செய்திகள்

தென் கொரியா பொருட்களுக்கு 10% கூடுதல் வரி: டிரம்ப் உத்தரவு

வாஷிங்டன், ஜன. 27– தென் கொரியா பொருட்களுக்கான இறக்குமதி வரியை 15 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாக அமெரிக்க அதிபர் டிரம்ப் உயர்த்தி அறிவித்திருக்கிறார். உலக நாடுகள் தனது பேச்சை கேட்கவில்லை என்றால் வரி விதிப்பேன் என அதிபர் டிரம்ப் அறிவித்தார். பின்னரும் தனது உத்தரவுக்கு ஒத்துழைக்கவில்லை என்றால் கூடுதலாக வரி விதிப்பது அதிபர் டிரம்ப் வழக்கமாகிவிட்டது. அந்த வகையில் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளவதில் தாமதம் ஏற்பட்டு வருவதால், தென் கொரியா பொருட்களுக்கான இறக்குமதி வரியை 15 சதவீதத்தில் […]

Loading

செய்திகள்

வெனிசுவேலாவுடன் இணைந்து பணியாற்ற அமெரிக்காவுக்கு இடைக்கால அதிபர் அழைப்பு

கராகஸ், ஜன. 5: வெனிசுவேலாவுடன் இணைந்து பணியாற்ற அமெரிக்காவுக்கு அந்நாட்டின் இடைக்கால அதிபராக பொறுப்பேற்றுள்ள டெல்சி ரோட்ரிகஸ் அழைப்பு விடுத்துள்ளார். வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை அமெரிக்க படைகள் கைது செய்தது. தொடர்ந்து அவர்கள் அமெரிக்காவுக்கு நாடுகடத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, வெனிசுவேலாவின் இடைக்கால அதிபராக டெல்சி ரோட்ரிகஸை நியமித்து அந்நாட்டு உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், அரசின் உயர்நிலை அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புத் துறை அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

அமெரிக்காவில் நடுவானில் 2 ஹெலிகாப்டர்கள் மோதல்: விமானி உயிரிழப்பு

வாஷிங்டன், டிச. 29: அமெரிக்காவில் நடுவானில் 2 ஹெலிகாப்டர்கள் மோதிக் கொண்ட விபத்தில் விமானி உயிரிழந்தார். அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில் உள்ள ஹேமண்டன் விமான நிலையத்திற்கு அருகில் 2 ஹெலிகாப்டர்கள் எதிர்பாராத விதமாக நடுவானில் மோதிக்கொண்டன. விபத்தில் சிக்கிய இந்த ஹெலிகாப்டர்கள் தரையில் விழுந்து தீப்பற்றி எரியத் தொடங்கின. இந்த சம்பவத்தில் ஒரு ஹெலிகாப்டர் விமானி உயிரிழந்த நிலையில், மற்றொருவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து […]

Loading

செய்திகள் முழு தகவல்

அமெரிக்க வரிவிதிப்பு பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணுங்கள் பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்

சென்னை, டிச.18: இந்தியப் பொருட்கள் மீதான வரிவிதிப்பினால், தமிழ்நாட்டில் ஏற்றுமதி துறைகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு, இந்திய -அமெரிக்க இருதரப்பு ஒப்பந்தம் மூலம் விரைவில் தீர்வு காண்பதற்கு முன்னுரிமை அளிக்குமாறு கேட்டு, பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்தியப் பொருட்களுக்கு 50 விழுக்காடு வரி விதிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், தமிழ்நாட்டின் ஏற்றுமதித் துறைகளில் அதிகரித்து வரும் நெருக்கடிகள் குறித்து அவசரமாகவும், கவலையோடும் இதனை எழுதுவதாகக் […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

அமெரிக்க படை வீரர்களுக்கு தலா ரூ.1.60 லட்சம் கிறிஸ்துமஸ் பரிசு: அதிபர் டிரம்ப் அறிவிப்பு

வாஷிங்டன், டிச. 18: அமெரிக்காவின் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு கிறிஸ்துமஸ் பரிசாக தலா ரூ.1.60 லட்சம் வழங்கப்படும் என்று அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். சேவை மற்றும் தியாகத்தைப் போற்றும் வகையில், ’வீரர்களுக்கான ஈவுத்தொகை’ வழங்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். அதிபர் டிரம்ப் அமெரிக்க மக்களுக்கு ஆற்றிய உரையில் கூறியதாவது:– “நான் பதவிக்கு வந்த முதல் நாளிலேயே, நாட்டின் தெற்கு எல்லையில் நடந்த ஊடுருவலைத் தடுக்க உடனடி நடவடிக்கை எடுத்தேன். கடந்த 7 மாதங்களாக ஒரு வெளிநாட்டினர் கூட சட்டவிரோதமாக […]

