செய்திகள்

டில்லி சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை வேட்டையாட அமித்ஷா உத்தரவு

புதுடில்லி: நவ. 1 1– டில்லி கார் குண்டுவெடிப்பு சம்பவத்தின் பின்னணியில் உள்ள ஒவ்வொரு குற்றவாளியையும் வேட்டையாடுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளேன் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். தலைநகர் டில்லியில் நடந்த கார் குண்டு வெடிப்பு சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது. இந்த சூழலில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் அவரது இல்லத்தில் உயர்மட்ட பாதுகாப்பு மறுஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. மத்திய உள்துறை செயலாளர் கோவிந்த் மோகன், புலனாய்வுப் பணியகத்தின் இயக்குநர், தேசிய […]

Loading

செய்திகள்

பீகாரில் 2–ம் கட்ட சட்டசபை தேர்தல்: 122 தொகுதிகளில் விறுவிறு வாக்குப்பதிவு

பாட்னா, நவ.11- பீகார் சட்டசபையில் 122 தொகுதிகளுக்கான 2–ம் கட்ட வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்புடன் நடந்து வருகிறது. பிற்பகல் 1 மணி நிலவரப்படி …. சதவீத வாக்குகள் பதிவானது. இன்று வாக்குப்பதிவு முடிந்ததும், முதல் மற்றும் இரண்டாம் கட்ட தேர்தல்களில் பதிவான வாக்குகள் 14-ந் தேதி எண்ணப்படுகிறது. ஆட்சியை பிடிப்பது எந்த கூட்டணி என்று அப்போது தெரிய வரும். பீகாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் – பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடக்கிறது. […]

Loading

செய்திகள்

டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் குற்றவாளிகள் யாரும் தப்பிக்க முடியாது ; பிரதமர் மோடி உறுதி

திம்பு, நவ. 11– டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் யாரும் தப்பிக்க முடியாது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். 2 நாள் அரசு முறைப் பயணமாக இன்று காலை பூடான் நாட்டிற்கு வந்த பிரதமர் மோடிக்கு திம்பு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் மோடியை பூடான் பிரதமர் ஷெரிங் டோப்கே வரவேற்றார். திம்புவில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:– டெல்லியில் நடந்த கொடூரமான சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. […]

Loading

செய்திகள்

டெல்லி கார் குண்டுவெடிப்பு: சந்தேக நபரின் புகைப்படம் வெளியீடு

டெல்லி, நவ.11– டெல்லி கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் தற்கொலை தாக்குதல் நடத்தியவர் என்று சந்தேகிக்கப்படும் மருத்துவர் உமர் முகமதுவின் புகைப்படம் வெளியாகியுள்ளது. நேற்று மாலை டெல்லி செங்கோட்டை அருகே வெடித்துச் சிதறிய வெள்ளை நிற ஹூண்டாய் ஐ–20 காரை உமர் இயக்கிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. ஜம்மு – காஷ்மீரின் புல்வாமாவில் 1989 பிப்ரவரி 24 அன்று பிறந்த உமர், அல் பலா மருத்துவக் கல்லூரியில் மருத்துவராகப் பணிபுரிந்தார். ஜம்மு – காஷ்மீர் மற்றும் ஹரியானா காவல்துறையினரால் பயங்கரவாத […]

Loading

செய்திகள்

தர்மேந்திரா உடல்நிலை குறித்து மனைவி ஹேமமாலினி விளக்கம்

மும்பை, நவ. 11– இந்தி திரையுலகின் பழம்பெரும் நடிகர் தர்மேந்திராவின் உடல்நிலை குறித்து அவரது ‘நட்சத்திர’ மனைவியும் மக்களவை உறுப்பினருமான ஹேமமாலினி விளக்கம் அளித்துள்ளார். இந்தித் திரையுலகில் 300 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து புகழ் பெற்றவர் தர்மேந்திரா (வயது 89). மூச்சுத் திணறல், உயர் ரத்தஅழுத்தம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் உடல்நலக்குறைவு காரணமாக மும்பையில் உள்ள ப்ரீச்கேண்டி மருத்துவமனையில் நேற்றிரவு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பிரபல இருதயநோய் நிபுணரான மருத்துவர் தேவ் பஹ்லாஞ்சனியின் கண்காணிப்பில் தர்மேந்திரா இருப்பதாகவும், […]

