செய்திகள் முழு தகவல்

கொழும்பு விமான நிலையத்தில் 300 இந்தியர்கள் தவிப்பு

புதுடெல்லி, நவ. 29: வெள்ளம் மற்றும் புயலால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு, மனிதாபிமான அடிப்படையில் உணவு, மருந்து உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை இந்தியா அனுப்பி வைத்துள்ளது. மேலும் 80 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புப் பணியாளர்கள் அங்கு விரைந்துள்ளனர். வங்கக் கடலில் உருவாகியுள்ள டிட்வா புயலால் இலங்கையில் இடியுடன் கூடிய கனமழையும், பலத்த காற்றும் வீசி வருகிறது. கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் […]

Loading

செய்திகள் முழு தகவல்

மணிக்கு 10 கிமீ வேகத்தில் நகர்ந்து தமிழகத்தை நெருங்கும் ‘டிட்வா புயல்’

சென்னை, நவ. 28– ‘டிட்வா புயல்’ மணிக்கு 10 கிமீ வேகத்தில் நகர்ந்து தமிழகத்தை நெருங்குகிறது. 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் தரைக்காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய இலங்கை கடலோரப்பகுதிகளில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நேற்று காலை 11.30 மணியளவில் புயலாக வலுவடைந்து இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்த புயலுக்கு ‘டிட்வா’ […]

Loading

செய்திகள்

வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகும் வாய்ப்பு

சென்னை, நவ. 26: தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கையின் தெற்குப் பகுதியில் ஒரு காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நிலவுகிறது என்றும், இது அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்தகாற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளது என்றும், இதனால் தமிழ்நாட்டின் டெல்டா மற்றும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை ஆகிய கடலோர மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தப் பேரிடரை […]

Loading

செய்திகள்

இலங்கையில் கேபிள் கார் விபத்து: துறவிகள் 7 பேர் பரிதாப பலி

கொழும்பு, செப். 25– இலங்கையில் கேபிள் கார் விபத்தில் ஒரு இந்தியர் உட்பட புத்த மதத்தை சேர்ந்த துறவிகள் 7 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. வடமேற்கு இலங்கையின் வன மடாலயத்தில் கேபிள் கார் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து கொழும்பிலிருந்து 125 கி.மீ தொலைவில் உள்ள நிகவெரட்டியாவில் அமைந்துள்ள புகழ்பெற்ற புத்த மடாலயத்தில் நிகழ்ந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் நீண்ட நேரம் போராடி மீட்பு பணி […]

Loading

செய்திகள்

நாகை மீனவர்களைத் தாக்கிய இலங்கை கடற்கொள்ளையர்கள் மீன்படி வலைகள், ஜிபிஎஸ் கருவியை பறித்தனர்

திருக்குவளை, செப். 12– வேதாரண்யம் அருகே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த நாகை மாவட்டம் செருதூர் மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்கொள்ளையர்கள் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களைக் கொண்டு தாக்கியுள்ளனர்.மேலும், மீனவர்களிடம் இருந்து ரூ. 9 லட்சம் மதிப்பிலான மீன்பிடி உபகரணங்களை பறித்து சென்றுள்ளனர். காயமடைந்த 7 மீனவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த செருதூர் மீனவ கிராமத்திலிருந்து 50 -க்கும் மேற்பட்ட பைபர் படகுகளில் மீனவர்கள் கடந்த 11ம் தேதி மீன்பிடிக்கச் […]

Loading

செய்திகள்

ராமேஸ்வரத்தில் 10-வது நாளாக தொடரும் மீனவர்கள் போராட்டம்

ராமேஸ்வரம், ஆக. 20– ராமேஸ்வரத்தில் மீனவர்கள் 10–வது நாளாக தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் முடிந்து 55 நாட்கள் கடந்த நிலையில் இதுவரை பாக் ஜலசந்தி, மன்னார் வளைகுடா ஆகிய பகுதிகளில் மீன்பிடிக்க சென்ற ராமேசுவரம், பாம்பன் பகுதியை சேர்ந்த மீனவர்கள் 61 பேர் எல்லைதாண்டி வந்ததாக இலங்கை கடற்படையால் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். அவர்களின் விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட் டது.கைதான மீனவர்கள் இலங்கை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வவுனியா […]

Loading

செய்திகள்

80 மீனவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கை: மத்திய அமைச்சருக்கு ஸ்டாலின் கடிதம்

சென்னை, ஆக. 7– ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள், நேற்று (6–ந் தேதி) இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இலங்கைக் காவலில் உள்ள அனைத்து தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுத்திட வேண்டுமென்று வலியுறுத்தி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கருக்கு நேற்று (6–ந் தேதி) கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், இலங்கைக் கடற்படையினரால் 6–ந் தேதி அன்று அதிகாலை 14 இந்திய […]

Loading

செய்திகள்

நெடுந்தீவு அருகே நடுக்கடலில் தமிழக மீனவர்கள் 4 பேர் கைது

இலங்கை கடற்படையினர் தொடர் அட்டூழியம் ராமேஸ்வரம், ஆக. 4– நெடுந்தீவு அருகே நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது 4 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவதும், அவர்களின் படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவதுமான சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது. இதன் காரணமாக மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படும் நிலை வருகிறது. இந்நிலையில் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 4 மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன் […]

Loading

செய்திகள்

ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேரை கைது செய்த இலங்கை கடற்படை

ராமேஸ்வரம், ஜூலை 31– நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது தொடர் கதையாகி வருகிறது. இந்த நிலையில், எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து நாட்டு படகில் மீன்பிடிக்க சென்ற 9 பேரை எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது […]

Loading