செய்திகள்

அரசு கலை – அறிவியல் கல்லூரிகளின் ஆய்வகங்களை மேம்படுத்த ரூ.19.18 கோடி நிதி ஒப்பளிப்பு ஆணை அமைச்சர் கோவி. செழியன் வழங்கினார்

சென்னை, ஜன. 22– சென்னை கல்லூரிக் கல்வி இயக்ககத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் 112 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் ஆய்வகங்களை மேம்படுத்துவதற்கு ரூ.19.18 கோடி நிதி ஒப்பளிப்புக்கான ஆணையினை வழங்கினார். இன்று இந்தியாவிலேயே உயர்கல்வியில் மாணவர் சேர்க்கையில் முதலிடத்தில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது. இக்கல்வி ஆண்டின் (2025-–2026), மாணவர் சேர்க்கையில், புதிதாக 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதிய இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அரசு கல்லூரி, அரசு உதவி பெறும் கல்லூரி, […]

Loading

செய்திகள்

கடலூரில் 1,027 மாணவர்களுக்கு மடிக்கணினி: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வழங்கினார்

கடலூர், ஜன.20– வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் கூடுவெளி அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் அண்ணாமலை பல்கலைகழகத்தில் பயிலும் 1,027 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.1.89 கோடி மதிப்பீட்டிலான மடிக்கணினிகளை வழங்கினார். கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், சட்டமன்ற உறுப்பினர் ம.சிந்தனைச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசியதாவது:– முதலமைச்சர் கல்விக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து பல்வேறு சிறப்புத் திட்டங்களை அறிவித்து அதனை அனைத்து மாணவர்களுக்கும் கொண்டுசேர்க்கும் வகையில் […]

Loading

செய்திகள்

12–ம் வகுப்பு துணைத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் நடப்பு கல்வியாண்டிலேயே அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேரலாம்

சென்னை, ஜூலை 29– 12–ம் வகுப்பு பொதுத் தேர்வில் தவறிய மாணவர்களின் உயர்கல்வி கனவை நனவாக்க துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இக்கல்வியாண்டே (2025-–26) இளநிலை பட்டப்படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளதாவது:–- ஏழை, எளிய மாணவர்கள் உயர்கல்வியினை பெறவேண்டும், அனைவருக்கும் சமமான உயர்கல்வி கிடைத்திட வேண்டும் என்பதற்காக, அரசுக்கல்லூரி இல்லாத பகுதிகளில் நடப்பாண்டில் […]

Loading

செய்திகள்

அரசு கலை, அறிவியல், கல்வியியல் கல்லூரிகளில் 574 தற்காலிக கௌரவ விரிவுரையாளர்கள் நியமனம் :

சென்னை, ஜூலை 22– நடப்புக் கல்வியாண்டில் அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் 574 தற்காலிக கௌரவ விரிவுரையாளர்கள் பணியமர்த்தப்பட உள்ளனர் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்தார். சென்னை ராணி மேரி கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அமைச்சர் கோவி. செழியன், அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் தற்காலிக அடிப்படையில் நிரப்பபடவுள்ள 574 கௌரவ விரிவுரையாளர்கள் நியமனத்திற்கான விண்ணப்ப பதிவு இணையதளத்தினை தொடங்கி வைத்தார். இதுகுறித்து அமைச்சர் கோவி. செழியன் […]

Loading