செய்திகள்

தமிழ்நாடு டெல்லிக்கு அடிபணியாது: மு.க. ஸ்டாலின் உறுதி

சென்னை, ஜூலை.12- மக்கள்தொகை கட்டுப்பாட்டில் முன்னணியில் இருக்கும் தமிழகத்தை தண்டிக்கும் வகையில் தொகுதி மறுசீரமைப்பு செய்வதில் அநியாயம் செய்யப்படுகிறது. அதனால் தமிழ்நாடு டெல்லிக்கு அடிபணியாது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். மக்கள்தொகை தினமான நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது:- உலக மக்கள்தொகை நாளில், மத்திய அரசுக்கு ஒரு நினைவூட்டல். தமிழ்நாடு மக்கள்தொகைக் கட்டுப்பாட்டில் முன்னணி வகிக்கிறது, பெண்களின் மாண்பைக் காத்து அவர்களுக்கான அதிகாரத்தை வழங்குகிறது. அனைவருக்கும் மருத்துவம் மற்றும் கல்வியை உறுதிசெய்கிறது. நீடித்து […]

Loading

செய்திகள்

இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ ஜூலை 14ந்தேதி பூமி திரும்புகிறார்

நியூயார்க், ஜூலை 11– இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா ஜூலை 14 ந்தேதி பூமி திரும்புகிறார் என நாசா தெரிவித்துள்ளது. இந்திய விண்வெளி வீரர் குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா மற்றும் ஆக்சியம்-4 (Ax-4) பயணக் குழுவினர், சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து (ISS) ஜூலை 14 அன்று பூமிக்கு திரும்ப உள்ளனர். “ஆக்சியம்-4 பயணத்தை கவனமாக கண்காணித்து வருகிறோம். தற்போதைய இலக்கு, ஜூலை 14 அன்று விண்கலம் பிரிந்து பயணத்தைத் தொடங்குவது,” என்று நாசாவின் வணிக […]

Loading

செய்திகள்

இந்தியா- பிரிட்டன் தடையற்ற வர்த்தகம்

தலையங்கம் ஐந்து நாடுகளுக்கு அரசு முறை பயணம் சென்று திரும்பிய பிரதமர் நரேந்திர மோடி அடுத்ததாக இந்த மாத இறுதியில் பிரிட்டனுக்குப் பயணம் செய்யவுள்ளார். இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கம், இந்தியா-பிரிட்டன் இடையேயான வரலாற்றுச் சிறப்புமிக்க தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் (FTA) முறையாகக் கையெழுத்திடுவது ஆகும். இந்த ஒப்பந்தம், இரு நாடுகளுக்கும் வர்த்தக, முதலீட்டு, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளின் வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும் “மைல்கல்” என பிரதமர் மோடி வர்ணித்துள்ளார். சமீபமாய் ஜனாதிபதி டிரம்ப் அச்சுறுத்திவரும் அமெரிக்காவின் […]

Loading

செய்திகள்

அரியானாவில் பிரபல டென்னிஸ் வீராங்கனையை சுட்டுக்கொன்ற தந்தை

குருகிராம், ஜூலை 11– வளர்ந்து வரும் பிரபல இளம் டென்னிஸ் வீராங்கனையான தன் மகளை தந்தையே துப்பாக்கியால் ஈவிரக்கமில்லாமல் சுட்டுக் கொன்றிருக்கும் சம்பவம் நாட்டையே அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது. நாளுக்கு நாள் பெற்ற மகளின் வளர்ச்சி, பெருமை கண்டு பொறுக்கமாட்டாமல் ஆத்திரம் கண்ணை மறைக்க, 25 வயது மகள் ராதிகாவை 51 வயது தந்தை தீபக் யாதவ் சுட்டுக் கொன்றிருக்கிறார். இந்தக் கொடூர சம்பவம் அரியானா குருகிராமம் பகுதியில் நேற்றிரவு (வியாழன்) 10.30 மணியளவில் நடந்துள்ளது. இது […]

Loading

குன்றக்குடி அடிகளார் நூற்றாண்டு நிறைவு: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து
செய்திகள்

குன்றக்குடி அடிகளார் நூற்றாண்டு நிறைவு: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து

சென்னை, ஜூலை 11– தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் நூற்றாண்டு நிறைவையொட்டி பெருமிதம் தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவர் வழியில் பொன்னம்பல அடிகளாரின் தொண்டு தொடரட்டும் என்று வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் நூற்றாண்டு நிறைவு இன்று! தமிழில் அருச்சனை எனும் புரட்சியை முன்னெடுத்தவர்! சமூகநீதித் தளத்தில், தந்தை பெரியார் – பேரறிஞர் அண்ணா – முத்தமிழறிஞர் கலைஞர் எனத் திராவிட இயக்கத்துக்குத் […]

