தர்மபுரி, டிச.16: தர்மபுரியில் பள்ளி மாணவி உடற்கல்வி ஆசிரியரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை மூடி மறைக்க ரூ. 10 லட்சம் வாங்கிக்கொண்டு கட்டப்பஞ்சாயத்து நடைபெற்றதாக பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், கட்டப்பஞ்சாயத்து செய்வதுதான் திமுகவின் நீதியா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்கப்பட வேண்டும். அவரின் தவறை மூடி மறைக்கும் வகையில் கட்டப்பஞ்சாயத்து செய்தவர்களும், அதற்கு துணை நின்ற கல்வித்துறை அதிகாரிகள் […]
![]()


