செய்திகள்

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 2 பேர் பலி; 5 பேர் படுகாயம்

வாஷிங்டன், செப். 22– அமெரிக்காவில் இண்டியானா மாகாணத்தில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் பலத்த காயம் அடைந்தனர். அமெரிக்காவின் வடமேற்கு இண்டியானா மாகாணத்தில் ஒரு பிரபல ஷாப்பிங் மால் உள்ளது. இந்த ஷாப்பில் மாலில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் மர்மநபர் ஒருவர் திடீரென சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினார். இந்த சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் காயம் அடைந்தனர். துப்பாக்கிச்சூடு நடத்திய நபரின் அடையாளத்தை […]

Loading

செய்திகள்

போதைப் பொருள் கடத்தலில் இந்தியா, சீனா உள்ளிட்ட 23 நாடுகளுக்கு முக்கியப் பங்கு: டிரம்ப்

வாஷிங்டன், செப். 18– போதைப் பொருள் கடத்தல், உற்பத்தியில் சீனா, ஆப்கானிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 23 நாடுகளுக்கு முக்கியப் பங்கு இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். டிரம்ப் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் ஆப்கானிஸ்தான், தி பஹாமாஸ், பெலிஸ், பொலிவியா, மியான்மர், சீனா, கொலம்பியா, கோஸ்டா ரிகா, தி டொமினிசியன் ரிபப்ளிக், ஈகுவேடார், எல் சால்வடார், கவுதமாலா, ஹைதி, ஹொண்டூராஸ், இந்தியா, ஜமைக்கா, லாவோஸ், மெக்சிகோ, நிகாராகுவா, பாகிஸ்தான், பனாமா, பெரு, வெனிசுலா […]

Loading

செய்திகள்

அமெரிக்காவில் குற்றவாளியை பிடிக்க சென்ற போலீஸ் அதிகாரிகள் 3 பேர் சுட்டுக்கொலை

வாஷிங்டன், செப். 18– அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் போலீஸ் அதிகாரிகள் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் 2 பேர் பலத்த காயம் அடைந்தனர். அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியா மாநிலத்தின் யார்க் கவுண்டியில் உள்ள நார்த் கோடோரஸ் டவுன்ஷிப் பகுதியில் உள்ள ஹார் சாலையில் திடீர் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்தது. இதில் போலீஸ் அதிகாரிகள் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் இரண்டு பேர் காயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இருவரது நிலைமையும் […]

Loading

செய்திகள்

அமெரிக்காவில் மனைவி, மகன் கண் எதிரில் பயங்கரம்: இந்தியர் கொடூரக் கொலை

ஹூஸ்டன், செப்.12– அமெரிக்காவில் இந்தியர் தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பதைபதைக்க வைத்துள்ளது. இதையொட்டி அவருடன் பணியாற்றிய நபரை போலீசார் கைது செய்தனர். டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள டல்லாஸ் பகுதியில் உணவக மேனேஜராக பணியாற்றி வந்தவர் சந்திர நாகமல்லையா (வயது 50). இவருக்கும், அவரின் கீழ் பணியாற்றி வந்த கோபோஸ் -மார்டினெஸ் (வயது 37), என்பவருக்கும் பணியின் போது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பழைய வாஷிங்மெஷினை பயன்படுத்துவது தொடர்பாக எழுந்த தகராறில், மனைவி மற்றும் மகன் […]

Loading

செய்திகள்

நானும் ஆவலோடு காத்திருக்கிறேன்’: இந்தியா – அமெரிக்கா வர்த்தகம் குறித்து பேச விரும்பும் டிரம்புக்கு மோடி பதில்

புதுடெல்லி, செப். 10– இந்தியா–அமெரிக்கா இடையேயான வர்த்தகம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், பிரதமர் மோடியும் வெளியிட்டுள்ள கருத்து வரவேற்பைப் பெற்றிருக்கும். அதே நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘‘வர்த்தகத் தடைகளை தகர்க்க உங்களுடன் பேச விரும்புகிறேன்’’ என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். அதற்கு பிரதமர் மோடியும் ‘‘ஆவலுடன் காத்திருக்கிறேன்’’ என இசைவு தெரிவித்துள்ளார். உலகளவில் அமெரிக்காவின் வர்த்தக கட்டமைப்பை மறுசீரமைக்கும் வகையில், பல்வேறு நாடுகள் மீது அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடந்த சில மாதங்களாக […]

