செய்திகள்

கடலூரில் 1,027 மாணவர்களுக்கு மடிக்கணினி: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வழங்கினார்

கடலூர், ஜன.20– வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் கூடுவெளி அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் அண்ணாமலை பல்கலைகழகத்தில் பயிலும் 1,027 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.1.89 கோடி மதிப்பீட்டிலான மடிக்கணினிகளை வழங்கினார். கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், சட்டமன்ற உறுப்பினர் ம.சிந்தனைச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசியதாவது:– முதலமைச்சர் கல்விக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து பல்வேறு சிறப்புத் திட்டங்களை அறிவித்து அதனை அனைத்து மாணவர்களுக்கும் கொண்டுசேர்க்கும் வகையில் […]

Loading

செய்திகள்

கடலூரில் ஜெஇஇ நுழைவுத் தேர்வு பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்: கலெக்டர் வழங்கினார்

கடலூர், ஜன. 19– கடலூர் மஞ்சக்குப்பம் அரசு மாதிரி பள்ளியில் வெற்றிப் பள்ளிகள் திட்டத்தின் கீழ் நடைபெற்ற ஜெஇஇ நுழைவுத் தேர்விற்கான பயிற்சி வகுப்பு முடித்த மாணவ, மாணவிகளுக்கு பயிற்சிக்கான சான்றிதழ்களை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், தமிழ்நாடு மாதிரிப் பள்ளிகள் உறுப்பினர் செயலர் இரா.சுதன் ஆகியோர் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் இரா.சுதன் பேசியதாவது: முதலமைச்சர், மாணவர்களுக்கு ஆரோக்கியமான தொடக்க கல்வியினை வழங்கிடவும், இடைநிற்றலின்றி மாணவர்கள் கல்வி கற்றிடவும், பள்ளிக்கல்வியினை தொடர்ந்து சிறப்பான உயர்கல்வியை மாணவர்கள் பெறுவதற்கும் பல்வேறு […]

Loading

செய்திகள்

கடலூரில் புனரமைக்கப்பட்ட நவீன உடற்பயிற்சி கூடம்: கலெக்டர் சிபி ஆதித்யா திறந்து வைத்தார்

கடலூர், ஜன. 11– கடலூர் அறிஞர் அண்ணா விளையாட்டரங்கில் புனரமைக்கப்பட்ட நவீன உடற்பயிற்சி கூடத்தினை மாவட்ட கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கோ.ஐயப்பன், மாநகராட்சி மேயர் சுந்தரிராஜா, துணைமேயர் பா.தாமரைச்செல்வன் ஆகியோர் முன்னிலையில் திறந்து வைத்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவிற்கிணங்க இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் சட்டப்பேரவையில், “அனைத்து மாவட்ட விளையாட்டு வளாகங்களில் உள்ள உடற்பயிற்சிக்கூடங்கள் குளிர்சாதன வசதிகளுடன் […]

Loading

செய்திகள்

கடலூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் காலை உணவுத் திட்டச் செயல்பாடுகள்: கலெக்டர் ஆய்வு

கடலூர், ஜன. 6: கடலூர் மாவட்டம் திருவந்திபுரம், கடலூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் காலை உணவு திட்டம் குறித்து கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது: முதலமைச்சர் தமிழக மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து, அவற்றை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக கல்விக்கு முக்கியத்துவம் அளித்து இன்றைய குழந்தைகள்தான் நாளைய எதிர்கால சமுதாயம் என்பதை அறிந்து, அவர்களுக்கு கல்வி அளிக்கவும், பசியின்றி கல்வி பயிலவும், தொடக்கப்பள்ளிகளில் காலை […]

Loading

செய்திகள்

கடலூரில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம்: கலெக்டர் சிபி ஆதித்யா துவக்கி வைத்தார்

கடலூர், டிச.29– கடலூர் வட்டம், நத்தப்பட்டு கிராமத்தில் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் எட்டாவது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாமினை இன்று மாவட்ட கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு பசுந்தீவனம் தாதுஉப்புக் கலவையை வழங்கினார். பின்னர் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்ததாவது:– கடலூர் மாவட்டத்தில் தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் 3 லட்சம் பசு மற்றும் எருமை இனங்களுக்கு […]

