வேதாரண்யம், ஆக. 18– வேதாரண்யம் அருகே டிராக்டர்களில் மண் அள்ளப்படுவதாக காவல்துறைக்கு புகார் கொடுத்ததாகக் கூறப்படும் விவகாரத்தில், இளைஞர் ஒருவர் மண்வெட்டியால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கையிலவனம்பேட்டை பகுதியில் டிராக்டர்களில் மண் கொள்ளையடித்து செல்லப்படுவதாக யாரோ ஒருவர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக கோயில்தாவு கிராமத்தைச் சேர்ந்த ஜேசிபி இயந்திர உரிமையாளர் குமார் (35) என்பவர், கையிலவனம்பேட்டையில் வசித்து வரும் இம்மானுவேல் என்பவரது வீட்டுக்கு நேற்றிரவு சென்று விசாரித்துள்ளார். […]
![]()