Loading

செய்திகள்

ஜப்பானுக்கு 15 சதவீத வரி; புதிய வர்த்தக ஒப்பந்தத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கையெழுத்து

வாஷிங்டன்,செப்.5– அமெரிக்கா – ஜப்பான் இடையிலான வர்த்தக ஒப்பந்தத்தில் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார். இதன்மூலம், அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் ஜப்பான் பொருட்களுக்கு 15 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்தியா, சீனா உட்பட உலகின் பல நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு, வர்த்தக பற்றாக்குறையை காரணம் காட்டி, அமெரிக்க அதிபர் டிரம்ப் மிக அதிகமாக வரிகளை விதித்தார். அந்த வகையில் அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் ஜப்பான் பொருட்களுக்கு 15 சதவீதம் அடிப்படை வரி விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் […]

Loading

செய்திகள்

ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணை வாங்காதே: இந்தியாவிற்கு 25% வரி குறைப்பிற்கு நிபந்தனை

வாஷிங்டன், ஆக. 28– ரஷ்யா – உக்ரைன் இடையேயான போரை ‘மோடியின் போர்’ எனக் குறிப்பிட்டு அமெரிக்க அதிபரின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ பேசியுள்ளார்.மேலும், ரஷியாவிடம் கச்சா எண்ணை வாங்குவதை நிறுத்தினால், இந்தியா மீதான வரியை 25 சதவிகிதமாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இந்தியா–அமெரிக்கா இடையேயான இருதரப்பு வர்த்தக ஒப்பந்த பேச்சுவாா்த்தை, அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த காலக் கெடுவையும் கடந்து இழுபறி நீடித்ததால், இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது […]

Loading

செய்திகள்

அமெரிக்க வரி விதிப்பு: இந்தியாவுடன் துணை நிற்போம் என சீனா அறிவிப்பு

பெய்ஜிங், ஆக. 22– அமெரிக்காவின் வரி விதிப்புக்கு எதிராக இந்தியாவுடன் சீனா உறுதியாக துணை நிற்கும் என இந்தியாவுக்கான சீனத் தூதர் சூ பெய்ஹோங் கூறியுள்ளார். ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதன் மூலமாக ரஷ்யா – உக்ரைன் போருக்கு இந்தியா மறைமுகமாக நிதியளிப்பதாக அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிறது. இதனால் இந்தியா மீது அமெரிக்கா 50 சதவிகித வரியை விதித்துள்ளது. இந்த வரி விதிப்பினால் இந்தியாவில் பல்வேறு துறைகள் பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளது. எனினும் இந்தியா பின்வாங்காது […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

அமெரிக்காவின் வரி விதிப்புக்கு பதிலடி: வலுப்பெறும் இந்திய – ரஷ்ய வர்த்தகம்!

ஆர். முத்துக்குமார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியா மீது 50% கூடுதல் வரி விதித்ததைத் தொடர்ந்து, இந்தியா தனது வர்த்தகக் கொள்கைகளை பன்முகப்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ரஷ்யாவுடனான பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்த இந்தியா களம் இறங்கி விட்டது. மாஸ்கோவில் நடைபெற்ற இந்தியா-ரஷ்யா வர்த்தகக் கூட்டத்தில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ரஷ்ய நிறுவனங்களை இந்திய நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுமாறு அழைப்பு விடுத்தார். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மற்றும் […]

Loading

செய்திகள்

‘ரஷ்யா – உக்ரைன் போரை நிறுத்தவே இந்தியா மீது டிரம்ப் வரி விதிப்பு’’: அமெரிக்கா விளக்கம்

வாஷிங்டன், ஆக. 20– ‘‘உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா தொடர்வதைத் தடுக்கவே இந்தியா மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூடுதல் வரிகளை விதித்ததாக’’ வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் தெரிவித்துள்ளார். இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யும் பொருள்களுக்கு 25% பரஸ்பர வரி விதிக்கப்பட்ட நிலையில், எச்சரிக்கையை மீறி ரஷியாவுடன் வர்த்தகம் செய்வதாக குற்றச்சாட்டை முன்வைத்து வரியை 50 சதவிகிதமாக டிரம்ப் உயர்த்தினார். இதனிடையே, ரஷியா மற்றும் உக்ரைன் அதிபர்களை அடுத்தடுத்து சந்தித்து டிரம்ப் அமைதிப் […]

Loading