செய்திகள்

கோவாவில் 77 அடி உயர ராமர் சிலை பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கிறார்

கோவா, நவ. 27– இந்தியாவின் மிக உயரமான (77 அடி) ராமரின் வெண்கல சிலையை நாளை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். கோவாவின் கனகோனாவில் (தெற்கு கோவா) உள்ள ஸ்ரீ சமஸ்தானம் கோகர்ண பரதகலி ஜீவோட்டம் மடத்தில் நிறுவப்பட்ட ஸ்ரீ ராமரின் 77 அடி வெண்கல சிலை, நாளை பிரதிஷ்டை செய்யப்படுகிறது. இதற்கான பிராண பிரதிஷ்டை பூஜைகள் இன்று காலை ஸ்ரீமத் வித்யாதீஷ் தீர்த்த சுவாமியால் துவங்கி நடைபெற்று வருகிறது. நாளை பிற்பகல் பிரதமர் மோடி ராமர் […]

Loading

செய்திகள்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைவு ஒரு சவரன் ரூ.94,160

சென்னை, நவ. 27– சென்னையில் இன்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து, ஒரு சவரன் ரூ.94,160க்கு விற்பனை ஆகிறது. தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக வரலாறு காணாத அளவுக்கு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்று 22 காரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 640 உயர்ந்து, நீண்ட நாள்களுக்கு பிறகு ஒரு சவரன் மீண்டும் ரூ. 94 ஆயிரத்தை கடந்து ரூ. 94,400-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை சவரனுக்கு […]

Loading

செய்திகள்

உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டி டிசம்பர் 8–ந் தேதி சென்னையில் துணை முதலமைச்சர் உதயநிதி துவக்குகிறார்

சென்னை, நவ. 26– எஸ்டிஏடி உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டி சென்னையில் டிசம்பர் 9-–ந் தேதி தொடங்குகிறது. இதில் 12 நாடுகளின் அணிகள் பங்கேற்கின்றன. வோ்ல்ட் ஸ்குவாஷ், எஸ்ஆா்எஃப்ஐ, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தமிழ்நாடு ஸ்குவாஷ் சங்கம் சாா்பில் சென்னையில் இரண்டாவது முறையாக உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டி நடைபெறுகிறது. ஏற்கெனவே கடந்த 2023-இல் நடைபெற்ற போட்டியில். எகிப்து தங்கமும், மலேசியா வெள்ளியும், இந்தியா வெண்கலமும் வென்றன. தற்போதைய உலகக் கோப்பையில் இந்தியா, ஈரான், ஜப்பான், […]

Loading

செய்திகள்

2030 காமன்வெல்த் விளையாட்டுகளை அகமதாபாத்தில் நடத்த அறிவிப்பு வெளியீடு

அமதாபாத், நவ. 26: அகமதாபாத்தில் 2030ஆம் ஆண்டிற்கான காமன்வெல்த் விளையாட்டுகள் நடத்தும் உரிமை வழங்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியீட்டுள்ளது.காமன்வெல்த் அமைப்பு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், 2030 நூற்றாண்டு காமன்வெல்த் விளையாட்டுகளை நடத்தும் நகராக அகமதாபாத் நகரை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 2010-இல் டெல்லி காமன்வெல்த் விளையாட்டுகளுக்குப் பிறகு, இந்தியாவில் மீண்டும் இந்த உலகளாவிய பன்முக விளையாட்டு விழா நடைபெற இருப்பது ஒரு முக்கியமான நிகழ்வாகக் கருதப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடியுடன் பல தலைவர்களும் இந்த அறிவிப்பை வரவேற்று, இது […]

Loading

செய்திகள்

சென்னை கே.கே.நகர்–கூடுவாஞ்சேரியில் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் 2 புதிய விற்பனை நிலையம் திறப்பு

சென்னை, நவ. 26– சுத்தமான நெய் இனிப்புகள் மற்றும் காரஸ்களுக்குப் பெயர் பெற்ற ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ், சென்னையில் நாளை (27ந் தேதி) கே.கே. நகர் (காசி தியேட்டருக்கு எதிரே) அஞ்சுகம் நகர், 2வது தெரு, ஜாஃபர்கான் பேட்டை, மற்றும் கூடுவாஞ்சேரி (ஜிஆர்டி ஜூவல்லரிக்கு எதிரே) காந்தி வளாகம், ஜிஎஸ்டி சாலையில் 2 புதிய கிளைகளைத் திறக்கிறது. தொடக்க நாள் சலுகையில் 1 கிலோ இனிப்புகள் வாங்கும் போது 1 கிலோ மைசூர்பா பரிசாகக் கிடைக்கும். இந்த […]

