செய்திகள்

அ.தி.மு.க. முதல்கட்டமாக 5 தேர்தல் வாக்குறுதி மகளிருக்கு மாதம் ரூ.2 ஆயிரம்: எடப்பாடி அதிரடி அறிவிப்பு

சென்னை, ஜன.17– அண்ணா தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு மாதம் 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று அதிரடியாக அறிவித்தார். ஆண்களுக்கும் நகர பேருந்துகளில் இலவச பஸ் பயணம் செய்யும் திட்டம் செயல்படுத்தப்படும்; 100 நாட்கள் வேலைவாய்ப்பு திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும், ரூ.25 ஆயிரம் மானியத்துடன் 5 லட்சம் மகளிருக்கு இலவச இருசக்கர வாகனம் வழங்கப்படும். வீடு இல்லாதவர்களுக்கு அரசே கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும் என […]

Loading

செய்திகள்

எடப்பாடி– நயினார் நாகேந்திரன் ஆலோசனை அ.தி.மு.க. – பா.ஜ.க. இடையே தொகுதி பங்கீட்டில் சுமூக முடிவு

சென்னை, ஜன. 9– சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பாரதீய ஜனதா கட்சியின் (பா.ஜ.க) மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது அண்ணா தி.மு.க. – பா.ஜ.க. இடையேயான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்தது. வரும் சட்டசபை தேர்தலில் அண்ணா தி.மு.க. – பா.ஜ.க. – பா.ம.க. கூட்டணி இறுதியானதைத் தொடர்ந்து, டெல்லிக்கு பயணம் மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி, மத்திய உள்துறை அமைச்சர் […]

Loading

செய்திகள்

மாவட்ட செயலாளர்களின் கருத்துகளுக்கு ஏற்ப கூட்டணி குறித்து முடிவு: பிரேமலதா விஜயகாந்த்

சென்னை, ஜன. 5– மாவட்டச் செயலாளர்களின் கருத்துகளுக்கு ஏற்ப கூட்டணி குறித்து முடிவெடுக்கப்படும் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். கடலூரில் 9–ந்தேதி நடக்கும் மாநாட்டில் கூட்டணி முடிவை அறிவிப்போம் என்றும் அவர் தெரிவித்தார். கடந்த தேர்தலில் அண்ணா தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணியில் இடம்பெற்றிருந்த தே.மு.தி.க., ராஜ்யசபா சீட் ஒதுக்காததால் கூட்டணியை விட்டு வெளியே வந்தது. நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை தேமுதிக இன்னும் அறிவிக்கவில்லை. வரும் 9-ந் […]

Loading

செய்திகள்

தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 4.42 லட்சம் பேர் விண்ணப்பம்: தேர்தல் ஆணைய அதிகாரி தகவல்

சென்னை, டிச.29- தமிழகம் முழுவதும் நடந்த சிறப்பு தீவிர முகாமில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 4.42 லட்சம் பேர் படிவங்களை வழங்கினர். சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டசபை தொகுதிகளுக்கான 4 ஆயிரத்து 79 வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்வது தொடர்பான சிறப்பு தீவிர முகாம் கடந்த 27-ந்தேதி தொடங்கி 2 நாட்கள் நடந்தது. 2-ம் நாளான நேற்று நடந்த முகாமில் வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாத […]

Loading

செய்திகள்

தீய சக்தியை ஆட்சியில் இருந்து அகற்றுங்கள் சிறுபான்மை மக்களுக்கு எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்

சென்னை, டிச.19– தி.மு.க. என்னும் தீய சக்தியை ஆட்சியில் இருந்து அகற்ற அண்ணா தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு தாருங்கள் என்று சிறுபான்மை மக்களை எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டார். அண்ணா தி.மு.க. சார்பில் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள சிஎஸ்ஐ தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் பெருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற அண்ணா திமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஏழை, எளிய மக்களுக்கு தையல் மிஷின், இஸ்திரிப்பெட்டி, மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கரவாகனம் போன்ற நலத்திட்ட உதவிகளும் இனிப்புகள் அடங்கிய […]

Loading

செய்திகள் முழு தகவல்

எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்: நாளை த.வெ.க.வில் இணைகிறார்

சென்னை, நவ. 26: முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தனது எம்.எல்.ஏ. பதவியை இன்று ராஜினாமா செய்தார். விஜய் முன்னிலையில் நாளை த.வெ.க.வில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அண்ணா தி.மு.க. மூத்த நிர்வாகிகளில் ஒருவரான கே.ஏ.செங்கோட்டையன், 1977-ம் ஆண்டு முதல் 9 முறை எம்.எல்.ஏ.வாக இருந்துள்ளார். முதல்முறை சத்தியமங்கலம் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், அதன் பிறகு 8 முறை கோபிச்செட்டிபாளையம் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அண்ணா தி.மு.க. ஆட்சி காலத்தில் வனத்துறை, […]

Loading

செய்திகள்

அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் தி.மு.க. அரசு கடன் வாங்கியது குறித்து விசாரணைக் கமிஷன்

கோவையில் நடைப்பயிற்சியின்போது எடப்பாடி பேட்டி கோவை, ஜூலை 8– “2024–25ம் ஆண்டு உபரி வருவாய் கிடைத்த நிலையிலும் தி.மு.க. அரசு கடன் வாங்கியுள்ளது. இதுதொடர்பாக அண்ணா தி.மு.க. ஆட்சி அமைந்ததும் விசாரணைக் கமிஷன் அமைக்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். கோவை ரேஸ்கோர்ஸில் இன்று காலை நடைப்பயிற்சி மேற்கொண்ட அவர் பொதுமக்களை சந்தித்துப் பேசியபோது இதனை தெரிவித்தார். சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக, ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற தலைப்பிலான சுற்றுப் பயணத்தை அண்ணா தி.மு.க. […]

Loading