செய்திகள்

விண்வெளி நிலையத்தில் இருந்து சுபான்ஷு சுக்லா இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல்

சென்னை, ஜூலை.8- சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா, இஸ்ரோ தலைவர் மற்றும் விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடினார். ஆக்சியம்-–4 பயணத்தின் ஒரு பகுதியாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியுள்ள இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா, இஸ்ரோ தலைவரும், விண்வெளித் துறையின் செயலாளருமான வி.நாராயணன் மற்றும் விஞ்ஞானிகளுடன் நேற்று தொலைபேசியில் கலந்துரையாடினர். அப்போது தலைவர், சர்வதேச விண்வெளி நிலையத்தில் நடத்தப்படும் பல்வேறு அறிவியல் பரிசோதனைகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து சுபான்ஷுவிடம் விசாரித்தார். சுபான்ஷு […]

Loading

செய்திகள்

தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.400 குறைவு

சென்னை, ஜூலை 7– தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 72 ஆயிரத்து 80 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. தொடர்ந்து, படிப்படியாக உயர்ந்த தங்கம் விலை அண்மையில் ரூ.74 ஆயிரத்தை கடந்து வரலாற்றில் புதிய உச்சத்தை தொட்டது. சவரனுக்கு ரூ.400 குறைவு இதனையடுத்து, தங்கம் விலை கடந்த ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது. அந்த வகையில் நேற்று முன்தினம் […]

Loading

செய்திகள்

தோனிக்கு ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

சென்னை, ஜூலை 7– இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி இன்று தனது 44-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவருக்கு கிரிக்கெட் வீரர்கள், அரசியல் பிரபலங்கள் பலரும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். தனித்துவமான ஆளுமை இந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எம்.எஸ்.தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “எம்.எஸ். தோனிக்கு பிறந்தநாள் […]

Loading

90 வது பிறந்த நாளை கொண்டாடும் தலாய் லாமா
செய்திகள்

மக்களின் மனதில் ஒளிரும் பேரொளி: 90வது பிறந்த நாளைக் கொண்டாடும் தலாய் லாமா!

“அமைதி என்பது வெறும் எதிரிகளை தவிர்ப்பது அல்ல, அது உள்மன அமைதியை அடையும் பயணமாகும்.” – தலாய் லாமா உலக அமைதியின் மாபெரும் தூதராகவும், கருணையும், மத சகோதரத்துவத்தையும் எடுத்துரைக்கும் ஆன்மீக தலைவராகவும் புகழ்பெற்ற தலாய் லாமா, இன்று தனது 90வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். தரம்சாலா, இந்தியா மற்றும் உலகம் முழுவதும் உள்ள அவரது கோடிக்கணக்கான பக்தர்கள், அரசியல் தலைவர்கள், ஆன்மீக நம்பிக்கையாளர்கள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் அவருக்கு தங்களின் வாழ்த்துக்களையும் மரியாதையையும் தெரிவித்துவருகின்றனர். […]

Loading

BRICS
செய்திகள்

‘பிரிக்ஸ்’ மாநாட்டில் பங்கேற்க பிரேசில் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு

ரியோ டி ஜெனிரோ, ஜூலை 6– ‘பிரிக்ஸ்’ உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரேசில் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கானா, டிரினிடாட் அண்ட டுபாகோ, அர்ஜென்டினா நாடுகளை தொடர்ந்து 4வது நாடாக, பிரேசிலுக்கு, அந்நாட்டு ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி சென்றார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு, ​​இந்திய புலம் பெயர்ந்தோர் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்ட ஒரு […]

Loading

செய்திகள்

நிரவ் மோடியின் சகோதரர் அமெரிக்காவில் அதிரடி கைது

புதுடெல்லி, ஜூலை.6-– பஞ்சாப் நேஷனல் வங்கி மூலம் ரூ.13 ஆயிரம் கோடி வங்கிக்கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட நிரவ் மோடியின் சகோதரர் நேஹல் மோடி அமெரிக்காவில் கைது செய்யப்பட்டு உள்ளார். பஞ்சாப் நேஷனல் வங்கியில் இருந்து சுமார் ரூ.13 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட பிரபல வைர வியாபாரிகளான நிரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோர் நாட்டை விட்டு தப்பி ஓடினர். இந்தியாவின் மிகப்பெரிய வங்கிக்கடன் மோசடிகளில் ஒன்றாக கருதப்படும் இந்த விவகாரத்தில் […]

