செய்திகள்

விழுப்புரம் ரெயில் நிலைய மேம்பாட்டு பணிகள்: தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் ஆய்வு

விழுப்புரம், டிச.25- விழுப்புரம் ரெயில் நிலையத்தில் தென்னக ரெயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் ஆய்வு மேற்கொண்டார். தென்னக ரெயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் ருவண்ணாமலையில் ஆய்வுப்பணியை முடித்து விட்டு மாலையில் தனி ஆய்வு ரெயில் மூலம் விழுப்புரம் ரெயில் நிலையத்திற்கு வருகை தந்தார். அவர் ரெயில் நிலையத்தில் உள்ள நடைமேடைகளில் பயணிகளுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளனவா? என்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது பயணிகளின் அடிப்படை வசதிகளை உறுதி செய்வதுடன் […]

Loading

செய்திகள்

சத்துவாச்சாரி ஆவின் பாலகத்தில் புதிய குல்பி ஐஸ்கீரிம் விற்பனை: கலெக்டர் சுப்புலெட்சுமி துவக்கி வைத்தார்

வேலூர், டிச. 25– வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள ஆவின் மைய பாலகத்தில் 40 மி.லி அளவு கொண்ட புதிய குல்பி ஐஸ்கீரிம் விற்பனையை கலெக்டர் வே.இரா.சுப்புலெட்சுமி தொடங்கி வைத்தார். வேலூர் ஆவின் நிறுவனத்தில் ஏற்கனவே 25 மி.லி மற்றும் 70 மி.லி அளவு கொண்ட குல்பி ஐஸ்கீரிம் வகைகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இவ்விரண்டு வகைகளிலும் நாளொன்றுக்கு 4000 எண்ணிக்கையிலான குல்பி ஐஸ்கீரிம்கள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. ஆவின் குல்பி ஐஸ்கீரிம் வகைகளுக்கு சந்தையில் […]

Loading

செய்திகள்

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்: சென்னையில் 8 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு

சென்னை, டிச. 24– கிறிஸ்துமஸ் பண்டிகையை பொதுமக்கள் அமைதியாகவும், பாதுகாப்பாகவும் கொண்டாடுவதற்கு 8 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண் உத்தரவின்பேரில், பொதுமக்கள் பாதுகாப்புக்காகவும், நலனுக்காகவும் பல்வேறு சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக நாளை கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் தேவாலயங்களுக்கு செல்வதால், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பொதுமக்கள் பாதுகாப்பிற்க்காகவும், கூட்ட நெரிசல் ஏற்படாத வண்ணமும், இன்று இரவு முதல் நாளை வரை, சென்னை பெருநகர […]

Loading

செய்திகள்

விண்ணில் பாய்ந்தது ‘இஸ்ரோ’வின் ‘பாகுபலி எல்விஎம்–3 எம்6 ராக்கெட்’

ஸ்ரீஹரிகோட்டா, டிச. 24– அமெரிக்காவின் ‘புளூபேர்ட்’ செயற்கைக்கோளுடன் இஸ்ரோவின் (இந்திய விண்வெளி ஆய்வுக் கழகம்) பாகுபலி ராக்கெட் இன்று காலை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. திட்டமிட்டபடி துல்லியமாக சுற்று வட்டப்பாதையில் செயற்கைக்கோள் நிலை நிறுத்தப்பட்டது என ‘இஸ்ரோ’ தெரிவித்தது. ‘இஸ்ரோ’ வணிக ரீதியாகவும் செயற்கைக்கோள்களை விண்ணில் நிலைநிறுத்தி வருகிறது. அதன்படி அமெரிக்காவின் ஏஎஸ்டி ஸ்பேஸ்மொபைல் நிறுவனத்தின் புளூபேர்ட்–6 எனும் நவீன தகவல்தொடர்பு செயற்கைக்கோளை, இஸ்ரோவின் எல்விஎம்–3 எம்6 ராக்கெட் மூலம் செலுத்த முடிவு […]

Loading

செய்திகள்

சென்ட்ரல் வங்கி நிறுவன தினத்தில் சென்னை மண்டல அலுவலகத்தில் மரம் நடும் விழா நடைப்பயணத்துக்கு மண்டல தலைவர் சசிதர் ஏற்பாடு

சென்னை, டிச. 24– நாட்டின் முக்கிய பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான சென்ட்ரல் வங்கி, அதன் 115வது நிறுவன தினத்தைக் கொண்டாடியது. சர் சொராப்ஜி போச்கானாவாலா நிறுவிய இந்த வங்கி, தேசத்திற்கு அர்ப்பணிப்புடன் சேவை செய்து 115 ஆண்டுகளை நிறைவு செய்தது. இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில், சென்னை மண்டல அலுவலகம் 115 மரக்கன்றுகள் நடுதல், நடைப்பயணம், தூய்மை இயக்கம், நன்கொடை முகாம் மற்றும் மாணவர்களுக்கான வினாடி வினா போட்டி ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு வார கால நிகழ்ச்சியை […]

