செய்திகள்

ஆன்–லைன் முதலீடு: ஈரோடு விவசாயிடம் ரூ.42 லட்சம் மோசடி

ஈரோடு, ஜன. 7– ஈரோட்டில் விவசாயிடம் ஆன்–லைன் மூலம் ரூ. 42 லட்சம் மோசடி செய்த மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். ஈரோடு மாவட்டம் செம்பூத்தாம்பாளையத்தைச் சேர்ந்த விவசாயி (44 வயது) ஒருவர், வாட்ஸ்அப் மூலம் தன்னை தொடர்பு கொண்ட பெண் ஒருவரின் ஆலோசனையின் பேரில், போலி பங்குச்சந்தை செயலியை பதிவிறக்கம் செய்துள்ளார். அதன் மூலம் தனக்கு பெரும் லாபம் கிடைக்கும் என நம்பி, அவர் சேமித்து வைத்திருந்த ரூ.42.25 லட்சத்தை முதலீடு செய்துள்ளார். […]

Loading

செய்திகள்

ஈரோட்டில் விஜய் பிரச்சாரத்துக்கு 84 கட்டுப்பாடுகள்: செங்கோட்டையன் குற்றச்சாட்டு

ஈரோடு, டிச.10: ஈரோட்டில் விஜய் பிரசாரத்துக்கு 84 நிபந்தனைகள் விதிக்கப்பட்டு உள்ளதால், த.வெ.க. பொதுக்கூட்டத்தை 2 நாட்கள் ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாகவும், இதுவரை இல்லாத கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் செங்கோட்டையன் கூறினார். ஈரோட்டில் த.வெ.க. சார்பில் விஜய் பிரச்சார கூட்டம் வருகிற 16-ந் தேதி நடைபெற இருந்தது. இந்த நிலையில் பிரச்சார கூட்டம் 18-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் ஈரோடு அருகே விஜயமங்கலம் சரளை பகுதியில் நடைபெற உள்ளது. இதற்காக 19 ஏக்கர் பரப்பளவில் இடம் […]

Loading

செய்திகள்

ஈரோடு நாகமலை குன்று உயிரியல் பாரம்பரியத் தளமாக அறிவிப்பு

சென்னை, அக்.9- ஈரோடு மாவட்டத்தில் உள்ள நாகமலை குன்றினை உயிரியல் பாரம்பரியத் தளமாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசின் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் சுப்ரியா சாகு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:- தமிழ்நாடு அரசு, உயிரியல் பன்மை சட்டம் 2002 பிரிவு 37 (1)-ன் கீழ் அரிட்டாபட்டியை 2022-ம் ஆண்டு நவம்பர் மாதமும், கடந்த மார்ச் மாதம் காசம்பட்டியையும், கடந்த மாதம் எலத்தூர் ஏரியையும் பல்லுயிர் பாரம்பரிய தளமாக அறிவித்தது. […]

Loading

செய்திகள்

ஈரோடு அருகே உடல்நிலை பாதிப்பு: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை

ஈரோடு, ஜூலை 27– ஈரோடு மாவட்டம் நஞ்சை ஊத்துக்குளி பகுதியில் உடல்நிலை பாதிப்பால் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், தந்தை, மகள் என மூன்று பேர் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.ஈரோடு மாவட்டம் நஞ்சை ஊத்துக்குளி பகுதியைச் சேர்ந்த நாகேந்திரன் (55) புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரது மனைவி சுஜிதா (45) தைராய்டு நோயால் பாதிக்கப்பட்டும், மகள் தான்ய லட்சுமி (20) மனநலம் பாதிக்கப்பட்டதால் மூன்று பேரும் அவதிப்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், மூன்று […]

Loading

செய்திகள்

ஈரோடு திண்டலில் 186 அடி உயர முருகன் சிலை அமைக்கும் இடம்

சென்னை, ஜூலை 13– முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வழிகாட்டுதலின்படி, வீட்டு வசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் இன்று ஈரோடு மாவட்டம், திண்டல் வேலாயுத சுவாமி திருக்கோயிலில் நடைபெற்று வரும் திருப்பணிகளையும், 2025 – 2026ம் ஆண்டிற்கான சட்டமன்ற அறிவிப்பின்படி ரூ.30 கோடி மதிப்பீட்டில் 186 அடி உயர முருகன் சிலை அமைக்கப்படவுள்ள இடத்தினையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர், அமைச்சர் பி.கே.சேகர்பாபு செய்தியாளர்களிடம் […]

Loading