Loading

செய்திகள்

தெலங்கானா இடைத்தேர்தலில் டிரோன் கண்காணிப்பு

ஐதராபாத், நவ. 11- தெலுங்கானா மாநிலத்தின் தலைநகர் ஐதராபாத்தில் உள்ள ஜூப்ளி ஹில்ஸ் சட்டமன்ற தொகுதியின் இடைத்தேர்தல் வாக்குப்பதிவுகள், டிரோன்கள் மூலம் முதன்முறையாக கண்காணிப்பு செய்யப்படுகிறது. ஜூப்ளி ஹில்ஸ் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. பொதுவாக அமைதியான சூழலே நிலவினாலும், நாள் முழுவதும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரக் கோளாறுகள், ஆங்காங்கே சிறிய மோதல்கள் மற்றும் அரசியல் தலையீடுகள் குறித்த புகார்கள் சில வாக்குச்சாவடிகளில் பதிவாகியுள்ளன. டிரோன் மூலம் கண்காணிப்பு இந்நிலையில் மொத்தம் 4,01,365 […]

Loading

செய்திகள்

போலீஸ் குடியிருப்பில் கொலை; அண்ணாமலை கண்டனம்

சென்னை, நவ. 10– காவல் துறைக்கு பொறுப்பான முதல்வர் ஸ்டாலின், கையாலாகாத நிலையில் போலீசாரை வைத்திருப்பது, தமிழகத்தின் சாபக்கேடு என தமிழக பா.ஜ.க முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திமுக ஆட்சியில், தமிழகத்தில் படுகொலைகள் நடைபெறாத நாளே இல்லை எனும் அளவுக்குச் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து இருக்கிறது. இதன் உச்சகட்டமாக, இன்று காலை, திருச்சி மாநகர் பீமநகர் மார்சிங் பேட்டையில், பள்ளிகள் அதிகம் உள்ள பகுதியில், […]

Loading

செய்திகள்

ஸ்பைஸ்ஜெட் விமான என்ஜினில் கோளாறு; கொல்கத்தாவில் அவசரமாக தரை இறக்கம்

கொல்கத்தா, நவ. 10– என்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மும்பையில் இருந்து புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானம், கொல்கத்தாவில் அவசர அவசரமாக தரை இறக்கப்பட்டது. மும்பை விமான நிலையத்தில் இருந்து 188 பேருடன் மும்பையில் இருந்து நேற்று மாலை 7.10 மணிக்கு ஸ்பைஸ்ஜெட் விமானம் புறப்பட இருந்தது. ஆனால், சில காரணங்களுக்காக விமானம் 2 மணிநேரம் தாமதமாக புறப்பட்டது. விமானம் வானத்தில் பறந்து கொண்டிருந்த போது, அதன் என்ஜினில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனை உணர்ந்த விமானி, […]

Loading

செய்திகள்

20 நிமிடம் தாமதம்.. ‘தண்டால்’ எடுத்த ராகுல்

போபால், நவ. 10– காங்கிரஸ் நிகழ்ச்சிக்கு 20 நிமிடம் தாமதமாக ராகுல் காந்தி வந்ததால், அவர் மேடையிலேயே 10 முறை தண்டால் எடுத்து அங்கிருந்தவர்களை ஆச்சரியப்படுத்தினார். மத்திய பிரதேச மாநிலம் பச்மாரியில் நேற்று காங்கிரஸ் மாநில தலைவர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. இதற்கு மத்திய பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் சச்சின் ராவ் தலைமை தாங்கினார். இந்த பயிற்சி முகாமில் சிறப்பு விருந்தினராக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கலந்துகொள்வதாக இருந்தது. இதற்காக பீகார் தேர்தல் […]

Loading

செய்திகள்

எஸ்ஐஆர் மூலம் தி.மு.க.வை அழிக்கும் முயற்சி நடக்காது: ஸ்டாலின் எச்சரிக்கை

ஸ்ரீரங்கம், நவ. 10– எஸ்ஐஆர் மூலம் தி.மு.க.வை அழிக்கும் முயற்சி நடக்காது என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார். திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. இளைய மகன் திருமண விழா சோமரசம்பேட்டையில் நடைபெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருமணத்தை முன் நின்று நடத்தி வைத்தார். திருமண விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:– தி.மு.க.வை அழிக்கப்போகிறோம் எனக்கூறி எதிரிகள் புதுப்புது உக்திகளை கையாளுகின்றனர். வருமான வரி, எஸ்ஐஆர் உள்ளிட்ட பல்வேறு உத்திகளோடு தமிழகத்தை நோக்கி வருகிறார்கள். எத்தனை உக்திகளை கையாண்டாலும் […]

Loading