செய்திகள்

பீகாரில் 125 யூனிட் மின்சாரம் இலவசம்: நிதிஷ் குமார் அறிவிப்பு

பாட்னா, ஜூலை 17– பீகாரில் குடியிருப்புகளுக்கு ஆகஸ்ட் மாதம் முதல் 125 யூனிட் இலவச மின்சார வழங்கும் திட்டத்தை அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் இன்று அறிவித்துள்ளார். இது வரவிருக்கும் தேர்தலுக்கு மக்களை மயக்கும் செயல் என எதிர்கட்சியினர் குறை கூறியுள்ளனர். பீகாரில் அடுத்த சில மாதங்களில் சட்டமன்றத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த முடிவு முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதுதொடர்பாக பீகார் முதல்வர் நிதிஷ் குமார் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:– ஆரம்பத்தில் இருந்தே பீகாரில் அனைவருக்கும் மலிவு […]

Loading

செய்திகள்

மயிலாடுதுறையில் மக்களை நேரடியாக சந்தித்தார்:

சென்னை, ஜூலை 16– “ஓரணியில் தமிழ்நாடு” என்ற மாபெரும் முன்னெடுப்பு திட்டத்தில் மயிலாடுதுறையில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மக்களை நேரடியாக சந்தித்து உறுப்பினர்களை சேர்த்தார். இந்தத் திட்டத்தில் உறுப்பினர்கள் சேர்க்கையை மு.க.ஸ்டாலின் கடந்த 3ந் தேதி அன்று சென்னை, ஆழ்வார்பேட்டையில் மக்களை நேரடியாக சந்தித்து தொடங்கி வைத்தார் என்பது நினைவிருக்கலாம். தொடர்ந்து, கடந்த 10ந் தேதி அன்று திருவாரூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சன்னதி தெருவில் முதலமைச்சர், மக்களை நேரடியாக சந்தித்து, இத்திட்டத்தில் உறுப்பினர்களை சேர்த்தார். மேலும், […]

Loading

செய்திகள்

ஆக்ஸியம்-4 குழுவினர் பூமி திரும்பும் பயணம் துவங்கியது

சுக்லாவின் சாகசம் விண் ஆய்வில் புதுமைல்கல் விண்வெளியில் 18 நாட்கள் தங்கியிருந்த இந்திய விண்வெளி வீரர் குழு கேப்டன் சுபன்ஷு சுக்லா உள்ளிட்ட ஆக்சியம்-4 (Ax-4) பயணக் குழுவினர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து வெற்றிகரமாகப் பிரிந்து பூமிக்குத் திரும்பும் பயணத்தைத் தொடங்கியுள்ளனர். இது இந்தியாவின் விண்வெளித் துறையில் ஒரு புதிய மைல்கல்லைப் பதிவு செய்துள்ளது. ஸ்பேஸ்எக்ஸ் க்ரூ டிராகன் விண்கலம், “கிரேஸ்” எனப் பெயரிடப்பட்ட இந்த விண்கலம், இந்திய நேரப்படி இன்று மாலை 4:50 மணியளவில் […]

Loading

Uncategorized

பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு எத்தனை வழக்குகள் நிலுவையில் உள்ளன?

சென்னை, ஜூலை 14– தமிழகம் முழுவதும் எத்தனை வழக்குகளில் பிடிவாரண்ட்கள் பிறப்பிக்கப்பட்டு, நிலுவையில் உள்ளன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக டி.ஜி.பி. மற்றும் சென்னை காவல் ஆணையருக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சென்னை அல்லிகுளம் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட ராஜராஜ சோழன் என்பவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்டை அமல்படுத்த, நீலாங்கரை போலீசாருக்கு உத்தரவிடக் கோரி ஜமுனா சிவலிங்கம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி […]

Loading

செய்திகள்

திருவள்ளூர் ரெயில் தீ விபத்து நடந்த இடத்தில் தண்டவாள சீரமைப்பு பணிகள் தீவிரம்

திருவள்ளூர், ஜூலை 14– திருவள்ளூர் அருகே ரெயில் விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு தண்டவாள சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. அந்த வழித்தடத்தில் தற்போது மின்சார ரெயில் சேவை சீரானது. திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே உயர் ரக டீசல் ஏற்றி வந்த ரெயில் தடம்புரண்டு ஏற்பட்ட உராய்வினால் டேங்கர்களில் தீப்பற்றி விபத்து ஏற்பட்டது. . இந்த தீயானது மளமளவென்று பரவி, அடுத்தடுத்து 18 டேங்கர்களில் இருந்த 8.40 லட்சம் லிட்டர் டீசல் எரிந்து […]