Loading

செய்திகள்

இந்தியாவுக்கு ரூ.822 கோடிக்கு ஆயுதங்களை விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல்

வாஷிங்டன், நவ.20- இந்தியாவுக்கு ரூ.822 கோடி மதிப்பிலான ஆயுதங்களை விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. அதிபர் டிரம்ப் விதித்த கூடுதல் வரியால் பாதிக்கப்பட்ட இந்தியா –அமெரிக்கா இடையேயான உறவு மற்றும் வர்த்தகம் தற்போது மெல்ல மெல்ல மீண்டெழுந்து வருகிறது. இந்த சூழலில், இந்திய ராணுவத்திற்கு ரூ.822 கோடி மதிப்பிலான ஆயுதங்களை விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம், ராணுவ வீரர்கள் தோளில் வைத்து ஏவும் வகையிலான 100 எப்ஜிஎம் 148 ஜாவெலின் ஏவுகணைகள், 25 […]

Loading

செய்திகள்

வெளிநாட்டவர்கள் அமெரிக்கா வந்து செல்ல புது வழிகாட்டு முறைகள் வெளியீடு

வாஷிங்டன், அக். 28– வெளிநாட்டவர்கள் மற்றும் க்ரீன் கார்டு உள்ளவர்கள் அமெரிக்கா வந்து, செல்வதற்கு புதிய வழிகாட்டு முறைகளை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இது வரும் டிசம்பர் 26–ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது. அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்றது முதல் வெளிநாட்டவர்கள் விவகாரத்தில் பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தற்போது மேலும் ஒரு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதாவது வெளிநாட்டவர்கள் மற்றும் க்ரீன் கார்டு உள்ளவர்கள் அமெரிக்கா வந்து, செல்வதற்கு புதிய வழிகாட்டு முறைகளை அமெரிக்க […]

Loading

செய்திகள்

ரஷ்யா தாக்கப்பட்டால் கடும் பதிலடி: அமெரிக்காவுக்கு புதின் எச்சரிக்கை

மாஸ்கோ, அக். 24– உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் கூடுதலாக பொருளாதார தடைகளை விதித்துள்ளார். ரஷ்யாவின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் நிறுவனங்கள் மீது டிரம்ப் பொருளாதார தடைகளை விதித்துள்ளதால் புதின் கடும் கோபமடைந்துள்ளார். மேலும் டிரம்பின் அழுத்தங்களுக்கு ஒருபோதும் அடிபணியமாட்டோம் என்று கூறிய புதின் அவரது பொருளாதார தடைகளை கடுமையாக கண்டித்துள்ளார். உக்ரைன் – ரஷ்யா போரை நிறுத்துவது தொடர்பாக ரஷ்ய அதிபர் புதினுடன், டிரம்ப் பேசி வருகிறார். அதில் இன்னும் […]

Loading

செய்திகள்

ரஷ்ய எண்ணெய் நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடை

வாஷிங்டன், அக். 23– ரஷ்யாவின் மிகப்பெரிய 2 எண்ணெய் நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. உக்ரைனில் ரஷ்யா நடத்தி வரும் போரை முடிவுக்கு கொண்டு வர, அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சி செய்து வருகிறார். தற்போது ரஷ்யாவின் இரண்டு பெரிய எண்ணெய் நிறுவனங்களான ரோஸ்நெப்ட் மற்றும் லுகோயில் மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அதிபர் டிரம்ப் கூறியதாவது: இந்த இரண்டு மிகப்பெரிய எண்ணெய் நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை […]

Loading

செய்திகள்

சீனப் பொருள்களுக்கு கூடுதலாக 100% வரி: டிரம்ப் அதிரடி அறிவிப்பு

வாஷிங்டன், அக்.11– நவம்பர் 1 முதல் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு மேலும் கூடுதலாக 100 சதவீதம் வரி விதிக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். ஏற்கனவே சீனப் பொருள்கள் மீது 30 சதவீதம் வரி அமலில் உள்ள நிலையில், தற்போது மொத்தமாக சீனா மீது 130 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபராக டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் பதவியேற்றார். பதவியேற்றதுமுதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக, தங்கள் நாட்டின் […]

Loading