செய்திகள்

ஆமதாபாத் விமான விபத்துக்கு பிறகு ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.15 ஆயிரம் கோடி இழப்பு

புதுடெல்லி, ஜன. 23– ஆமதாபாத் விமான விபத்துக்கு பிறகு ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.15 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசுக்கு சொந்தமான விமான நிறுவனமாக ஏர் இந்தியா இருந்தது. கடுமையான நிதிச்சுமை, இழப்பு உள்ளிட்டவற்றை காரணம் காட்டியும் முதலீட்டை விலக்குதல் கொள்கையை பின்பற்றி மத்திய அரசு கடந்த 2021-ம் ஆண்டு ஏர் இந்தியாவை விற்பதாக அறிவித்தது. இந்தியாவின் முன்னணி கோடீஸ்வர நிறுவனங்களான அம்பானி, அதானி, டாடா குழுமம் உள்ளிட்டவை ஏலத்தில் போட்டாபோட்டி போட்டன. […]

Loading

செய்திகள்

மும்பை–லண்டன் ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு: பயணிகள் அவதி

மும்பை, நவ. 8– மும்பையில் இருந்து லண்டன் புறப்பட இருந்த ஏர் இந்தியா விமானத்தில் ‘திடீர்’ தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். மும்பையில் இருந்து இன்று காலை 6.30 மணிக்கு லண்டனுக்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட தயாரானது. கடைசி நேரத்தில் விமானத்தில் ‘திடீர்’ தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்டது. அதை சரி செய்யும் பணியில் தொழில்நுட்ப நிபுணர்கள் ஈடுபட்டு இருக்கின்றனர். இதனால் லண்டனுக்கு செல்ல இருந்த விமானம் புறப்படுவதில் தாமதம் ஆனது. […]

Loading

செய்திகள்

கேரள எம்.பி.க்கள் சென்ற ஏர் இந்தியா விமானம் சென்னையில் அவசரமாக தரையிறங்கியது

சென்னை, ஆக. 11– திடீரென நடுவானில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கேரளாவிலிருந்து டெல்லி செல்ல இருந்த ஏர் இந்தியா விமானம் சென்னையில் அவசரமாக தரையிறங்கியது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து தலைநகர் டெல்லிக்கு திருநெல்வேலி காங்கிரஸ் எம்.பி. ராபர் ப்ரூஸ், கேரள எம்.பி.க்கள் கே.சி.வேணுகோபால், கொடிக்குனில் சுரேஷ், அதூர் பிரகாஷ், கே.ராதாகிருஷ்ணன் உள்பட 150 பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம் நேற்று இரவு புறப்பட்டது. அப்போது நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறை விமானி கண்டறிந்தார். […]

Loading