செய்திகள்

திருப்பதி கோவிலில் பக்தர்கள் 8-ந்தேதி வரை சொர்க்க வாசல் வழியாக சென்று சாமி தரிசனம்

திருமலை, ஜன.2-– திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த 30-ந்தேதி முதல் நேற்று வரை வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்க வாசல் தரிசனத்துக்காக பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 8-ந்தேதி வரை சொர்க்க வாசல் தரிசன டோக்கன்கள் இல்லாமல் பக்தர்கள் சொர்க்க வாசல் வழியாக சென்று சாமி தரிசனம் செய்யலாம் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. 13½ கோடி லட்டுகள் விற்று சாதனை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த ஆண்டு 13½ கோடி லட்டுகள் விற்பனையாகி புதிய வரலாற்று […]

Loading

செய்திகள்

இரு சக்கர வாகனம் மீது மோதிய தனியார் பேருந்து தீப்பிடித்து எரிந்தது: 23 தொழிலாளர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

ஊத்தங்கரை, ஜன. 2– ஊத்தங்கரை அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தில் தனியார் பேருந்து மற்றும் இரு சக்கர வாகனத்தில் தீப்பற்றி எரிந்து நாசமாகின. இந்த விபத்தின் போது, தனியார் நிறுவனத்தின் பேருந்தில் இருந்த 23 தொழிலாளர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே உள்ள கொட்டுகாரம்பட்டி பகுதியில் இருந்து போச்சம்பள்ளி சிப்காட்டில் உள்ள தனியார் ஷூ கம்பெனிக்கு ஆட்களை ஏற்றிக்கொண்டு இன்று காலை 6.50 மணிக்கு பேருந்து புறப்பட்டுள்ளது. இந்தப் பேருந்தை கல்லாவியைச் […]

Loading

செய்திகள்

சபரிமலை ஐயப்பன் கோவிலில் 3 நாட்களில் 2.25 லட்சம் பேர் சாமி தரிசனம்

சபரிமலை, ஜன.2- சபரிமலையில் ஆங்கில புத்தாண்டு தினமான நேற்று ஏராளமானோர் குவிந்தனர். கடந்த 3 நாட்களில் 2.25 லட்சம் பேர் சாமி தரிசனம் செய்தனர். சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடப்பு சீசனையொட்டி கடந்த மாதம் 27-ந்தேதி மண்டல பூஜை முடிந்தது. தொடர்ந்து மகரவிளக்கு பூஜைக்காக கடந்த மாதம் 30-ந்தேதி மாலையில் கோவில் நடை திறக்கப்பட்டது. ஏற்கனவே வருகிற 19-ந்தேதி வரை ஆன்லைன் முன்பதிவு (தினசரி 70 ஆயிரம் பக்தர்கள்) நிறைவடைந்த நிலையில், ஆன்லைன் முன்பதிவு செய்யாத பக்தர்கள் […]

Loading

செய்திகள்

குன்னூரில் கொட்டித் தீர்த்த கனமழை: 20-க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு

மேட்டுப்பாளையம், ஜன. 2– நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில வாரங்களாக உறைபனி காணப்பட்டது. இதனால் கடுமையான குளிரும் நிலவி வருகிறது. இந்த நிலையில் நேற்று மாலை முதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இரவு 11 மணிக்கு பிறகு கனமழை கொட்டி தீர்த்தது. இரவு தொடங்கிய மழையானது இன்று காலை வரை விடிய, விடிய வெளுத்து வாங்கியது. இந்த […]

Loading

செய்திகள்

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆங்கிலப் புத்தாண்டு விழா கோலாகலம்

மேல்மருவத்தூர், ஜன. 2– மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆங்கிலப் புத்தாண்டு விழா மிக விமர்சையாக நடைபெற்றது. இதையொட்டி 31–ந் தேதி அதிகாலை 3 மணி அளவில் மங்கல இசையுடன் தொடங்கிய நிகழ்ச்சியில் 4 மணி அளவில் ஆதிபராசக்தி அம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. மாலை 4.30 மணி அளவில் உலக நன்மைக்காகவும், இயற்கை வளம் பெறவும் கலச, விளக்கு, வேள்வி பூஜையை துணைத்தலைவர் ஸ்ரீ தேவி ரமேஷ், அறங்காவலர் உமாதேவி ஆகியோர் கலந்து கொண்டு பிரதான […]

Loading

செய்திகள்

ஆவடி மாநகர புதிய போலீஸ் கமிஷனராக பிரேம் ஆனந்த் சின்ஹா பொறுப்பேற்றார்.

