செய்திகள்

‘குட் பேட் அக்லி’ படத்தில் இளையாராஜா பாடல்: தடையை நீக்க ஐகோர்ட் மறுப்பு

சென்னை, டிச. 3– ‘குட் பேட் அக்லி’ பட நிறுவனம் மைத்திரி மூவி மேக்கர்ஸ் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி திரைப்படத்தில், தன் அனுமதியில்லாமல், இளமை இதோ இதோ, ஒத்த ரூபாயும் தாரேன், என் ஜோடி மஞ்ச குருவி ஆகிய பாடல்களை பயன்படுத்தி உள்ளதாக கூறி, இசையமைப்பாளர் இளையராஜா சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட், ‘குட் பேட் […]

Loading

செய்திகள்

இளையராஜாவின் புகைப்படத்தை பயன்படுத்த இடைக்கால தடை: ஐகோர்ட் உத்தரவு

சென்னை, நவ. 21– இசையமைப்பாளர் இளையராஜாவின் புகைப்படத்தை, வணிக நோக்கத்துடன் பயன்படுத்த சமூக வலைத்தளங்களுக்குத் தடை விதித்து சென்னை ஐகோர்ட் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. தன்னை அடையாளப்படுத்தும் வகையில் தனது புகைப்படம், பெயர், இசைஞானி என்ற பட்டப் பெயர், குரல் என எதையும் பயன்படுத்தக் கூடாது எனவும், சமூக வலைதளங்களில் ஏற்கனவே பதிவிடப்பட்ட புகைப்படங்களை நீக்க வேண்டும். அனுமதியின்றி தனது புகைப்படத்தை பயன்படுத்தியதன் மூலம் கிடைத்த வருமான விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என யூடியூப் […]

Loading

செய்திகள்

தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டிய மனைவியிடம் இருந்து கணவருக்கு விவாகரத்து

மும்பை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு மும்பை, நவ.20- தற்கொலை செய்துவிடுவதாக அடிக்கடி மிரட்டிய மனைவியிடம் இருந்து கணவருக்கு விவாகரத்து வழங்கி மும்பை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு அளித்தது. குடும்ப நலக்கோர்ட்டில் மனைவி யிடம் இருந்து விவாகரத்து கேட்ட ஒருவரின் மனு நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து அவர் மும்பை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், “நான் கடந்த 2006-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டேன். ஆனால் கருத்து முரண்பாடு காரணமாக 2012-ம் ஆண்டு முதல் நானும், எனது […]

Loading

செய்திகள்

அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள், பேரணிகளுக்கு விதிகளை வகுக்க 10 நாள் அவகாசம்

தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு சென்னை, அக். 27– அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள் மற்றும் பேரணிகளை நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க தமிழக அரசுக்கு 10 நாள் அவகாசம் வழங்கி சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கரூர் வேலுச்சாமிபுரத்தில் செப்டம்பர் 27–ந் தேதி தவெக பிரசார கூட்டத்தில், அதன் தலைவர் விஜய் பேசியபோது, நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானார்கள். மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் குறுகிய தெருக்கள், குடியிருப்புகள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள், […]

Loading

செய்திகள்

கிட்னி முறைகேடு வழக்கு; தமிழக அரசு கோரிக்கையை சுப்ரீம் கோர்ட் ஏற்க மறுப்பு

புதுடில்லி, அக். 10– கிட்னி முறைகேடு தொடர்பான வழக்கில், தமிழக அரசின் கோரிக்கையை சுப்ரீம் கோர்ட் நிராகரித்தது. ஐகோர்ட் மதுரைக்கிளை பிறப்பித்த உத்தரவில் தலையிட விரும்பவில்லை என சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தெரிவித்தனர். நாமக்கல் மாவட்டத்தில் ஏழை தொழிலாளர்களை புரோக்கர்கள் மூளைச்சலவை செய்து, சட்டவிரோதமாக சிறுநீரகத்தை தானம் பெற்றனர். திருச்சி, பெரம்பலுாரில் இரு தனியார் மருத்துவமனைகள் இதில் ஈடுபட்டன. ஆளுங்கட்சி பிரமுகருக்கு சொந்தமான மருத்துவமனை என்பதால், தமிழக அரசு முறையாக விசாரிக்க வாய்ப்பில்லை. வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்ற […]

