செய்திகள்

விஜய் முன்னிலையில் த.வெ.க.வில் இணைந்த காமராஜர் பேத்தி மயூரி கண்ணன்

சென்னை, ஜன.6- காமராஜர் பேத்தி உள்ளிட்ட பலர், விஜய் முன்னிலையில் த.வெ.க.வில் இணைந்தனர். த.வெ.க.வில் பல்வேறு கட்சியினர் இணைந்து வருகின்றனர். நேற்றும் பல்வேறு கட்சியை சேர்ந்தவர்கள் விஜய் முன்னிலையில் த.வெ.க.வில் இணைந்தனர். இதற்காக, த.வெ.க. தலைவர் விஜய் பகல் 1 மணியளவில் பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு வந்தார். அவரை கட்சி பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் வரவேற்றார். அதனைத்தொடர்ந்து, த.வெ.க.வில் இணைந்த பிரபலங்களுடன் விஜய் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார். த.வெ.க.வில் இணைந்தவர்கள் விவரம் வருமாறு:- தஞ்சாவூர் மத்திய […]

Loading

செய்திகள்

மாற்றுத்திறனாளிக்கு சக்கர நாற்காலி: ராணிப்பேட்டை கலெக்டர் வழங்கினார்

ராணிப்பேட்டை, ஜன. 6: இராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் ம் கலெக்டர் ஜெ.யு.சந்திரகலா பொதுமக்களிடமிருந்தும், மாற்றுத்திறனாளிகளிடமிருந்தும் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு குறைகளை கேட்டறிந்தார். மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து வருவாய்த்துறை நிலப்பட்டா குறைகள், பட்டா மாறுதல், இலவச வீட்டு மனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை வேளாண்மைத் துறை, காவல்துறை. ஊரக வளர்ச்சித்துறை, நகராட்சி நிர்வாகங்கள், பேரூராட்சித்துறை, கூட்டுறவு, மின்சாரத்துறை சார்பான குறைகள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, கிராம பொதுப் பிரச்சனைகள், […]

Loading

செய்திகள்

மாவட்ட செயலாளர்களின் கருத்துகளுக்கு ஏற்ப கூட்டணி குறித்து முடிவு: பிரேமலதா விஜயகாந்த்

சென்னை, ஜன. 5– மாவட்டச் செயலாளர்களின் கருத்துகளுக்கு ஏற்ப கூட்டணி குறித்து முடிவெடுக்கப்படும் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். கடலூரில் 9–ந்தேதி நடக்கும் மாநாட்டில் கூட்டணி முடிவை அறிவிப்போம் என்றும் அவர் தெரிவித்தார். கடந்த தேர்தலில் அண்ணா தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணியில் இடம்பெற்றிருந்த தே.மு.தி.க., ராஜ்யசபா சீட் ஒதுக்காததால் கூட்டணியை விட்டு வெளியே வந்தது. நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை தேமுதிக இன்னும் அறிவிக்கவில்லை. வரும் 9-ந் […]

Loading

செய்திகள்

கனிமொழிக்கு ஸ்டாலின் அமித்ஷா, விஜய் பிறந்தநாள் வாழ்த்து

சென்னை, ஜன.5– தி.மு.க. எம்.பி. கனிமொழிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்தி்ய உள்துறை அமைச்சர் அமித்ஷா, த.வெ.க. தலைவர் விஜய் ஆகியோர் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தி.மு.க. துணை பொதுச்செயலாளரும் தூத்துக்குடி தொகுதி எம்.பி.யு.மான கனிமொழி இன்று தனது 58 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். பிறந்த நாளை முன்னிட்டு கனிமொழிக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:– பெண்ணுரிமைக்காகவும் தமிழ்நாட்டின் தன்னுரிமைக்காவும் நாடாளுமன்றத்தில் முழங்கும் கர்ஜனை […]

Loading

செய்திகள்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 அதிகரிப்பு

சென்னை, ஜன. 5– சென்னையில் இன்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 640 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் ஒரு லட்சத்து ஆயிரத்து 440 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. பாதுகாப்பு கருதி, பெரிய முதலீட்டாளர்கள் தங்கம் மற்றும் வெள்ளி கொள்முதலில் அதிகளவில் முதலீடு செய்கின்றனர். இதனால் சர்வதேச சந்தையில் தங்கம், வெள்ளி விலை உயர்ந்து வருகிறது. கடந்த 3–ந்தேதி காலையில் தங்கம் விலை சவரனுக்கு 480 ரூபாய் சரிந்து காணப்பட்ட நிலையில், மாலையில் ரூ.640 […]

