ஸ்ரீநகர், ஆக. 28– ஜம்மு காஷ்மீர் எல்லையில் ஊடுருவ முயன்ற போது பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகள் 2 பேரை சுட்டுக்கொன்றனர். பந்தீப்பூர் மாவட்டம் குரேஸ் செக்டார் பகுதியில் பயங்கரவாதிகள் ஊடுருவ வாய்ப்பிருப்பதாக தகவல் வந்ததையடுத்து இந்திய ராணுவமும், ஜம்மு – காஷ்மீர் காவல்துறையும் இணைந்து அந்த பகுதியில் தீவிர கண்காணிப்பு மற்றும் தேடுதல் பணியில் நேற்று இரவு முதல் ஈடுபட்டனர்.அப்போது பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதை தொடர்ந்து இந்திய ராணுவ வீரர்கள் பதில் தாக்குதல் […]
![]()