Loading

செய்திகள்

அத்தியாவசிய பொருட்களை தேடிச்சென்ற காசா மக்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்: 59 பேர் பலி

காசா, ஜூலை 14– இஸ்ரேல் காசா மீது நடத்தும் போர் 21 மாதங்களாக தொடரும் நிலையில், அத்தியாவசியப் பொருட்களை தேடிச் சென்ற காசா மக்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 59 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பாலஸ்தீனத்தில் உள்ள காசா மக்கள் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் குழந்தைகள், பெண்கள் உள்பட தற்போது வரை 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த போரானது 21 மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் […]

Loading

செய்திகள்

பள்ளிகளில் ‘ப’ வடிவில் இருக்கை வசதி: உத்தரவை நிறுத்தி வைத்தது தமிழக அரசு

சென்னை, ஜூலை 13– பள்ளிகளில் மாணவர் இருக்கை வரிசையை ‘ப’ வடிவில் மாற்றி அமைக்கும் திட்டத்தை நிறுத்தி வைக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கேரளாவில் சமீபத்தில் வெளியான, ‘ஸ்தானார்த்தி ஸ்ரீகுட்டன்’ என்ற திரைப்படம், கடைசி வரிசை இருக்கையில் அமர்வதால், கிராமப்புற மாணவர்களின் நலன் பாதிக்கப்படுகிறது என்பதை காட்சிப்படுத்தி இருந்தது. அரை வட்ட வடிவில் மாணவர்களின் இருக்கை மாற்றி அமைக்கப்பட்டால், ‘கடைசி பெஞ்ச்’ என்பதே இருக்காது என்றும் அந்தப் படத்தில் வலியுறுத்தப்பட்டு இருந்தது. இதன் எதிரொலியாக, அம்மாநிலத்தில், ஒரு சில […]

Loading

செய்திகள்

இந்தியாவை பாகிஸ்தான் தாக்கியதற்கு ஆதாரத்தை காட்ட முடியுமா?

வெளிநாட்டு ஊடகங்களுக்கு அஜித்தோவல் கேள்வி சென்னை, ஜூலை.12–- பாகிஸ்தான் மீதான போர் தொடர்பான உண்மைகளை, வெளிநாட்டு ஊடகங்கள் தவறாக காட்டுகின்றன. இந்தியாவை பாகிஸ்தான் தாக்கியத்திற்கு ஏதாவது ஒரு ஆதாரத்தை அவர்களால் காட்ட முடியுமா, என தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை ஐ.ஐ.டி.யின் 62-வது பட்டமளிப்பு விழா, கிண்டி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. சென்னை ஐ.ஐ.டி. இயக்குனர் காமகோடி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், முதன்மை விருந்தினராக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல், […]

Loading

செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று குரூப் 4 தேர்வு: 3,935 பணியிடங்களுக்கு 13 லட்சத்து 90 ஆயிரம் பேர் எழுதினர்

தேர்வு முடிவுகள் 3 மாதத்தில் வெளியிடப்படும் என தகவல் சென்னை, ஜூலை 12– தமிழகம் முழுவதும் இன்று குரூப் 4 தேர்வு நடைபெற்றது. 3,935 பணியிடங்களுக்கு 13 லட்சத்து 90 ஆயிரம் பேர் எழுதினர் . தமிழ்நாடு அரசுத்துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) தேர்வுகளை நடத்தி தகுதியானவர்களை தேர்வு செய்கிறது. அந்தவகையில் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வனக்காப்பாளர், வனக்காவலர் போன்ற குரூப்-4 பணிகளில் […]

Loading

செய்திகள்

டெல்லியில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்து விபத்து

இடிபாடுகளில் 12 பேர் சிக்கித் தவிப்பு புதுடெல்லி, ஜூலை 12– டெல்லியின் சீலாம்பூர் பகுதியில் இன்று காலை 4 தலங்கள் கொண்டு அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. டெல்லியின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ளது சீலாம்பூர். இந்த பகுதியில் உள்ள ஜனதா மஸ்தூர் காலனியில் அமைந்துள்ள 4 தலங்கள் கொண்ட அடுக்குமாடி கட்டிடம் ஒன்று இன்று காலை 7 மணி அளவில் இடிந்து விழுந்தது. இந்தத் தகவல் […]

Loading