Loading

செய்திகள்

மக்கள் பிரச்சினைகளுக்காக ஆங்காங்கே போராட்டம் நடத்துங்கள் மாவட்ட செயலாளர்களுக்கு எடப்பாடி அறிவுறுத்தல்

சென்னை, நவ.26 சென்னை அண்ணா தி.மு.க. தலைமை அலுவலகத்தில், எடப்பாடி பழனிசாமி மாவட்ட செயலாளர்களுடன் காணொலி காட்சி மூலமாக ஆலோசனை நடத்தினார். அப்போது சட்டமன்றத் தேர்தல் மற்றும் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப்பணிகள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் எடப்பாடிபழனிசாமி பேசியதாவது:-– அனைத்து மாவட்டங்களிலும், மாவட்ட செயலாளர்கள் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப்பணியை முன்னுரிமை கொடுத்து பணியாற்ற வேண்டும். தங்களது மாவட்டத்தில் இருக்கின்ற, தொகுதியில் உள்ள அனைத்து பகுதிகளிலும் வாக்காளர் படிவம் கொடுக்கப்பட்டு விட்டதா? என்று ஆய்வு செய்ய […]

Loading

செய்திகள்

எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்

சென்னை, நவ. 26– கே.ஏ. செங்கோட்டையன் தனது எம்.எல்.ஏ. பதவியை இன்று ராஜினாமா செய்தார். விஜய் முன்னிலையில் நாளை த.வெ.க.வில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அண்ணா தி.மு.க. மூத்த நிர்வாகிகளில் ஒருவரான கே.ஏ.செங்கோட்டையன், 1977-ம் ஆண்டு முதல் 9 முறை எம்.எல்.ஏ.வாக இருந்துள்ளார். முதல்முறை சத்தியமங்கலம் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், அதன் பிறகு 8 முறை கோபிச்செட்டிபாளையம் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அண்ணா தி.மு.க. ஆட்சி காலத்தில் வனத்துறை, போக்குவரத்து துறை, […]

Loading

செய்திகள்

கார் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு நிவாரணத் தொகை: கடலூர் கலெக்டர் வழங்கினார்

கடலூர், நவ. 26– கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், கார் விபத்தில் காயமடைந்த 2 நபர்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியாக தலா ரூ.50 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.1 லட்சம் நிவாரணத் தொகைக்கான காசோலையினை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது: கடலூர் வட்டத்தை சேர்ந்த கௌசல்யா மற்றும் அவரது கணவர் எள்ளப்பன் ஆகியோர் விழுப்புரத்திலிருந்து சென்னை நோக்கி 20.09.2025 அன்று காரில் பயணம் மேற்கொண்ட போது, ஐயூர் அகரம் பாலம் […]

Loading

செய்திகள்

பாலின சமத்துவ விழிப்புணர்வு பேரணி: விழுப்புரம் கலெக்டர் துவக்கி வைத்தார்

விழுப்புரம், நவ. 26– விழுப்புரம் மாவட்டம் மணம்புண்டியில் உள்ள முகையூர் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்சார்பில் தேசிய அளவிலான பாலின சமத்துவ விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் கொடியசைத்து துவக்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் சமூக ஒருங்கிணைப்பு பிரிவின் மூலம் பாலினம் தொடர்பான விழிப்புணர்வுகள், பயிற்சிகள் 37 மாவட்டங்களில் 388 வட்டாரங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பெண்களுக்கு எதிரான […]

Loading

செய்திகள்

சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் பயணிகள் தவறவிட்ட ரூ. 80 லட்சம் மதிப்பிலான பொருட்கள் மீட்பு

சென்னை, நவ. 25– சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் 2025ம் ஆண்டில் ரெயில்வே பாதுகாப்புப் படையினர் ரூ.79,57,509 மதிப்புள்ள 1769 பொருட்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்தனர். தெற்கு ரெயில்வேயின் ரெயில்வே பாதுகாப்புப் படையின் இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஸ்ரீ அருள் ஜோதியின் வழிகாட்டுதலின் கீழ், சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் திருட்டு தடுப்பு மற்றும் பயணிகள் பாதுகாப்பு குறித்த தீவிர விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தப் பிரச்சாரங்கள் பயணிகளுக்கு தங்கள் உடைமைகளைப் பாதுகாப்பது மற்றும் பயணத்தின் போது […]

Loading