செய்திகள் நாடும் நடப்பும்

துணை ஜனாதிபதி போட்டியில் நட்டா, ஹரிவன்ஷ்

தலையங்கம் இந்திய அரசியலில் ஒரு எதிர்பாராத திருப்பமாக, மாண்புமிகு துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மருத்துவக் காரணங்களைச் சுட்டிக்காட்டி, ஜனாதிபதி திரௌபதி முர்முவுக்கு அவர் அனுப்பிய கடிதத்தில், தனது ராஜினாமா உடனடியாக அமலுக்கு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். தன்கர், தனது ஐந்து ஆண்டு பதவிக் காலம் (2022 ஆகஸ்ட் முதல் 2027 வரை) நிறைவடைவதற்கு முன்பே ராஜினாமா செய்ததன் மூலம், வி.வி.கிரி மற்றும் பைரோன் சிங் ஷெகாவத் போன்ற ஒரு சில துணை […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும் முழு தகவல்

இந்திய நடுத்தர வர்க்கத்தின் கிரிப்டோ கனவு: பாதுகாப்பு & ஒழுங்குமுறையின் அவசியம்!

இந்தியாவின் வளர்ந்து வரும் நடுத்தர வர்க்கத்தின் இதயத்தில் ஒரு கனவு உள்ளது – அது நிதி சுதந்திரம் பற்றிய கனவு, வாழ்க்கையை என்றென்றும் மாற்றக்கூடிய ஒரு பொன்னான வாய்ப்பைக் கண்டுபிடிப்பது. பலருக்கு, கிரிப்டோகரன்சி அந்தக் கனவாகத் தெரிகிறது. இது டிஜிட்டல் வடிவிலான சொத்து என்பதுடன் பலருக்கும் உற்சாகம் தருவதாக உள்ளது. மேலும் மிக முக்கியமாக, எந்த வங்கியும் அல்லது நிலையான வைப்புநிதியும் கொடுக்க முடியாத வருமானத்தை இது உறுதியளிக்கிறது. ஆனால் ஒவ்வொரு பளபளப்பான நாணயத்திற்கும் ஒரு மறுபக்கம் […]

Loading

செய்திகள்

குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் திடீர் ராஜினாமா

புது டெல்லி, ஜூலை 22- இந்திய குடியரசு துணைத்தலைவா் ஜகதீப் தாங்கர் உடல்நல சிக்கல்கள் காரணமாகக்  தனது பதவியை ராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ளார். ஆர்டிக்கிள் 67(a) பிரிவின்படி தனது ராஜினாமா கடிதத்தை குடியரசு தலைவரிடம் ஜகதீப் தாங்கர் வழங்கியுள்ளார். தாங்கர் தனது கடிதத்தில், ஜனாதிபதி முர்முவுக்கும் பிரதமரான நரேந்திர மோடிக்கும், அமைச்சரவையினருக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார். 2022‑இல் துணைத் தலைவா் பதவியை ஏற்றுக்கொண்ட தாங்கர், தனது பதவி காலம் முடிய இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு இருக்கும் நிலையில் தற்பொழுது […]

Loading

செய்திகள்

ஆன்லைன் பந்தய செயலி வழக்கு: ஜூலை 21ல் ஆஜராக கூகுள், மெட்டா நிறுவனங்களுக்கு அமலாக்கத்துறை சம்மன்

புதுடெல்லி, ஜூலை 19– பணமோசடி மற்றும் பிற நிதி குற்றங்களுக்காக விசாரணையில் உள்ள ஆன்லைன் பந்தய செயலிகளை விளம்பரப்படுத்தியதாக எழுந்த புகாரில், ஜூலை 21ம் தேதி ஆஜர் ஆக வலியுறுத்தி கூகுள், மெட்டாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. ஐதராபாத் மற்றும் விசாகப்பட்டினத்தில் ‘ஜங்லீ ரம்மி, ஜீட்வின், லோட்டஸ் 365’ உள்ளிட்ட, ‘ஆன்லைன்’ சூதாட்ட செயலிகள் வாயிலாக, சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடப்பதாக புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் அமலாக்கத்துறையினர் விசாரணை மேற்கொண்ட போது, குறிப்பிட்ட சூதாட்ட […]

Loading

செய்திகள்

பஹல்காம் தாக்குதல் நடத்திய ரெசிஸ்டன்ஸ் ப்ரண்ட்:

வாஷிங்டன், ஜூலை 18– பஹல்காமில் பயங்கரவாத தாக்குதல் நடத்திய, ‘தி ரெசிஸ்டன்ஸ் ப்ரண்ட்’ அமைப்பை பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா அறிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் 22ம் தேதி, ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் அப்பாவி சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு, ‘தி ரெசிஸ்டன்ஸ் ப்ரண்ட்’ அமைப்பு பொறுப்பேற்றது. பஹல்காமில் பயங்கர தாக்குல் நடத்திய பயங்கரவாதிகளை நீதியின் முன் நிறுத்த, இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவாக இருக்கும் என அதிபர் டிரம்ப் […]

Loading

செய்திகள்

இயந்திர கோளாறு: இண்டிகோ விமானம் மும்பையில் தரையிறக்கம்

மும்பை, ஜூலை 17– நடுவானில் பறந்து கொண்டிருந்த போது ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, இண்டிகோ விமானம் மும்பையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. டெல்லி விமான நிலையத்தில் இருந்து கோவாவுக்கு நேற்று இண்டிகோ விமானம் புறப்பட்டது. விமானத்தில் 191 பேர் இருந்தனர். விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதை விமானி கண்டறிந்தார். இதையடுத்து, அவர் விமானத்தை அவசரமாக தரையிறக்க முடிவு செய்தார். பின்னர் விமானம் மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலையத்தில் பத்திரமாக […]

Loading

செய்திகள்

கூட்ட நெரிசலில் 11 பேர் பலியான சம்பவம்; பெங்களூரு அணி நிர்வாகமே பொறுப்பு:

பெங்களூரு, ஜூலை 17– கர்நாடகாவில் ஐபிஎல் வெற்றி கொண்டாட்டத்தின் போது, கூட்டநெரிசல் ஏற்பட்டு, 11 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு பெங்களூரு அணி நிர்வாகமே முழு பொறுப்பு என்று கர்நாடகா ஐகோர்ட்டில் மாநில அரசு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்ற பெங்களூரு அணி கடந்த ஜூன் 4ம் தேதி ஆமதாபாத்தில் இருந்து பெங்கரூளுவுக்கு திரும்பியது. அப்போது, விதான் சவுதா மற்றும் சின்னசாமி மைதானத்தில் பெங்களூரு வீரர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் […]

Loading

செய்திகள்

ஈராக் ஷாப்பிங் மாலில் தீ ; 60 பேர் உயிரிழப்பு

பாக்தாத், ஜூலை 17– ஈராக்கில் உள்ள மிகப்பெரிய ஷாப்பிங் மாலில் ஏற்பட்ட தீ விபத்தில் 60 பேர் உயிரிழந்தனர். கிழக்கு ஈராக்கில் உள்ள அல்-குட் நகரில், ஷாப்பிங் மால் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த 5 மாடி அடுக்குமாடிகளை கொண்டது. இந்த மாலில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 60 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் பலத்த காயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி […]

Loading

செய்திகள்

குற்றச்செயல்களில் ஈடுபட்டால் விசா ரத்து: இந்தியர்களுக்கு அமெரிக்க தூதரகம் புதிய எச்சரிக்கை

புதுடெல்லி, ஜூலை 17 அமெரிக்காவில் ஒரு சூப்பர் மார்க்கெட்டில் இந்தியப் பெண் ஒருவர் திருட்டில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அமெரிக்க விசாவுக்கு விண்ணப்பிக்கும் இந்தியர்களுக்கு டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகம் ஒரு புதிய எச்சரிக்கையை விடுத்துள்ளது. அமெரிக்காவில் குற்றச்செயல்களில் ஈடுபட்டால் விசா திரும்பப் பெறப்படும் என அறிவித்துள்ளது. அமெரிக்காவில் உள்ள டார்க்கெட் டிபார்ட்மென்ட் ஸ்டோரில் இந்திய பெண் ஒருவர் சுமார் 7 மணிநேரம் பொருட்களை வாங்குவது போல நடித்துள்ளார். பிறகு, சுமார் ரூ.1.10 லட்சம் மதிப்பிலான […]

Loading

செய்திகள்

குறு, சிறு – நடுத்தரத் தொழிலில் மாணவர்களின் 65 புதிய கண்டுபிடிப்புக்கு ரூ.40.50 லட்சம் பரிசு

சென்னை, ஜூலை 17– குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்நிறுவனங்கள் துறையின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் மூலம் அண்ணாப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில் குறு, சிறு தொழில்நிறுவனத் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் கலந்து கொண்டு மாணவர்களின் 65 புதிய கண்டுபிடிப்புகளுக்கு ரூ.40.50 லட்சம் பரிசுத் தொகை வழங்கினார். விழாவில் அமைச்சர் தா.மோ. அன்பரசன் பேசியதாவது:–- “இன்று இந்த கண்காட்சியில் நம் மாணவர்களின் புதிய கண்டுப்பிடிப்புக்களான ரோபோ ரோடு ரோலர், பல்நோக்கு விவசாய […]

Loading