Loading

செய்திகள்

கடலூர் மாவட்டத்தில் நடப்பு ஆண்டு கடன் திறன் மதிப்பீட்டு அறிக்கை: கலெக்டர் சிபி ஆதித்யா வெளியிட்டார்

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நபார்டு வங்கியின் மூலம் 2025–-26 நிதியாண்டில் கடலூர் மாவட்டத்திற்கான ரூ.27,434.05 கோடி கடன் திறன் மதிப்பீட்டு அறிக்கையினை மாவட்ட கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் வெளியிட்டார். கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்ததாவது, 2026–-27 நிதியாண்டிற்கான கடலூர் மாவட்டத்திற்கானகடன் திறன் மதிப்பீட்டு ஆவணத்தை தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கி (நபார்டு) கணித்து வெளியிட்டுள்ளது. இது நடப்பு ஆண்டின் ஆண்டு கடன் திட்டத்துடன் (ACP) ஒப்பிடும்போது 18% அதிகரிப்பாகும். […]

Loading

செய்திகள்

63 பேருக்கு ரூ.2.53 கோடி வங்கி கடன் கடலூர் கலெக்டர் சிபி ஆதித்யா வழங்கினார்

கடலூர், டிச. 24– கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்டத் தொழில் மையம், கடலூர், முன்னோடி வங்கி மற்றும் இதர வங்கிகளுடன் இணைந்து நடத்திய மாபெரும் தொழிற் கடன் வழங்கும் கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் 63 நபர்களுக்கு ரூ.2.53 கோடி மதிப்பீட்டிலான வங்கி கடன் ஒப்பளிப்பு ஆணைகளை வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது: குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் கீழ் இயங்கும் மாவட்டத் தொழில் மையம் மற்றும் […]

Loading

செய்திகள்

கடலூரில் மரக்கன்றுகள் நடும் திட்டம்: கலெக்டர் சிபி ஆதித்யா தொடங்கி வைத்தார்

கடலூர், டிச. 20– கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட அளவிலான மரக்கன்றுகள் நடும் திட்டத்தின் ஒரு பகுதியாக பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் சார்பில் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், பசுமை பரப்பளவினை அதிகரிக்கும் வகையில் மரக்கன்றுகளை நடவு செய்யும் பணியினை தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது: முதலமைச்சர் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை குறைத்திடவும், எதிர்வரும் காலங்களில் காலநிலையினை சீராக்கிடும் பொருட்டு பல்வேறு முன்னெடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பசுமை தமிழ்நாடு மிஷன், […]

Loading

செய்திகள்

கடலூரில் 157 மீனவர்களுக்கு உயிர் காப்பு சட்டைகள் கலெக்டர் வழங்கினார்

கடலூர், டிச. 16: கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டரங்கில் இயந்திரம் பொருத்தப்பட்ட நாட்டுப்படகுகளுக்கு 75 விழுக்காடு மானியம் வழங்கும் திட்டத்தில் 157 மீனவ பயனாளிகளுக்கு தலா 2 எண்ணம் வீதம் 314 எண்ணங்கள் ரூ.7,76,208 மதிப்பீட்டிலான உயிர் காப்பு சட்டைகள் வழங்கும் பணியினை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது: 2023–-24ஆம் ஆண்டு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மானியக் கோரிக்கையின் போது மீன்வளம் மற்றும் மீனவர் […]

Loading

செய்திகள்

கடலூரில் கைவினைப் பொருட்கள்சிறப்பு விற்பனை கண்காட்சி கலெக்டர் சிபி ஆதித்யா துவக்கினார்

கடலூர், டிச. 8– தேசிய கைவினைப் பொருட்கள் வார விழாவினை முன்னிட்டு கடலூர், திருப்பாப்புலியூரில் உள்ள பூம்புகார் விற்பனை நிலையத்தில் கைவினைப் பொருட்கள் சிறப்பு விற்பனை மற்றும் கண்காட்சியினை மாவட்ட கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் இன்று துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவிக்கையில், கைவினைஞர்களின் பொருட்களுக்கு சந்தை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கத்தில் தமிழ்நாடு, புதுடெல்லி, கொல்கத்தா உட்பட 13 விற்பனை நிலையங்களை நடத்தி வருவதோடு, கூடுதல் சந்தை வாய்ப்பாக இந்தியா […]

Loading