செய்திகள்

சென்னை தீவுத்திடலில் அரசு பொருட்காட்சி துவக்கம் அமைச்சர்கள் ராஜேந்திரன், மா.சுப்பிரமணியன் துவக்கி வைத்தனர்

சென்னை, ஜன.13- சென்னை தீவுத்திடலில் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுடன் அரசு பொருட்காட்சி நேற்று தொடங்கியது. இந்த பொருட்காட்சி 70 நாட்கள் வரை நடைபெற உள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி தமிழக அரசின் சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் சென்னை தீவுத்திடலில் சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி நடத்துப்படுவது வழக்கம். முதல் பொருட்காட்சி கருணாநிதியால் 1974-–ம் ஆண்டு நடைபெற்றது. தற்போது 50-வது ஆண்டில் இந்த பொருட்காட்சி அடியெடுத்து வைத்துள்ளது. பொன்விழா பொருட்காட்சியை அமைச்சர்கள் இரா.ராஜேந்திரன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு ஆகியோர் நேற்று […]

Loading

செய்திகள்

புதுடெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்: அதிகாரிகள் கிடுக்குப்பிடி விசாரணை

புதுடெல்லி, ஜன. 12– கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக புதுடெல்லி சிபிஐ அலுவலகத்தில் த.வெ.க. தலைவர் விஜய் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். த.வெ.க. தலைவர் விஜய் கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ந்தேதி அன்று கரூரில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டு மேற்பார்வையில் சிபிஐ விசாரித்து வருகிறது. கரூர் கலெக்டர் அலுவலக […]

Loading

செய்திகள்

திருச்சியில் சிறுமி பாலியல் வன்கொடுமை: நயினார் நாகேந்திரன் கண்டனம்

திருச்சி, ஜன. 12– திருச்சியில் 17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். திருச்சியைச் சேர்ந்த 15 வயது சிறுமிக்கு கடந்த 2023 ஜூன் 14-ஆம் தேதி புத்தூர் பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து, பச்சிளம் குழந்தையை மருத்துவமனையிலேயே விட்டுவிட்டு சிறுமியின் தாய் அவரை வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். இதுகுறித்து தனியார் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து […]

Loading

செய்திகள்

உத்திரமேரூரில் அண்ணா திமுக சார்பில் துண்டு பிரசுரம் விநிநோயகம்

காஞ்சிபுரம் ஜன. 12– காஞ்சிபுரம் மாவட்டம் அண்ணா திமுக மாவட்ட அம்மா பேரவை சார்பில் உத்திரமேரூர் பஜாரில் தொழில் நிறுவனங்கள் , சிறு கடைகள் , வியாபாரிகள் , பொதுமக்கள் ஆகியோரிடம் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கேயுஎஸ். சோமசுந்தரம் ஏற்பாட்டில் சிறப்பு அழைப்பாளராக காஞ்சிபுரம் மாவட்ட கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் கலந்து கொண்டு கழக அரசின் சாதனைகளை எடுத்துரைத்து 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடியார் தலைமையிலான அதிமுக ஆட்சி அமையும் […]

Loading

செய்திகள்

தி.மு.க. கூட்டணியில் இணைவது குறித்து பரிசீலனை: ராமதாஸ் அறிவிப்பு

சென்னை, ஜன. 12– தி.மு.க. கூட்டணியில் இணைவது குறித்து பரிசீலனை செய்வதாக ராமதாஸ் அறிவித்துள்ளார். அன்புமணி ஆதரவு எம்.எல்.ஏக்கள் 3 பேர் பா.ம.க.வில் இருந்து நீக்கம் செய்து ராமதாஸ் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். பாமகவில் மக்களவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாகவும் 2026 சட்டமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாகவும் தந்தை மகன் இடையே மோதல் வெடித்தது. அப்போது ஏற்பட்ட மோதல் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் தற்போது உச்சத்தை சந்தித்திருக்கிறது. தொடர்ந்து இறுதி தரப்பும் ஆதரவாளர்களை நீக்குவதும், சேர்ப்பதுமாக […]

Loading

செய்திகள்

ஆம்னி பேருந்து கட்டணங்களை குறைக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை, ஜன.12– பொதுமக்கள் எளிதாக சொந்த ஊர் சென்று திரும்புவதற்கு வசதியாக ஆம்னி பேருந்துகளின் கட்டணங்களைக் குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– பொங்கல் திருநாளைக் கொண்டாடுவதற்காக லட்சக்கணக்கான மக்கள் சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு செல்லத் திட்டமிட்டிருக்கும் நிலையில், இதைப் பயன்படுத்திக் கொண்டு தனியார் ஆம்னி பேருந்து நிறுவனங்கள் விண்ணை முட்டும் அளவுக்கு கட்டணத்தை உயர்த்தியுள்ளன. அரசின் விதிகளை மீறி அப்பட்டமாக […]

