செய்திகள்

திருவண்ணாமலையில் உலக சாதனையாக 1500 பரதநாட்டிய கலைஞர்கள் பங்கேற்ற பரத தீபம் நிகழ்ச்சி

திருவண்ணாமலை நவ. 25-– திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கலைக்கல்லூரி அருகிலுள்ள சந்தைமேடு மைதானத்தில் பரணி தீபத்தை வரவேற்கும் வகையில் உலக சாதனை நிகழ்வாக பரத தீபம் என்ற தலைப்பில் பரத நாட்டிய கலைஞர்கள் பங்கேற்ற பரத நாட்டிய நிகழ்ச்சி நடந்தது. இதில் தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த 1500க்கும் மேற்பட்ட பரத நாட்டிய கலைஞர்கள் கலந்து கொண்டனர். இதில் அகல்விளக்கு, மலை, சிவசிவ என்ற வடிவில் பரத நாட்டிய கலைஞர்கள் நின்றபடி2 […]

Loading

செய்திகள்

திருவள்ளூர் மாவட்டத்தில் 1 லட்சத்து 12 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: உதயநிதி வழங்கினார்.

திருவள்ளூர், நவ. 25– துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு நகராட்சி சுந்தர சோழபுரத்தில் நடைபெற்ற அரசு விழாவில் 333.26 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முடிவுற்ற 377 திட்டப்பணிகளை திறந்து வைத்து, 137.38 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 211 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 1,12,294 பயனாளிகளுக்கு 1000.34 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது: திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெறுகின்ற இந்த பிரம்மாண்டமான நலத்திட்ட உதவிகள் வழங்கும் […]

Loading

செய்திகள்

மாற்றுத்திறனாளி மனுக்களுக்கு உடனடி நடவடிக்கை: வேலூர் கலெக்டர் உத்தரவு

வேலூர், நவ.25– மாற்றுத்திறனாளிகளிடமிருந்து பெறப்படும் மனுக்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் சுப்புலெட்சுமி உத்தரவிட்டார். வேலூர் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைத்தீர்வு நாள் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் சுப்புலெட்சுமி பொதுமக்களிடம் 410 கோரிக்கை மனுக்களை பெற்றார். வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக காயிதே மில்லத் கூட்டரங்கில் மக்கள் குறைத்தீர்வு நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் சுப்புலெட்சுமி தலைமையில் நடைபெற்றது. மக்கள் குறைத்தீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து வருவாய்த்துறை நிலப்பட்டா, பட்டா மாறுதல், […]

Loading

செய்திகள்

‘‘இசை என்பது வெறும் கலை வடிவம் மட்டுமல்ல, ஆன்மாவை உயர்த்தும் ஓர் புனிதப் பாதை’’: டி.எஸ். திருமூர்த்தி

சென்னை, நவ. 20: ‘‘இசை என்பது வெறும் கலை வடிவம் மட்டுமல்ல, இசை மூலம் ஆன்மாவை உயர்த்தும் ஒரு புனிதமான பாதை’’ என்று 15வது ஆண்டு டிரினிட்டி மிரர் இசைக் கலைவிழா – 2025ஐத் துவக்கி வைத்த ஐ.நாவின் இந்தியாவுக்கான முன்னாள் பிரதிநிதி டி.எஸ். திருமூர்த்தி பெருமிதத்தோடு கூறினார். அவர் உரையாற்றும் போது, ​​இந்தியாவின் பாரம்பரிய கலைகளின் செழுமை மற்றும் அதன் பரிணாம வளர்ச்சியைப் பற்றிக் குறிப்பிட்டார். வருடாந்திர இசை மற்றும் நடன விழாவை 15 ஆண்டுகளாக […]

Loading

செய்திகள்

இந்தியாவுக்கு ரூ.822 கோடிக்கு ஆயுதங்களை விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல்

வாஷிங்டன், நவ.20- இந்தியாவுக்கு ரூ.822 கோடி மதிப்பிலான ஆயுதங்களை விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. அதிபர் டிரம்ப் விதித்த கூடுதல் வரியால் பாதிக்கப்பட்ட இந்தியா –அமெரிக்கா இடையேயான உறவு மற்றும் வர்த்தகம் தற்போது மெல்ல மெல்ல மீண்டெழுந்து வருகிறது. இந்த சூழலில், இந்திய ராணுவத்திற்கு ரூ.822 கோடி மதிப்பிலான ஆயுதங்களை விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம், ராணுவ வீரர்கள் தோளில் வைத்து ஏவும் வகையிலான 100 எப்ஜிஎம் 148 ஜாவெலின் ஏவுகணைகள், 25 […]