Loading

செய்திகள்

அமைச்​சர் கே.என்​.நேரு​வின் சகோ​தரர் ரவிச்​சந்​திரன் மீதான அமலாக்​கத்​துறை வழக்கு ரத்து

பறிமுதல் செய்த பொருட்களை ஒப்படைக்க ஐகோர்ட் உத்தரவு சென்னை, ஜூலை 25– அமைச்​சர் கே.என்​.நேரு​வின் சகோ​தரர் ரவிச்​சந்​திரன் மீது அமலாக்​கத்​துறை பதிவு செய்​திருந்த வழக்கை ரத்து செய்​துள்ள ஐகோர்ட், பறி​முதல் செய்​யப்​பட்ட பொருட்​களை​யும் திருப்பி ஒப்​படைக்க அமலாக்​கத்​துறைக்கு உத்​தர​விட்​டுள்​ளது. கடந்த 2013-ம் ஆண்டு இந்​தி​யன் ஓவர்​சீஸ் வங்​கி​யிட​மிருந்து பெற்ற ரூ.30 கோடி கடன் தொகையை தனது சகோதர நிறு​வனங்களுக்கு திருப்பி விட்​ட​தால் வங்​கிக்கு ரூ.22.48 கோடி இழப்பு ஏற்​பட்​டுள்​ள​தாகக்​கூறி அமைச்​சர் நேரு​வின் சகோ​தரர் என்.ரவிச்​சந்​திரன் மற்றும் அவர் […]

Loading

செய்திகள்

‘பணிவான சேவகனாக பணியாற்றி நீதித்துறை சுதந்திரத்தை பாதுகாப்பேன்’: ஐகோர்ட் தலைமை நீதிபதி பேச்சு

சென்னை, ஜூலை.23- சென்னை ஐகோர்ட்டின் மரபை உறுதி செய்யும் வகையில், தலைமை நீதிபதியாக அல்லாமல், பணிவான சேவகனாக பணியாற்றி நீதித்துறையின் சுதந்திரத்தை பாதுகாப்பேன் என்று புதிய தலைமை நீதிபதி எம்.எம்.ஶ்ரீவத்சவா உறுதி அளித்து பேசினார். சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக எம்.எம்.ஶ்ரீவத்சவா நேற்று முன்தினம் பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு சென்னை ஐகோர்ட் சார்பில் நேற்று வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த வரவேற்பு நிகழ்ச்சி ஐகோர்ட் வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நடந்தது. அப்போது தலைமை நீதிபதியை வரவேற்று அட்வகேட் ஜெனரல் […]

Loading

செய்திகள்

அஜித்குமார் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

மதுரை, ஜூலை.23- சிவகங்கை அருகே போலீஸ் விசாரணையின் போது அடித்து கொல்லப்பட்ட காவலாளி அஜித்குமார் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோவிலில் காவலாளியாக வேலைபார்த்து வந்தவர் அஜித்குமார் (வயது 29). பேராசிரியை நிகிதா என்பவர் தனது நகை மாயமானதாக அளித்த புகாரின்பேரில் மானாமதுரை தனிப்படை போலீசார் அஜித்குமாரை விசாரணைக்காக அழைத்துச்சென்று அடித்துக்கொலை செய்தனர். இதுதொடர்பாக போலீஸ்காரர்கள் கண்ணன், பிரபு, ஆனந்த், ராஜா, சங்கரமணிகண்டன் ஆகியோர் கைது […]

Loading