சென்னை, ஜூலை 7– அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் அதிகளவில் விண்ணப்பித்து சேர்க்கைக்காக காத்திருப்பதை அறிந்து, முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி 2025–-26–ம் கல்வியாண்டிற்கு மாணவர்கள் உயர்கல்வி பெற 20% கூடுதல் மாணவர் சேர்க்கை இடங்கள் வழங்கப்படும் என அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமைச்சர் தெரிவித்துள்ளதாவது:–- கடந்த நான்காண்டுகளில் உயர்கல்வி சேர்க்கை பெறும் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்தியாவிலேயே மாணவர் சேர்க்கை விகிதத்தில் தொடர்ந்து தமிழ்நாடு முதன்மை மாநிலமாக விளங்கி வருகிறது. […]
![]()