Loading

செய்திகள்

விழுப்புரம் மாவட்டத்தில் தூய்மைப் பணியாளர்களுக்கு அடையாள அட்டை

விழுப்புரம், ஜூலை 10– விழுப்புரத்தில் 17 தூய்மை பணியாளர்களின் குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கு ரூ.1.20 லட்சம் மதிப்பீட்டில் நிதியுதவி மற்றும் 105 தூய்மைப் பணியாளர்களுக்கு அடையாள அட்டைகளை தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நல வாரிய தலைவர் டாக்டர் திப்பம்பட்டி வெ.ஆறுச்சாமி, கலெக்டர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் வழங்கினார். அப்போது அவர் பேசுகையில், தூய்மைப்பணியாளர்களின் பணி அர்ப்பணிப்பு மிக்க பணியாக உள்ளது. குறிப்பாக, கொரோனா போன்ற போிடர் காலத்தில், தங்கள் உயிரை துச்சமென எண்ணி தூய்மைப்பணியினை சிறப்பாக மேற்கொண்டு […]

Loading

செய்திகள்

மெரினா நீச்சல் குளம் பராமரிப்புப் பணிகள் எதிரொலி:

சென்னை, ஜூலை 10– மெரினா நீச்சல் குளத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், நாளை (11–ந் தேதி) முதல் 31–ந் தேதி வரை (20 நாட்கள்) இயங்காது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:– சென்னை மாநகராட்சி, தேனாம்பேட்டை மண்டலம், வார்டு- 114க்கு உட்பட்ட மெரினா நீச்சல் குளத்தில் தண்ணீர் சுத்திகரிப்பு மையம் தங்குதடையின்றி இயங்க ஏதுவாக, 135 மீ. பேக்வாஷ் குழாய் (Backwash Pipe) அமைத்தல், 1.80 மீ. விட்டம் கொண்ட 9 ஊறுகுழிகள் (Soak […]

Loading

செய்திகள்

தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.160 உயர்வு

சென்னை, ஜூலை 10– சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.72 ஆயிரத்து 160 க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப, தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை பொறுத்தவரையில் ஏற்ற இறக்கத்துடனேயே இருந்து வருகிறது. இந்த ஆண்டு தொடங்கியது முதல் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்து, கடந்த ஜூன் மாதத்தில் வரலாறு காணாத உச்சம் தொட்டது. ஆபரணத் தங்கம் விலை ரூ. 74 ஆயிரத்தை கடந்து புதிய வரலாறு […]

Loading

செய்திகள்

நெய்வேலி புத்தகத் திருவிழாவில் சிறந்த எழுத்தாளர்களுக்கு பரிசுகள்

கடலூர், ஜூலை 9– கடலூர் மாவட்டம், நெய்வேலியில் 24ஆம் ஆண்டு நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் சிறந்த எழுத்தாளர்களுக்கு பரிசுகளை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது: முதலமைச்சர், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்களிடையே புத்தகம் வாசிக்கும் பழக்கத்தினை தூண்டும் விதமாகவும், அறிவார்ந்த சமுதாயம் உருவாகிட வேண்டும் என்தற்காகவும் மாவட்டங்களில் புத்தகத் திருவிழா நடத்திட உத்தரவிட்டுள்ளார். புத்தக வாசிப்பை ஒரு மக்கள் இயக்கமாக எடுத்துச்செல்ல ஒரு பொது நிறுவனம் நெய்வேலியில் ஒவ்வொரு […]

Loading

செய்திகள்

சீன – நேபாள எல்லையில் மண்சரிவு: 17 பேர் மாயம்

சிகாசே, ஜூலை 8 – சீன – நேபாள எல்லையில் இன்று அதிகாலை ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 17 பேர் உயிரிழந்துள்ளனர். தென்மேற்கு சீனாவின் ஷிசாங் தன்னாட்சி பிராந்தியத்தில் உள்ள சிகாசே நகரில் அமைந்துள்ள ஜிராங் நகரியத்தில், சீன – நேபாள எல்லையை ஒட்டிய ஜிராங் துறைமுகப் பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 17 பேர் மாயமாகியுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். கட்டுமானத் தொழிலாளர்கள் இன்று அதிகாலை 5 மணியளவில் இந்த மண்சரிவு ஏற்பட்டதாகத் […]

Loading