ஆவடி, ஜன.2-– ஆவடி மாநகர புதிய போலீஸ் கமிஷனராகபிரேம் ஆனந்த் சின்ஹா பொறுப்பேற்றார். ஆவடி மாநகர போலீஸ் கமிஷனராக இருந்த சங்கர், தமிழ்நாடு சிறைத்துறை மற்றும் சீர்திருத்த பணிகள் துறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து தென் மண்டல ஐ.ஜி.யாக பணியாற்றி வந்த பிரேம் ஆனந்த் சின்ஹா, காவல்துறை கூடுதல் இயக்குனராக பதவி உயர்வு பெற்று, ஆவடி போலீஸ் கமிஷனரகத்தின் 4-வது போலீஸ் கமிஷனராக பொறுப் பேற்றுக்கொண்டார். அவருக்கு கூடுதல் போலீஸ் கமிஷனர் பவானீஸ்வரி மற்றும் போலீஸ் உயர் […]

Loading

செய்திகள்

ஆங்கில புத்தாண்டு: வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு 13 ஆயிரத்து 200 பேர் வருகை

சென்னை, ஜன.2- ஆங்கில புத்தாண்டு தினத்தன்று வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு 13 ஆயிரத்து 200 பேர் வந்தனர் என்று அதிகாரி தெரிவித்துள்ளார். சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் ஏராளமான விலங்குகள், பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. நேற்று ஆங்கில புத்தாண்டையொட்டி சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் குடும்பம், குடும்பமாக வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு வந்தனர். இதனால் பூங்காவில் எங்கு பார்த்தாலும் பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது. […]

Loading

செய்திகள்

சிதம்பரம் நடராஜர் கோவில் தேரோட்டம்: பல்லாயிரகணக்கான பக்தர்கள் தரிசனம்

சிதம்பரம், ஜன. 2– சிதம்பரம் நடராஜர் கோயிலில் சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்தியின் மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவம் டிசம்பர் 25-ம் தேதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் முக்கிய திருவிழாவான தேர் திருவிழா இன்று நடைபெற்றது. நாளை மார்கழி ஆருத்ரா தரிசனமும் நடைபெறுகிறது. உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனமும், ஆனி மாதம் ஆனித் திருமஞ்சன தரிசனமும் ஆகிய இரு திருவிழாக்கள் தொன்று தொட்டு நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த […]

Loading

செய்திகள்

கலைக்குழு டி.எம்.ஜானி மரணம்: எடப்பாடி இரங்கல்

சென்னை, ஜன.1– அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:– தென் சென்னை தெற்கு (மேற்கு) மாவட்டத்தைச் சேர்ந்த, ‘டி.எம். ஜானி கலைக்குழு’-வை நடத்தி வந்த டி.எம். ஜானி உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன். கழகத்தின் மீதும், கழகத் தலைமையின் மீதும் மிகுந்த விசுவாசம் கொண்டிருந்த ஆரம்பகால கழக உடன்பிறப்பு டி.எம். ஜானி தனது கலைக்குழுவின் மூலம், கழகத்தின் கொள்கைகளையும், முந்தைய கழக அரசுகளின் சாதனைகளையும், திமுக […]

Loading

செய்திகள்

சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் நியமன மசோதா திருப்பி அனுப்பிய ஜனாதிபதி

சென்னை, டிச. 30: சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் நியமன விவகாரம் தொடர்பான சட்டசபை சட்ட திருத்த மசோதாவை ஜனாதிபதி 3 ஆண்டுகளுக்கு பின் திருப்பி அனுப்பினார். தமிழக அரசு கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதம், சென்னை பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதாவை சட்டசபையில் தாக்கல் செய்து நிறைவேற்றியது. இந்த சட்ட திருத்தத்தின் மூலம், சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் மற்றும் நீக்கம் தொடர்பான அதிகாரங்களை, வேந்தரான கவர்னரிடம் இருந்து மாநில அரசுக்கு மாற்றும் வகையில் திருத்தங்கள் செய்யப்பட்டு […]

Loading