செய்திகள்

எல்விஎம்–3 எம்5 ராக்கெட் நாளை விண்ணில் பாய்கிறது

திருப்பதி, நவ.1– விண்ணில் நாளை ஏவப்பட உள்ள எல்விஎம்–3 எம்5 ராக்கெட் திட்டம் வெற்றி அடைய, திருப்பதியில் இஸ்ரோ தலைவர் நாராயணன் உள்ளிட்ட விஞ்ஞானிகள் வழிபாடு நடத்தினர். நாட்டின் தகவல் தொடர்பு வசதிகளை மேம்படுத்த இஸ்ரோ சார்பில் இதுவரை 48 செயற்கைக்கோள்கள் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில் கடந்த 2013ம் ஆண்டு செலுத்தப்பட்ட ஜிசாட்–7 (ருக்மணி) செயற்கைக்கோளின் ஆயுள்காலம் விரைவில் நிறைவடைய உள்ளது. அதற்கு மாற்றாக சுமார் ரூ.1,600 கோடியில் 4,410 கிலோ எடை கொண்ட அதிநவீன […]

Loading

செய்திகள்

சபரிமலைக்கு வந்தார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கடும் பாதுகாப்பில் இன்று ஐயப்பன் தரிசனம்

திருவனந்தபுரம், அக்டோபர் 22 குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நான்கு நாள் அரசுமுறைப் பயணமாக கேரளா சென்றுள்ளார். அவர் நேற்று மாலை திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார். ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் மற்றும் முதலமைச்சர் பினராயி விஜயன் ஆகியோர் விமான நிலையத்தில் அவரை வரவேற்றனர். பின்னர் அவர் கவர்னர் மாளிகையில் தங்கியிருந்து ஓய்வெடுத்தார். இன்று காலை, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சபரிமலை ஐயப்பன் கோவிலில் தரிசனம் செய்ய உள்ளார். இதற்காக சபரிமலையில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் […]

Loading

செய்திகள்

அமெரிக்கா முழுவதும் அதிபர் டிரம்ப் கொள்கைகளுக்கு எதிராக போராட்டம்

வாஷிங்டன்: அக்.19அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மேற்கொண்ட குடியேற்றம், பாதுகாப்பு மற்றும் கல்வி தொடர்பான கொள்கைகளை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. பல நகரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். அமெரிக்க அதிபராக டிரம்ப் கடந்த ஜனவரியில் பதவியேற்றபோது, அரசின் பொருளாதார கொள்கைகளில் பல மாற்றங்களை அறிமுகப்படுத்தினார். அரசு செலவுகளை குறைக்கும் நடவடிக்கைகளும், வெளிநாடுகள் அமெரிக்க தயாரிப்புகளுக்கு விதிக்கும் வரிக்கு இணையான வரிகளை அமெரிக்காவும் விதிப்பதையும் அவர் அறிவித்தார். அரசு ஊழியர்களை எளிதாக பணிநீக்கம் […]

Loading

செய்திகள்

பாகிஸ்தானை இந்தியா தாக்கினால் சவுதி அரேபியா பதிலடி கொடுக்கும்: ஒப்பந்தம் கையெழுத்து

கத்தார், செப். 18– பாகிஸ்தானை இந்தியா தாக்கினால் சவுதியைத் தாக்கியதாக கருதி பதிலடி கொடுக்கப்படும் என்ற முக்கிய ஒப்பந்தம் கையொப்பம் ஆக உள்ளது. பாகிஸ்தான் மற்றும் சவுதி அரேபியா நாடுகளுக்கு இடையே முக்கிய பாதுகாப்பு உடன்பாடு கையெழுத்தாகியுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி, பாகிஸ்தான் அல்லது சவுதியை யாராவது தாக்கினால், அது இரண்டு நாடுகளின் மீதான தாக்குதலாக கருதப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முஹம்மது பின் சல்மானின் அழைப்பை ஏற்று, பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் […]

Loading

செய்திகள்

நானும் ஆவலோடு காத்திருக்கிறேன்’: இந்தியா – அமெரிக்கா வர்த்தகம் குறித்து பேச விரும்பும் டிரம்புக்கு மோடி பதில்