Loading

மும்பையில் இந்தி எதிர்ப்பு போராட்டம்
செய்திகள்

மும்பை இந்தி எதிர்ப்பு பேரணி எழுச்சியும் உற்சாகமும் தருகிறது: ஸ்டாலின்

சென்னை, ஜூலை.6- மும்பையில் நடந்த இந்தி எதிர்ப்பு வெற்றிக் கொண்டாட்டப் பேரணியின் எழுச்சியும், உரை வீச்சும் மிகுந்த உற்சாகம் தருகிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டுக்கு பா.ஜ.க. செய்துவரும் துரோகத்துக்கு தமிழ்நாடு மறக்க முடியாத பாடம் புகட்டும் என்றும் அவர் கூறியுள்ளார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட சமூக வலைத்தள பதிவில் கூறியிருப்ப தாவது:-– இந்தி திணிப்பை முறியடிக்க தி.மு.க.வும், தமிழ்நாட்டு மக்களும் தலைமுறை தலைமுறையாக நடத்திவரும் மொழி உரிமைப்போர், மாநில எல்லைகளைக் […]

Loading

செய்திகள்

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆம்ஸ்ட்ராங் நினைவு பேரணி

சென்னை, ஜூலை 5– சென்னையில் ஆம்ஸ்ட்ராங் நினைவு பேரணி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அமைதியாக நடந்தது. பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை 5-ந் தேதி சென்னையில் அவரது வீட்டின் அருகே வெட்டி கொலை செய்யப்பட்டாா். தமிழ்நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து இதுவரை 27 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதற்கிடையில் அவரின் நினைவிடம் அமைந்துள்ள சென்னையை அடுத்த பொத்தூரில் அவருக்கு […]

Loading

கதைகள் சிறுகதை

கனவு மெய்ப்பட வேண்டும் – மு.வெ. சம்பத்

தனது தோழிகள் மேல் படிப்பிற்காக அவரவர் விரும்பிய துறைகளில் சேர்ந்தார்கள், மாலா தனது தந்தை மோகனிடம் தான் ஆட்டிசம் துறையில் படிக்க விரும்புவதாக் கூற, உனது தோழிகள் போன்று நீயும் படிக்கலாமே என்றார், வீட்டில் குணசீலன் ஆட்டிசத்தினால் அவதிப் படுகிறானே, அவனை குணப் படுத்தவா இந்தத் துறையை நீ விரும்புகிறாய் என்றார், உனது வாழ்க்கையை மேம்படுத்தும் துறையை எடுத்தால் என்ன என்று கூற, மாலாவின் பிடிவாதம் இறுதியில் வென்றது, மிகவும் ஆர்வமாக படித்த மாலாவை ஆசிரியர் மருத்துவர் […]

Loading

செய்திகள்

ரூ.1 லட்சம் கோடிக்கு ராணுவ தளவாடங்கள் வாங்கும் இந்தியா

பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் புதுடெல்லி, ஜூலை.4-– ரூ.1 லட்சம் கோடிக்கு ராணுவ தளவாடங்கள் இந்தியா வாங்க பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்திய முப்படைகளை வலுப்படுத்த மிகப்பெரிய அளவில் ராணுவ தளவாடங்களை இந்தியா கொள்முதல் செய்து வருகிறது. அந்தவகையில் 10 மிகப்பெரிய கொள்முதல் பரிந்துரைகளுக்கு ராணுவ அமைச்சகம் நேற்று ஒப்புதல் அளித்தது. ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடந்த ராணுவ கெள்முதல் கவுன்சில் கூட்டத்தில் மொத்தம் ரூ.1.05 லட்சம் கோடி மதிப்பிலான இந்த திட்டத்துக்கு ஒப்புதல் […]

Loading