாலை தவெக தலைவர் விஜய் உயிரிழந்தோரின் குடும்பங்களுடன் வீடியோ காலில் பேசி ஆறுதல் கூறியுள்ளார். தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கடந்த 27-ந்தேதி கரூரில் பிரசாரம் செய்த போது திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக போலீசார் பொதுச்செயலாளர் என்.ஆனந்த், இணைப் பொதுச்செயலாளர் சி.டி.நிர்மல்குமார் […]

Loading

செய்திகள்

கரூர் பலிக்கு நான்கு பக்கமும் தவறுகள் நடந்திருக்கின்றன: ப.சிதம்பரம்

சென்னை, செப். 29– கரூரில் நிகழ்ந்த துயரச் சம்பவத்தில் நான்கு பக்கமும் தவறுகள் நடந்திருக்கின்றன என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில் மத்திய முன்னாள் அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப. சிதம்பரம் இதுதொடர்பாக தனது […]

Loading

செய்திகள்

கரூரில் விஜய் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி சிகிச்சையில் இருந்த பெண் இன்று உயிரிழப்பு

பலியானோர் எண்ணிக்கை 41 ஆக உயர்வு கரூர், செப்.29–- வேலுசாமிபுரத்தை சேர்ந்த சுகுணா என்ற 65 வயது பெண் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். இதனையடுத்து கரூரில் விஜய் பிரச்சார கூட்டத்தில் நெரிசலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது. கரூர் வேலாயுதம்பாளையத்தில் நேற்று முன்தினம் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்து கொண்டு பேசினார். இந்த கூட்டத்தில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் […]

Loading

செய்திகள்

போலீஸ் பாதுகாப்பு குறைபாடுகள் இருந்தது: எடப்பாடி பேட்டி

கரூர், செப்.28– விஜய் கூட்டத்தில் போலீஸ் பாதுகாப்பு குறைபாடு இருந்தது என்று எடப்பாடி கூறினார். கரூரில் த.வெ.க. விஜய் பரப்புரை நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடலுக்கு கரூர் மருத்துவமனையில் அண்ணா திமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை அஞ்சலி செலுத்தினார். இறந்தவர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார். பின்னர் கரூர் அரசு மருத்துவமனைக்குள் சிகிச்சை பெற்று வருபவர்களை எடப்பாடி பழனிசாமி சந்தித்து ஆறுதல் வழங்கினார். இதையடுத்து எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது, ‘’நேற்றைய தினம் கரூரில் […]

Loading