Loading

செய்திகள்

அமைச்சர் ஐ.பெரியசாமி பேச்சுக்கு காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை பதிலடி

சென்னை, ஜன. 12– ஆட்சி அதிகாரத்தில் பங்கு இல்லை என அமைச்சர் ஐ.பெரியசாமி பேசியது அவருடைய சொந்த கருத்து. ஆனால் கூட்டணி அதிகாரம் முடிவு எடுப்பது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மட்டுமே என காங்கிரஸ் மாநில தலைவர் செல்வபெருந்தகை கூறியுள்ளார். தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த சூழ்நிலையில், ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்ற குரல் காங்கிரஸில் எழுந்து திமுக கூட்டணிக்குள் குழப்பம் நீடித்து […]

Loading

செய்திகள்

இந்தியாவின் வலிமையைக் காட்டும் சோம்நாத் கோவில் கொடி: மோடி பெருமிதம்

ஆமதாபாத், ஜன. 11: சோம்நாத் கோவிலில் பறக்கும் கொடி இந்தியாவின் வலிமையைக் காட்டுகிறது என பிரதமர் மோடி பெருமிதத்துடன் கூறியுள்ளார். குஜராத்தின் கிர் சோம்நாத் மாவட்டத்தில் உள்ள சோம்நாத் கோவில் மீது 1026–ம் ஆண்டு ஆப்கானிஸ்தானின் கஜனி முகமது தாக்குதல் நடத்தி, ஏராளமான செல்வங்களை கொள்ளையடித்து சென்றார். அதன் பின், முகலாய ஆட்சியாளர்களால் பலமுறை கோவில் தாக்கப்பட்டது. இந்த தாக்குதல்களுக்கு பின், ஆயிரம் ஆண்டுகளை கடந்தும் சோம்நாத் கோவில் கம்பீரமாக நிற்கிறது. இதை நினைவுகூரும் வகையில் சோம்நாத் […]

Loading

செய்திகள்

டெல்லியில் மத்திய பட்ஜெட் ஆலோசனை கூட்டம்

புதுடெல்லி, ஜன. 11: மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்ற தமிழகத்துக்கு ஒதுக்க வேண்டிய நிலுவைத்தொகை ரூ.18,500 கோடியை உடனே ஒதுக்க வேண்டும் என்று டெல்லியில் நடந்த நிதி மந்திரிகள் கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தினார். நாடாளுமன்றபட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 28-ந் தேதி தொடங்க இருக்கிறது. பா.ஜனதா அரசு கடந்த 2017-ம் ஆண்டு பட்ஜெட் தேதியை மாற்றி அமைத்ததன்படி அப்போது முதல் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 1-ந்தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான பட்ஜெட் […]

Loading

சினிமா செய்திகள்

ஈழத்து வலியில் கிட்டுவின் ‘சல்லியர்கள்’ சினிமா: உயிரோட்ட நடிப்பில் காமெடி கருணாஸ், ‘ரீல்ஸ்’ சத்யாதேவி!

‘இன்ஸ்டாகிராமில்’ ரீல்ஸ் போட்ட சத்யா தேவி, சமூக ஊடகத்திலிருந்து வெள்ளித்திரைக்குள் ஊடுருவி இருக்கிறார். படம்:“சல்லியர்கள்”. அறிமுகம். புது முகமா… சத்தியம் பண்ணினாலும் நம்பவே மறுப்பார்கள். நின்றால்… நடந்தால்… ஆண் டாக்டரின் கேள்விக்கு பதில் தந்தால் … சட்டென்று திரும்பிப் பார்க்கும் அந்தப் பார்வையில்- புகுந்து நம் இதயத்தில் உறைகிறார். (இதயத்தை கனமாக்கும் கதையில், உறக்கத்தை கெடுக்கிறார் என்னமாய் நடிப்பு…?!) சல்லியர்கள்: ஈழ வரலாற்றில் தைரியம் இரக்கம், நம்பிக்கையின் அடையாளமாகத் திகழ்ந்த போராளி மருத்துவர்கள். அவர்களுக்கு வீர வணக்கத்துடன் நடிகர் […]

Loading