செய்திகள்

மாற்றுத்திறனாளி மாணவர்கள் சாதனை படைக்கவேண்டும்: முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு

சென்னை, ஜன.22- சிறுமலர் பார்வை மற்றும் செவித்திறன் குறைபாடுடையோர் மேல்நிலைப்பள்ளியின் நூற்றாண்டு விழாவில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் ஏதாவது ஒரு துறையில் சாதனை படைக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். சென்னை அண்ணா சாலையில் உள்ள சிறுமலர் பார்வை மற்றும் செவித்திறன் குறைபாடுடையோர் மேல்நிலைப் பள்ளியின் நூற்றாண்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- எந்த ஒரு நிறுவனமும், நூற்றாண்டு நிலைத்து நிற்பது என்பது மிகப்பெரும் […]

Loading

செய்திகள்

அரசு கலை – அறிவியல் கல்லூரிகளின் ஆய்வகங்களை மேம்படுத்த ரூ.19.18 கோடி நிதி ஒப்பளிப்பு ஆணை அமைச்சர் கோவி. செழியன் வழங்கினார்

சென்னை, ஜன. 22– சென்னை கல்லூரிக் கல்வி இயக்ககத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் 112 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் ஆய்வகங்களை மேம்படுத்துவதற்கு ரூ.19.18 கோடி நிதி ஒப்பளிப்புக்கான ஆணையினை வழங்கினார். இன்று இந்தியாவிலேயே உயர்கல்வியில் மாணவர் சேர்க்கையில் முதலிடத்தில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது. இக்கல்வி ஆண்டின் (2025-–2026), மாணவர் சேர்க்கையில், புதிதாக 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதிய இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அரசு கல்லூரி, அரசு உதவி பெறும் கல்லூரி, […]

Loading

செய்திகள்

பியூஸ் கோயலை சந்தித்தார் அன்புமணி ராமதாஸ்

சென்னை, ஜன.22- மத்திய அமைச்சர் பியூஸ் கோயலை டாக்டர் அன்புமணி ராமதாஸ் சந்தித்து பேசினார். பாரிவேந்தருடன் சந்திப்பு பிரதமர் மோடி நாளை சென்னை வரும் நிலையில், மதுராந்தகத்தில் நடைபெற உள்ள பொதுக்கூட்ட மேடையில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்களை மேடை ஏற்ற பா.ஜ.க. தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. இதனை ஒருங்கிணைப்பதற்காக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஸ் கோயல் நேற்று முன்தினம் இரவு சென்னை வந்தார். டி.டி.வி.தினகரனை சந்தித்த அவர், மதுராந்தகத்தில் […]

Loading

செய்திகள்

பிறவிலேயே காது கேட்காத 300 குழந்தைகளுக்கு ஸ்ரீ ராமச்சந்திரா வெற்றிகரமான ஆபரேஷன்

சென்னை, ஜன. 21– பிறவிலேயே காது கேளாத குழந்தைகளுக்கு காக்ளியர் கருவி பொருத்தும் சிகிச்சையின் 20வது ஆண்டு நிறைவு விழா ஸ்ரீ ராமச்சந்திரா உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிகிச்சை பெற்ற குழந்தைகள் ஆடல் பாடல் மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். ராமச்சந்திராவின் முதல் காக்ளியர் கருவி பொருத்தும் அறுவை சிகிச்சையை தனது 3வது வயதில் மேற்கொண்ட கல்யாணி கார்த்திக் தற்போது முதுகலை பட்டப்படிப்பு படித்து கொண்டிருக்கிறார். அவர் பரத […]

Loading

செய்திகள்

அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணியில் டிடிவி தினகரன்

சென்னை, ஜன. 21– அண்ணா தி.மு.க. தலைமையிலான பா.ஜ.க. கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் இணைந்தது. பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயலை டிடிவி தினகரன் சந்தித்து தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மீண்டும் இணைந்தார். தமிழ்நாட்டில் இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் கட்சிகளிடையே கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது. வரும் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி மீண்டும் உருவாகியுள்ள நிலையில், அதில் மேலும் சில கட்சிகளை இணைக்க […]