Loading

செய்திகள்

வேலு நாச்சியாருக்கு பிரதமர் மோடி புகழாரம்

புதுடெல்லி, ஜன. 3: ‘‘இந்தியாவின் துணிச்சல் மிக்க வீராங்கனைகளில் ஒருவர் வேலுநாச்சியார்’’ என பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார். வீரமங்கை வேலுநாச்சியாரின் 296-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பல்வேறு அரசியல் தலைவர்கள் வேலுநாச்சியாருக்கு புகழாரம் சூட்டி வருகின்றனர். இது குறித்து மோடி தமிழில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:– ‘‘ராணி வேலு நாச்சியாரின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். துணிச்சலையும், வியூகத் திறமையையும் கொண்டிருந்த அவர், இந்தியாவின் துணிச்சல் மிக்க வீராங்கனைகளில் ஒருவராக நினைவு கூரப்படுகிறார். காலனித்துவ […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

தமிழ்நாடு உள்பட 8 மாநிலங்களில் மின்னணு உற்பத்தி திட்டங்கள்: மத்திய அரசு ஒப்புதல்

புதுடெல்லி, ஜன. 3: தமிழ்நாடு உள்பட 8 மாநிலங்களில் ரூ.41 ஆயிரத்து 863 கோடி மதிப்புள்ள மின்னணு உற்பத்தி திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மின்னணு பொருட்கள் உற்பத்தி தொடர்பான ரூ.12 ஆயிரத்து 704 கோடி மதிப்புள்ள முதலீட்டு திட்டங்களுக்கு மத்திய அரசு ஏற்கனவே ஒப்புதல் அளித்தது. இந்நிலையில், ரூ.41 ஆயிரத்து 863 கோடி முதலீட்டுக்கு வழிவகுக்கும் 22 மின்னணு உற்பத்தி திட்டங்களுக்கு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான […]

Loading

செய்திகள்

பாரதி கனவை நனவாக்குபவர் பிரதமர் மோடி: துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் பேச்சு

சென்னை, ஜன. 3: பாரதியின் கனவை நனவாக்கு பவராக மோடி செயல்படுகிறார் என்றும், 2047-ம் ஆண்டுக்குள் பொருளாதாரத்தில் உலகளவில் முதல் இடத்தை இந்தியா எட்டும் என்றும் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் கூறினார். துணை ஜனாதிபதியாக பதவியேற்ற சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர். அறக்கட்டளை சார்பில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் பாராட்டு விழா நடந்தது. விழாவுக்கு முன்னாள் அமைச்சர் எச்.வி. ஹண்டே தலைமை தாங்கினார். புதிய நீதிக்கட்சி நிறுவனர் தலைவர் ஏ.சி.சண்முகம் முன்னிலை வகித்தார். விழாவில், துணை […]

Loading

செய்திகள்

ஸ்ரீரங்கத்தில் 5-ந்தேதி “மோடி பொங்கல்” மத்திய அமைச்சர் அமித்ஷா பங்கேற்கிறார்

திருச்சி, ஜன.2-– திருச்சி ஸ்ரீரங்கத்தில் வருகிற 5-ந்தேதி 2 ஆயிரம் பெண்கள் பங்கேற்கும் ‘மோடி பொங்கல்’ என்ற நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் அமித்ஷா பங்கேற்கிறார். சட்டசபை தேர்தலுக்கு, இன்னும் 3 மாதங்களே இருக்கும் நிலையில், அரசியல் கட்சிகள் பிரசார பயணங்களை முன்னெடுத்துள்ளது. கூட்டணி, தொகுதி பங்கீடு, மக்கள் சந்திப்பு, பொதுக்கூட்டங்கள், கட்சி நிகழ்ச்சிகள் என்று அரசியல் கட்சிகள் தங்களை பரபரப்பு வட்டத்திற்குள் வைத்துக்கொண்டு இருக்கின்றன. இந்தநிலையில், அண்ணா தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள பா.ஜ.க. சட்டசபை தேர்தல் […]

Loading

செய்திகள்

தங்கம் விலை மீண்டும் உயர்ந்து: சவரன் 1 லட்சத்து 640க்கு விற்பனை

சென்னை, ஜன. 2– சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 1,120 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 640 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச முதலீட்டாளர்கள், பாதுகாப்பு கருதி, தங்கம் மற்றும் வெள்ளி கொள்முதலில் அதிகளவில் முதலீடு செய்கின்றனர். இதனால் சர்வதேச சந்தையில் தங்கம், வெள்ளி விலை உயர்ந்தது. நம் நாட்டில் அவற்றின் விலைகள் புதிய உச்சத்தை எட்டின. தமிழகத்தில் நேற்று முன்தினம் (டிசம்பர் 31) ஆபரண தங்கம் கிராம் 12,480 ரூபாய்க்கும், சவரன் […]

Loading