புதுடெல்லி, செப். 10– இந்தியா–அமெரிக்கா இடையேயான வர்த்தகம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், பிரதமர் மோடியும் வெளியிட்டுள்ள கருத்து வரவேற்பைப் பெற்றிருக்கும். அதே நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘‘வர்த்தகத் தடைகளை தகர்க்க உங்களுடன் பேச விரும்புகிறேன்’’ என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். அதற்கு பிரதமர் மோடியும் ‘‘ஆவலுடன் காத்திருக்கிறேன்’’ என இசைவு தெரிவித்துள்ளார். உலகளவில் அமெரிக்காவின் வர்த்தக கட்டமைப்பை மறுசீரமைக்கும் வகையில், பல்வேறு நாடுகள் மீது அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடந்த சில மாதங்களாக […]

Loading

செய்திகள்

செங்கோட்டையனை விரைவில் சந்திப்பேன்: ஓ. பன்னீர்செல்வம்

சென்னை, செப்.7– முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை உறுதியாக சந்திப்பேன் என்று முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து பிரிந்து சென்ற டி.டி.வி.தினகரன், ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து பேச தயாராக உள்ளதாக பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறியதாவது: நயினார் நாகேந்திரன் நல்ல மனிதர். அவரின் முயற்சிக்கு வாழ்த்துகள். முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை கண்டிப்பாக சந்திப்பேன். அவருக்கு […]

Loading

செய்திகள்

ஐஎம்எப் நிர்வாக இயக்குநராக ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் உர்ஜித் படேல் நியமனம்

புதுடெல்லி, ஆக. 29– சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குநராக, ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் உர்ஜித் படேலை நியமிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதுகுறித்து வெளியான அறிவிப்பில் கூறியிருப்பதாவது:– ‘பொருளாதார நிபுணரும், ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னருமான டாக்டர் உர்ஜித் படேலை சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குநர் பதவிக்கு 3 ஆண்டுகளுக்கு நியமனம் செய்ய அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. பதவியேற்ற நாளிலிருந்து 3 ஆண்டுகள் அல்லது அடுத்த உத்தரவு வரும் […]

Loading

செய்திகள்

ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணை வாங்காதே: இந்தியாவிற்கு 25% வரி குறைப்பிற்கு நிபந்தனை

வாஷிங்டன், ஆக. 28– ரஷ்யா – உக்ரைன் இடையேயான போரை ‘மோடியின் போர்’ எனக் குறிப்பிட்டு அமெரிக்க அதிபரின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ பேசியுள்ளார்.மேலும், ரஷியாவிடம் கச்சா எண்ணை வாங்குவதை நிறுத்தினால், இந்தியா மீதான வரியை 25 சதவிகிதமாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இந்தியா–அமெரிக்கா இடையேயான இருதரப்பு வர்த்தக ஒப்பந்த பேச்சுவாா்த்தை, அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த காலக் கெடுவையும் கடந்து இழுபறி நீடித்ததால், இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது […]

Loading

செய்திகள்

இந்தியா–பாகிஸ்தான் போரின்போது மோடியுடன் பேசினேன்: வர்த்தகத்தை நிறுத்துவதாக எச்சரித்தேன்

புதுடெல்லி, ஆக. 27– இந்தியா–பாகிஸ்தான் சண்டையின்போது இந்திய பிரதமர் மோடியுடன் பேசியதாக டிரம்ப் புதிய தகவலை தெரிவித்துள்ளார். மீண்டும் போர் ஏற்பட்டாலும் நானே தடுப்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது வரி விதிப்பதாகக் கூறி, இந்தியா மீது 50 சதவிகித வரியை அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்தார். இந்த வரிவிதிப்பானது, இன்று முதல் அமலுக்கு வந்தது. இதனிடையே டிரம்ப்பின் அழைப்பை பிரதமர் மோடி தொடர்ந்து நிராகரித்து வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த […]

Loading

செய்திகள்

அமெரிக்க வரி விதிப்பு: இந்தியாவுடன் துணை நிற்போம் என சீனா அறிவிப்பு

பெய்ஜிங், ஆக. 22– அமெரிக்காவின் வரி விதிப்புக்கு எதிராக இந்தியாவுடன் சீனா உறுதியாக துணை நிற்கும் என இந்தியாவுக்கான சீனத் தூதர் சூ பெய்ஹோங் கூறியுள்ளார். ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதன் மூலமாக ரஷ்யா – உக்ரைன் போருக்கு இந்தியா மறைமுகமாக நிதியளிப்பதாக அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிறது. இதனால் இந்தியா மீது அமெரிக்கா 50 சதவிகித வரியை விதித்துள்ளது. இந்த வரி விதிப்பினால் இந்தியாவில் பல்வேறு துறைகள் பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளது. எனினும் இந்தியா பின்வாங்காது […]

Loading