Loading

செய்திகள்

வேலூர் நாராயணி பீடத்தில் 10,008 மகளிருக்கு வஸ்தர தானம்

வேலூர், டிச. 24– வேலூர் நாயாயணி பீடம் மற்றும் தங்க கோயிலை நிறுவிய ஸ்ரீ சக்தி அம்மாவின் 50வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு 10,008 மகளிருக்கு வஸ்தர தானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சக்தி அம்மா பங்கேற்று அனைத்து மகளிரையும் ஆசீர்வதித்து புடவைகளையும் வழங்கினார். கலவை சச்சுதாநந்த சுவாமிகள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மலர் மாலை அணிவித்து அவரைக் கவுரவித்தார். நிகழ்ச்சியில் நாராயணி மருத்துவமனை இயக்குனர் என்.பாலாஜி, தங்கக் கோயில் இயக்குனர் சுரேஷ்பாபு, அறங்காவலர் […]

Loading

செய்திகள்

வேலூர் ஸ்ரீ நாராயணி ஸ்ரீ சக்தி அம்மா ஆசியுடன் செவிலியர் கல்லூரி விளக்கேற்றும் விழா

வேலூர், டிச. 24– வேலூர் ஸ்ரீபுரம் ஸ்ரீ நாராயணி செவிலியர் கல்லூரியின் விளக்கேற்றும் விழா இயக்குனர் என்.பாலாஜி தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக வேலூர் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் எம். ரோகிணி தேவி, நடிகரும் வசனகர்த்தாவுமான மிர்ச்சி சிவா இணைந்து விளக்கேற்றி தொடக்கிவைத்து சிறப்புரை ஆற்றினார்கள். நிறுவனர் ஸ்ரீ சக்தி அம்மா ஆசியுடன் தொடங்கியது இந்நிகழ்ச்சி. நாராயணி நர்சிங் கல்லூரியின் 20 ஆம் ஆண்டிலும், டிப்ளமோ நர்சிங் கல்லூரியின் 18 ஆம் ஆண்டிலும் […]

Loading

செய்திகள்

டாகோர் – திருவள்ளூர் டிசிஏ கிரிக்கெட் போட்டி: 7 விக்கெட் எடுத்து இளம் வீரர் விஹான் அபாரம்

திருவள்ளூர், டிச.24: திருவள்ளூர் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் 12 வயதுக்குட்டுப் பட்டவர்களுக்கான டாகோர் – திருவள்ளூர் டிசிஏ கிரிக்கெட் போட்டி பட்டாமிராமி இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. போட்டியை கல்லூரி நிர்வாக இயக்குநர் டாக்டர் ராஜேந்திர நாயுடு தொடங்கி வைத்தார். முதல் நாளில் 2 லீக் போட்டிகள் நடைபெற்றது. முதல் போட்டியில் வேலூர் அணி 40 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 91 ரன்கள் எடுத்தது. எஸ். மிதுன் 31 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். பந்துவீச்சில் […]

Loading

செய்திகள்

எந்த பாசிச சக்திகளாலும் தமிழ்நாட்டை ஒன்றும் செய்ய முடியாது கிறிஸ்துமஸ் விழாவில் ஸ்டாலின் பேச்சு

சென்னை, டிச.24-– ஜனநாயகத்தில் வலிமை மிக்க சக்திகள் ஒன்று சேர்ந்து இருக்கும் போது எந்த பாசிச சக்திகளாலும் தமிழ்நாட்டை ஒன்றும் செய்ய முடியாது என கிறிஸ்துமஸ் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். சென்னை பெரம்பூர் டான்போஸ்கோ பள்ளி வளாகத்தில் தி.மு.க. சிறுபான்மை நல உரிமைப் பிரிவு சார்பில் நடைபெற்ற, “கிறிஸ்துமஸ் பெருவிழா”-வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு கேக் வெட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கினார். பின்னர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-– கிறிஸ்துமஸ் என்பது எல்லோருக்கும் மகிழ்ச்சியை தரக்கூடிய […]

Loading

செய்திகள்

ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் ராகவேந்திரா கோவிலை சுத்தப்படுத்திய 72 தன்னார்வலர்கள்

சென்னை, டிச.24– சென்னை, திருவல்லிக்கேணியில் உள்ள ராகவேந்திரா கோவிலில், கோபாலபுரத்தில் உள்ள ஒய்ஏசிடி அறக்கட்டளையுடன் இணைந்து, கோவில் சுத்தம் செய்வதற்கான பரமம் பவித்ரம் – 65வது திட்டத்தை ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் ஆதரித்துள்ளது. குரு ராகவேந்திரரின் தெய்வீக ஆசீர்வாதங்களுடன் 72 தன்னார்வலர்கள் கொண்ட எங்கள் குழு, கோவில் அதன் அனைத்து மகிமையிலும் பிரகாசிப்பதை உறுதி செய்ய அயராது உழைத்து, 4 குழுக்களாகப் பிரிக்கப்பட்டது. ஒவ்வொன்றும் வெள்ளிப் பாத்திரங்கள், தரைத்தளம், முதல் தளம் மற்றும் 2வது தளம் உள்ளிட்ட […]

Loading