செய்திகள் முழு தகவல்

காவிரி டெல்டா பகுதிகளில் அறுவடையான நெல் பாதுகாப்பான இடங்களில் உள்ளது: அமைச்சர் பன்னீர்செல்வம் தகவல்

சென்னை, நவ.23: காவிரி டெல்டா பகுதிகளில் அறுவடை செய்யப்பட்ட நெல் அனைத்தும் பாதுகாப்பான இடங்களில் வைக்கப்பட்டுள்ளது என்று வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறினார். இதுகுறித்து சென்னை தலைமைச்செயலகத்தில் பத்திரிகையாளர்களுக்கு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அளித்த பேட்டியில் கூறியதாவது:– எதிர்க் கட்சியில் உள்ளவர்கள் தவறாக நெல் அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். டெல்டா பகுதிகளில் திடீரென்று வடகிழக்கு பருவமழை ஆரம்பித்த மறுநாளே தீவிரமான மழை பெய்தது. குறுவை நெல்லை பொறுத்தவரையில், குறுகிய கால பயிராக விவசாயிகள் நடவு செய்வார்கள். அறுவடைக்கு முன்பாகவே, […]

Loading

செய்திகள்

எடப்பாடி பழனிசாமியுடன் ஜி.கே.வாசன் திடீர் சந்திப்பு

சென்னை, நவ. 17– அரசியல் பரபரப்புக்கிடையே எடப்பாடி பழனிசாமியை ஜி.கே.வாசன் இன்று திடீரென சந்தித்து பேசியது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. தமிழகத்தில் வரும் 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. சட்டசபை தேர்தலை சந்திக்க பிரதான கட்சிகளான திமுக, அதி.முக, ஆகிய கட்சிகளுடன் நடிகர் விஜய்யின் தவெக மற்றும் நாம் தமிழர் கட்சியும் களம் இறங்க தயாராகி வருகின்றன. தற்போது ஆளும் திமுக கூட்டணியில் காங்கிரஸ், […]

Loading

சிறுகதை

14 கோடி உறுப்பினர்களுடன் உலகின் மிகப்பெரிய அரசியல் கட்சி பா.ஜ.க.

தேசியத்தலைவர் ஜே.பி.நட்டா பெருமிதம் விசாகப்பட்டணம், செப்.15- 14 கோடி உறுப்பினர்களுடன் உலகின் மிகப்பெரிய அரசியல் கட்சியாக பா.ஜனதா உருவாகி இருப்பதாக அதன் தேசியத்தலைவர் ஜே.பி.நட்டா பெருமித்துடன் கூறியுள்ளார். மத்தியில் கடந்த 2014-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க., நாட்டின் பெரும்பாலான மாநிலங்களிலும் அதிகாரத்தில் உள்ளது. தொடர்ந்து ஏறுமுகமாக இருக்கும் பா.ஜ.க.வின் வளர்ச்சி, இன்று உலகின் மிகப்பெரிய அரசியல் கட்சி என்ற அந்தஸ்தை எட்டியிருப்பதாக கட்சியின் தேசியத்தலைவர் ஜே.பி.நட்டா பெருமிதத்துடன் கூறியுள்ளார். ஆந்திராவின் […]

Loading

செய்திகள்

அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தே அன்புமணி நீக்கம்: ராமதாஸ் அதிரடி அறிவிப்பு

விழுப்புரம், செப். 11- பாட்டாளி மக்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அன்புமணியை நீக்கி, நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். அன்புமணி பாட்டாளி மக்கள் கட்சியின் விதிகளை மீறி செயல்பட்டதாக கூறி, 16 குற்றச்சாட்டகளுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று, பாமக நிறுவனர் ராமதாஸ் அன்புமணிக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தார். 10 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் காலக்கெடு விதிக்கப்பட்டு இருந்தது. ஆனால், ராமதாஸ் அனுப்பிய நோட்டீசை பெற்றுக்கொண்ட […]

Loading

செய்திகள்

செங்கோட்டையன் பொறுப்புகளில் இருந்து திடீர் விடுவிப்பு

திண்டுக்கல் , செப். 6: அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன், கழக அமைப்புச் செயலாளர் மற்றும் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இத்தகவலைத் தெரிவித்துள்ளார். இந்த திடீர் நடவடிக்கை, அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த செங்கோட்டையன், அதிமுகவில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் […]