Loading

செய்திகள்

மாநில தினம்: மணிப்பூர், மேகாலயா, திரிபுரா மக்களுக்கு மோடி வாழ்த்து

புதுடெல்லி, ஜன. 21: மணிப்பூர், மேகாலயா மற்றும் திரிபுரா மாநிலங்களின் மாநில தினத்தை முன்னிட்டு அந்தந்த மாநில மக்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது:– மணிப்பூர் மக்கள் தங்களின் அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பின் மூலம் இந்தியாவின் முன்னேற்றத்திற்கு வளம் சேர்ப்பதாகக் கூறிய அவர், வரும் காலங்களில் அந்த மாநிலம் வளர்ச்சியின் பாதையில் சீராக முன்னேறிச் செல்லும். அந்த மாநிலத்தின் விளையாட்டு மீதான ஆர்வம், […]

Loading

செய்திகள்

சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் எலி மருந்து சாப்பிட்ட பெண் பயணியின் உயிரை காப்பாற்றிய பெண் காவலர்

சென்னை, ஜன. 21– சென்மைன சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் ரெயில்வே பாதுகாப்புப்படை பெண் காவலரின் துரித நடவடிக்கையால் எலி மருந்து சாப்பிட்ட பெண் பயணியின் உயிர் காப்பாற்றப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது? சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், நடை மேடை எண் 11-ல் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே பாதுகாப்புப் படை (ஆர்பிஎப்) பெண் காவலர் ஜிஷா, சுமார் 25 வயதுடைய ஒரு இளம் பெண் பயணி தனியாக அமர்ந்து அழுதுக் கொண்டிருப்பதை கவனித்தார். சந்தேகத்திற்குரிய […]

Loading

செய்திகள்

சிஎஸ்கே–திருவள்ளூர் கிரிக்கெட்: கொரட்டூர் எபினீசர் பள்ளி சாம்பியன் பட்டம் வென்றது

திருவள்ளூர், ஜன. 2026: சிஎஸ்கே–திருவள்ளூர் மாவட்ட கிரிக்கெட் சங்கம் (டிசிஏ) சார்பில் நடந்த 2025–26ம் ஆண்டுக்கான பள்ளிகளுக்கிடையேயான கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் கொரட்டூர் எபினீசர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி அணி, வேலம்மாள் ஸ்போர்ட்ஸ் அகாடமியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. முதலில் பேட்டிங் செய்த எபினீசர் பள்ளி அணி 30 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 132 ரன்கள் சேர்த்தது. அணியின் ஸ்கோரை உயர்த்தும் வகையில் ஏ. பரிநய் ஜெயின் (39) மற்றும் கே. தமிழ் செல்வம் […]

Loading

செய்திகள்

தி.மு.க எம்.எல்.ஏ. பொன்னுசாமி, ஏ.வி.எம். சரவணன் உள்ளிட்டோருக்கு இரங்கல் சட்டசபை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

சென்னை, ஜன. 21– சேந்தமங்கலம் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ. பொன்னுசாமி, ஏ.வி.எம். சரவணன் மறைவுக்கு சட்டசபையில் இரங்கல் தீர்மானம் கொண்டுவரப்பட்டு சட்டசபை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. தமிழக சட்டசபையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் கவர்னர் உரையுடன் நேற்று தொடங்கியது. ஆனால், தமிழ்த்தாய் வாழ்த்தை தொடர்ந்து தேசிய கீதம் பாடப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டி, தனது உரையை புறக்கணித்து கவர்னர் ஆர்.என்.ரவி வெளியேறினார். அதனைத் தொடர்ந்து, கவர்னர் உரையை சபாநாயகர் மு. அப்பாவு தமிழில் வாசித்தார். அந்த உரை […]

Loading

செய்திகள்

அண்ணா தி.மு.க. முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார்

சென்னை, ஜன. 21– ஒரத்தநாடு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த அண்ணா திமுக முன்னாள் அமைச்சரும், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளருமான வைத்திலிங்கம் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார். முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஒன்றுபட்ட அண்ணா தி.மு.க. என்ற கோஷத்தை முன்வைத்து அரசியல் நடத்தி வருகிறார். ஓபிஎஸ் உள்ளிட்டோரை கட்சியில் சேர்க்கும் பேச்சுக்கே இடமில்லை என அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்திருந்த நிலையில், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மாற்றுகட்சிகளில் தொடர்ந்து இணைந்து வருகின்றனர். அவரது […]

Loading