செய்திகள்

ஸ்ரீரங்கத்தில் 5-ந்தேதி “மோடி பொங்கல்” மத்திய அமைச்சர் அமித்ஷா பங்கேற்கிறார்

திருச்சி, ஜன.2-– திருச்சி ஸ்ரீரங்கத்தில் வருகிற 5-ந்தேதி 2 ஆயிரம் பெண்கள் பங்கேற்கும் ‘மோடி பொங்கல்’ என்ற நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் அமித்ஷா பங்கேற்கிறார். சட்டசபை தேர்தலுக்கு, இன்னும் 3 மாதங்களே இருக்கும் நிலையில், அரசியல் கட்சிகள் பிரசார பயணங்களை முன்னெடுத்துள்ளது. கூட்டணி, தொகுதி பங்கீடு, மக்கள் சந்திப்பு, பொதுக்கூட்டங்கள், கட்சி நிகழ்ச்சிகள் என்று அரசியல் கட்சிகள் தங்களை பரபரப்பு வட்டத்திற்குள் வைத்துக்கொண்டு இருக்கின்றன. இந்தநிலையில், அண்ணா தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள பா.ஜ.க. சட்டசபை தேர்தல் […]

Loading

செய்திகள்

மத்திய மந்திரி அமித்ஷா 9-ந்தேதி தமிழகம் வருகை

சென்னை, டிச.26- அண்ணா தி.மு.க.–பா.ஜ.க. தலைவர்கள் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடந்து முடிந்துள்ள நிலையில், மத்திய அமைச்சர் அமித்ஷா, 9-ந்தேதி தமிழகம் வருகிறார். புதுக்கோட்டையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவருடன் கூட்டணி தலைவர்களும் பங்கேற்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள அ.தி.மு.க.–பா.ஜ.க. கூட்டணி தயாராகி வருகிறது. கூட்டணியில் புதிய கட்சிகளை சேர்க்கவும், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தவும் பியூஸ்கோயல் உள்ளிட்ட 3 மத்திய மந்திரிகளை கொண்ட தேர்தல் குழுவை பா.ஜனதா அகில இந்திய தலைமை அமைத்தது. மத்திய அமைச்சர் […]

Loading

செய்திகள்

எடப்பாடி பழனிசாமி 16–ந்தேதி டெல்லி பயணம்

சென்னை, செப்.14– அண்ணா தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாளை மறுநாள் (16–ந்தேதி) டெல்லி செல்கிறார். டெல்லி செல்லும் எடப்பாடி அமித்ஷாவை சந்தித்து பேசுவார் என தெரிகிறது. சமீபத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் டெல்லி சென்று நிலையில் எடப்பாடி பழனிசாமியும் டெல்லி செல்கிறார். அண்ணா தி.மு.க.விலிருந்து வெளியே சென்றவர்களை இணைக்கும் பணியை 10 நாட்களுக்குள் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடங்க வேண்டும்; இல்லையென்றால் பிரிந்தவர்களை இணைக்கும் பணியில் ஈடுபடுவேன் என முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் […]

Loading

செய்திகள்

நயினார் நாகேந்திரன் டெல்லி பயணம்

புதுடெல்லி, செப். 11– தமிழகத்தில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில், பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று டெல்லிக்கு பயணம் மேற்கொள்கிறார். சமீபத்தில் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட எம்.எல்.ஏ. செங்கோட்டையன், ஹரித்துவார் ஆன்மீக பயணம் செல்வதாக சொல்லிவிட்டு டெல்லியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசியிருந்தார். முன்னதாக அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்று பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் 10 நாட்கள் கெடு விதித்திருந்தார். இதைத்தொடர்ந்து […]

Loading

செய்திகள்

‘‘சுதர்சன் ரெட்டி – நக்சல் ஆதரவாளர்’’: அமித்ஷா பேச்சுக்கு முன்னாள் நீதிபதிகள் குழு கடும் கண்டனம்

புதுடெல்லி, ஆக. 25– இந்தியா கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளரும் முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதிபதியுமான சுதர்சன் ரெட்டியை ‘‘நக்சல் ஆதரவாளர்’’ என உள்துறை அமைச்சர் அமித்ஷா குறிப்பிட்டதற்கு 18 பேர் கொண்ட ஓய்வுபெற்ற நீதிபதிகள் குழு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். துணை ஜனாதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராக சி.பி. ராதாகிருஷ்ணனும், இந்தியா கூட்டணி வேட்பாளராக சுதர்சன் ரெட்டியும் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில் சுதர்சன் ரெட்டி, நக்சலைட்டுகளை ஆதரிப்பவர் என உள்துறை அமைச்சர் அமித்ஷா […]

Loading

செய்திகள்

உடல்நலக்குறைவு காரணமாகவே துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் ராஜினாமா: அமித்ஷா விளக்கம்