Loading

செய்திகள்

தெரு நாய் பிரச்சனை: தீர்வு கூறிய கமல்ஹாசன்

சென்னை, செப். 3– தெருநாய் பிரச்சனைக்கு கமல்ஹாச் தீர்வு கூறியுள்ளார். நாடு முழுவதும் தெரு நாய்கள் அதிகரித்து அதனால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. மேலும் இது ஒரு சமூக பிரச்சனையாக உருவெடுத்து தெரு நாய்களுக்கு ஆதரவானர்கள், அவற்றை எதிர்க்கும் தரப்பினர் என இருதரப்பினர் தங்களது கருத்துகளை முன்வைத்து வாதிடுகின்றனர். இதனால் சமூக வலைத்தளங்களில் விவாதம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், சென்னை விமான நிலையத்திற்கு வந்த மக்கள் நீதி மய்யத் தலைவரும், எம்.பி.யுமான கமல்ஹாசன் செய்தியாளர்களை […]

Loading

செய்திகள்

அரசியல் சாசனத்தை பாதுகாக்க சுதர்சன் ரெட்டி தேவைப்படுகிறார்: ஸ்டாலின் பேச்சு

சென்னை, ஆக.25-– துணை ஜனாதிபதி தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் சுதர்சன் ரெட்டி, சென்னையில் நேற்று கூட்டணி கட்சி எம்.பி.க்களிடம் ஆதரவு திரட்டினார். இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் கூட்டணி தலைவர்கள் கலந்து கொண்டனர். அரசியல் சாசனத்தை பாதுகாக்க சுதர்சன் ரெட்டி தேவைப்படுகிறார் என மு.க.ஸ்டாலின் கூறினார். துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அந்த பதவிக்கான தேர்தல் அடுத்த மாதம் (செப்டம்பர்) 9-ந்தேதி நடைபெறுகிறது. இதற்காக பா.ஜ.க. கூட்டணி […]

Loading

செய்திகள்

2 வது தவெக மாநாடு: மதுரையில் திரண்ட தொண்டர்கள்!

மதுரை, ஆக. 21- நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) இரண்டாவது மாநில மாநாடு, மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாரபத்தி கிராமத்தில் இன்று கோலாகலமாகத் தொடங்கியது. முன்னதாக, ஆகஸ்ட் 25-ஆம் தேதி நடைபெற இருந்த இந்த மாநாடு, பாதுகாப்பு காரணங்களுக்காக ஆகஸ்ட் 21-க்கு மாற்றப்பட்டது. மாநாட்டின் பிரம்மாண்ட ஏற்பாடுகள் இந்த மாநாடு 500 முதல் 600 ஏக்கர் பரப்பளவில் நடத்தப்படுகிறது. 100 அடி உயர மேடை மற்றும் 200 மீட்டர் நீள ராம்ப் […]

Loading

செய்திகள்

21–ந்தேதி மாநில மாநாடு: த.வெ.க. தலைவர் விஜய் தொண்டர்களுக்கு கடிதம்

‘மகத்தான தேர்தல் அரசியல் வரலாறு மீண்டும் தமிழ்நாட்டு மண்ணில் நிகழும்’ என உறுதி சென்னை, ஆக. 18– மதுரை பாரப்பத்தியில் கூடுவோம், தேர்தல் அரசியல் போர் உத்தியில் வெல்வோம் என்று த.வெ.க. தலைவர் விஜய் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருக்கிறார். மகத்தான தேர்தல் அரசியல் வரலாறு மீண்டும் தமிழ்நாட்டு மண்ணில் நிகழும் என்றும் அவர் உறுதிப்பட தெரிவித்துள்ளார். விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே கடந்த ஆண்டு நடந்தது. இந்த […]

Loading

செய்திகள்

‘‘முதல்வர் ஸ்டாலினை சந்தித்ததில் எந்தவித அரசியலும் இடம் பெறவில்லை’’: ஓ.பன்னீர்செல்வம்

சென்னை, ஆக 4– மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இல்லம் திரும்பிய ‘‘முதல்வர் ஸ்டாலினை சந்தித்ததில் எந்தவித அரசியலும் இடம் பெறவில்லை’’ என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். இது சம்பந்தமாக முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இன்று வெளியிட்டுள்ள தன்னிலை விளக்க அறிக்கையில் கூறியிருப்பதாவது:– ‘‘மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இல்லம் திரும்பியவர்களை அவர்களது இல்லம் தேடிச் சென்று நலம் விசாரிப்பதும், உயிரிழந்தவர்களின் உறவினர்களை சந்தித்து துக்கம் விசாரித்து அஞ்சலி செலுத்துவதும் தமிழ்ப் பண்பாடு. இந்த வகையில், முதலமைச்சர் உடல் நலக் […]

Loading