வாஷிங்டன், ஜன. 11: சிரியாவில் ஐஎஸ் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து ‘ஆபரேஷன் ஹாவ்க்’ என்ற பெயரில் வான்வழி தாக்குதல் நடத்தி உள்ளது. இதில் ஐஎஸ் பயங்கரவாதிகள் முகாம்கள் அழிக்கப்பட்டது என அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. சிரியாவில் உள்நாட்டு போர் நிலவி வருகிறது. அங்கு, ஐஎஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருவதால் பதட்டமான சூழல் நிலவுகிறது. அண்மையில் ஐஎஸ் பயங்கரவாதிகளை குறிவைத்து அமெரிக்கா நடத்திய தாக்குதலின் போது அமெரிக்க பாதுகாப்பு படையினர் இருவர் உட்பட 3 பேர் கொல்லப்பட்டனர். […]
![]()