புதுடெல்லி, ஆக. 25– ”உடல்நலக் குறைவு காரணங்களுக்காகவே துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் ராஜினாமா செய்தார். வேறு காரணம் இல்லை” என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார். இந்தியாவின் துணை ஜனாதிபதியாக பதவி வகித்த ஜெகதீப் தன்கர் கடந்த ஜூலை மாதம் திடீரென பதவியை ராஜினாமா செய்கிறேன் என கூறினார். உடல் நலனை முன்னிட்டு மருத்துவ காரணங்களுக்காக ராஜினாமா செய்கிறேன் என தெரிவித்து ஜனாதிபதி திரவுபதிக்கு அதுபற்றி ராஜினாமா கடிதம் ஒன்றையும் அவர் வழங்கினார். இதேபோன்று […]

Loading

செய்திகள்

வேரோடு பிடுங்கி எறிந்தால் தி.மு.க. பெரிதாக முளைக்கும்: அமித்ஷாவுக்கு கே.என்.நேரு பதிலடி

நெல்லை, ஆக. 23– அண்ணா தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி பொருந்தாக் கூட்டணி என்று அமைச்சர் கே.என். நேரு கூறினார். நெல்லை தச்சநல்லூரில் நேற்று நடைபெற்ற பா.ஜ.க.வின் தென்மண்டல பூத் கமிட்டி மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு பேசுகையில், மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலினை முதலமைச்சராக்க வேண்டும் என்று நினைத்து கொண்டு இருக்கிறார். அது ஒரு போதும் நடக்காது. வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. அரசை வேரோடு பிடுக்கி அகற்றுவோம். தமிழகத்தில் தேசிய ஜனநாயக […]

Loading

செய்திகள்

தி.மு.க. அரசை வேரோடு சாய்ப்போம்: மத்திய அமைச்சர் அமித்ஷா உறுதி

திருநெல்வேலி, ஆக.23-– ”சட்டசபை தேர்தலில் தி.மு.க.,வை வேரோடு சாய்ப்போம் என, அமித் ஷா பேசினார். தமிழகத்தில் அ.தி.மு.க.- பா.ஜனதா கூட்டணி ஆட்சி அமைக்கும் என்றார். தமிழக பா.ஜ.க. கட்சியின் தென்மண்டல பூத் கமிட்டியின் முதல் மாநாடு திருநெல்வேலி தச்சநல்லூரில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நெல்லை பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் அமைக்கப்பட்டு இருந்த ஹெலிபேடில் வந்து இறங்கினார். அவருக்கு பா.ஜ.க. சார்பில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர்கள் அண்ணாமலை, […]

Loading

செய்திகள்

நெல்லையில் அமித்ஷா தலைமையில் 22ம் தேதி பாஜக மண்டல மாநாடு

நெல்லை, ஆக. 18– நெல்லையில் அமித்ஷா பங்கேற்கும் பிரமாண்ட மண்டல மாநாடு வருகிற 22-ந்தேதி நடைபெறவிருக்கிறது. இந்தக் கூட்டத்தில் 1 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் தி.மு.க., அண்ணா தி.மு.க., பாஜக உள்ளிட்ட கட்சிகள் தேர்தலுக்கான பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றனர். களத்தில் சென்று மக்களை சந்திப்பதிலும் தீவிரம் காட்டி வருகின்றனர். வடமாநிலங்களில் பா.ஜ.க. கொடிக்கட்டி பறக்கும் நிலையில், […]

Loading

செய்திகள்

எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் கே.என்.நேரு கண்டனம்

சென்னை, ஜூலை.20- கூட்டணி ஆட்சி என்று கூறும் அமித்ஷாவுக்கு பதிலடி தரமுடியாத, எடப்பாடி பழனிசாமிக்கு, தி.மு.க. கூட்டணியை பற்றி பேச தகுதி இல்லை என்று அமைச்சர் கே.என்.நேரு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அமைச்சர் கே.என்.நேரு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- … பழனிசாமிவிரித்திருப்பதுரத்தினக்கம்பளம்அல்ல. பாஜகவின்பாசிசரத்தக்கம்பளம்என்பதை திமுகவின்தோழமைகட்சிகளும்மக்களும்அறிவார்கள். கோவையில்பேசியவரும்சிதம்பரத்தில்பேசியவரும்ஒரேஆளா?’ என்றுவாக்காளர்மண்டையைப்போட்டுக்குழப்பிக்கொண்டிருக்கிறார்கள். கூட்டணிஆட்சிஎன்றுமூச்சுக்குமுப்பதுதடவைசொல்லிக்கொண்டிருக்கும் அமித்ஷாவிற்குபதிலடிதரமுடியாதகோழைபழனிசாமி திமுககூட்டணிக்கட்சிகளைப்பற்றிப்பேசஅருகதைஇருக்கிறதா? மாண்புமிகுநகர்புறவளர்ச்சித்துறைஅமைச்சர்கே.என்.நேருஅறிக்கை ‘மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் பயணம் போய்க் கொண்டிருக்கும் எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தினம் தினம் கேலிக் கூத்துகளை […]

Loading