சென்னை, ஆக.10-– நான் பதில் சொல்ல ஆரம்பித்தால் டாக்டர் ராமதாஸ் பெயர் கெட்டுப்போய்விடும் என்று பா.ம.க. பொதுக்குழு கூட்டத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசினார். மாமல்லபுரத்தில் உள்ள தனியார் திருமண அரங்கில் பா.ம.க. பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தலைமை தாங்கினார். இதில் பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமா, சி.ஆர்.பாஸ்கரன், எம்.எல்.ஏ.க்கள் வெங்கடேசன், சிவகுமார் உள்பட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:- […]
![]()