Loading

செய்திகள்

அரசியலை விட்டு வெளியேற மாட்டேன் பிரசாந்த் கிஷோர் பேட்டி

பாட்னா, நவ. 18– பீகார் சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு 100 சதவீதம் நானே பொறுப்பேற்கிறேன் என்று ஜன்சுராஜ் கட்சியின் நிறுவனர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். பீகார் சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 202 தொகுதிகளில் வெற்றி பெற்று பெரும் பலத்துடன் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. இந்தியா கூட்டணியில் போட்டியிட்ட ராஷ்டீரிய ஜனதா தளம் 25 தொகுதிகளிலும், காங்கிரஸ் 6 தொகுதிகளிலும் மட்டுமே வெற்றி பெற்றது. 238 தொகுதிகளில் போட்டியிட்ட ஜன்சுராஜ் கட்சி ஒரு இடத்தில்கூட வெற்றி […]

Loading

செய்திகள்

விக்கிரவாண்டி அருகே பைக் மீது லாரி மோதியதில் தந்தை–மகள் உயிரிழப்பு

விக்கிரவாண்டி, நவ.18 – விக்கிரவாண்டி அருகே பைக் மீது லாரி மோதிய விபத்தில் மகளை கல்லூரிக்கு அழைத்து சென்ற தந்தை மகள் இருவரும் உயிரிழந்தனர். செஞ்சி அருகே துத்திப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன் வயது 42, இவரது மகள் சூரிய பிரியா வயது 17. இவர் பாண்டிச்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி நர்சிங் முதலாமாண்டு படித்து வந்தார். இந்நிலையில் இன்று காலை 5 மணியளவில் கல்லூரிக்கு அனுப்புவதற்காக தனது வீட்டிலிருந்து பைக்கில் மகள் சூரிய பிரியாவை […]

Loading

செய்திகள்

தைப்பூச விழாவையொட்டி 57 ரெயில்கள் மேல்மருவத்தூரில் நின்று செல்லும்: ரெயில்வே அறிவிப்பு

சென்னை, நவ.18–- இருமுடி, தைப்பூச விழாவையொட்டி 57 ரெயில்கள் மேல்மருவத்தூர் ரெயில் நிலையத்தில் தற்காலிகமாக நின்று செல்லும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–- இருமுடி மற்றும் தைப்பூச விழாவை முன்னிட்டு பக்தர்கள் வசதிக்காக மேல்மருவத்தூர் ரெயில் நிலையத்தில் 57 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் தற்காலிகமாக ஒரு நிமிடம் நின்று செல்லும். அதன் விவரம் வருமாறு:- * எழும்பூர் – -மதுரை வைகை எக்ஸ்பிரஸ், எழும்பூர் – -மதுரை பாண்டியன் எக்ஸ்பிரஸ், […]

Loading

செய்திகள்

ஆந்திராவில் நக்சல் அமைப்பின் தலைவன் உட்பட 6 மாவோயிஸ்ட்கள் என்கவுன்டரில் சுட்டுக்கொலை

விசாகப்பட்டினம், நவ. 18– ஆந்திரப் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் நக்சல் அமைப்பின் தலைவன் மத்வி ஹித்மா உள்பட 6 மாவோயிஸ்ட்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஆந்திரப் பிரதேசத்தின் அல்லுரி சீதாராமராஜு மாவட்டத்தில் மாவோயிஸ்ட்கள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் போலீசாருடன் இணைந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இன்று காலை 6.30 மணியளவில் அங்கு பதுங்கியிருந்த மாவோயிஸ்ட்கள், பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கியால் சுட்டனர். பாதுகாப்பு படையினரும் தக்க பதிலடி […]

Loading

செய்திகள்

விழுப்புரம் வந்த ஸ்பிக் உர மூட்டைகள்: கலெக்டர் ஆய்வு

விழுப்புரம், நவ. 18– விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கம் இரயில் நிலையத்திற்கு, தூத்துக்குடி இரயில் நிலையத்திலிருந்து சரக்கு இரயில் மூலம் வந்தடைந்த ஸ்பிக் SPIC நிறுவன உர மூட்டைகளை மாவட்ட கலெக்டர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அப்போது அவர் கூறியதாவது: விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்திற்கு சரக்கு ரயில் மூலம் தூத்துக்குடி ரயில் நிலையத்திற்கு ஸ்பிக் உர நிறுவனத்தின் 1299 மெ.டன் உரமூட்டைகள் வந்தடைந்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் தற்போது சம்பா நெல் சாகுபடிக்கான […]

Loading