சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவுநாள்
செய்திகள்

சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் 254–வது நினைவு நாள்

சிலை, நினைவு தூணுக்கு 20–ந் தேதி அ.தி.மு.க. சார்பில் மாலை: எடப்பாடி அறிவிப்பு சென்னை, ஆக.18– ஒண்டிவீரன் 254–வது நினைவு நாளையொட்டி 20–ந் தேதி பாளையங்கோட்டையில் அவரது சிலைக்கு அ.தி.மு.க. சார்பில் மாலை அண்ணா தி.மு.க. சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதுகுறித்து அண்ணா தி.மு.க. பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:– இந்திய முதல் சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரனின் 254–வது வீரவணக்க […]

Loading

செய்திகள்

அதிமுக முன்னாள் எம்பி மைத்ரேயன் திமுகவில் இணைந்தார்

சென்னை, ஆக. 12– அதிமுக முன்னாள் எம்பி மைத்ரேயன் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். தமிழக அரசியலில் பாஜ – அதிமுக – பாஜ என பல முறை கட்சி மாறியவர் மைத்ரேயன். இவர், 1990களில் பாஜவில் இணைந்தார். அந்த கட்சியில் மாநில அளவில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்த மைத்ரேயன், 2000ம் ஆண்டு ஜெயலலிதா முன்னிலையில் அண்ணா தி.மு.க.வில் இணைந்தார். 2002ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை அதிமுக சார்பில் ராஜ்யசபா […]

Loading

செய்திகள்

எம்.ஜி.ஆர். குறித்து பேசுவதற்கு திருமாவளவனுக்கு தகுதி இல்லை: எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு

சேலம், ஆக.10-– எம்.ஜி.ஆர். பற்றி பேசுவதற்கு திருமாவளவனுக்கு தகுதி இல்லை என்று அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்து உள்ளார். சேலம் மாவட்டம் ஓமலூரில் பல்வேறு மாற்றுக்கட்சிகளை சேர்ந்தவர்கள் அண்ணா தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி நேற்று அங்குள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நடந்தது. அப்போது பல்வேறு கட்சிகளில் இருந்து சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விலகி கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அண்ணா தி.மு.க. வில் இணைந்தனர். பின்னர் அவர் கட்சியில் சேர்ந்தவர்களுக்கு கட்சி […]

Loading

செய்திகள்

பட்டாசு தொழிலுக்குத் தேவையான உதவிகள் செய்வோம்: எடப்பாடி உறுதி

சிவகாசி, ஆக.9- சிவகாசியில் பட்டாசு, தீப்பெட்டி ஆலைகள், அச்சக அதிபர்களுடன் எடப்பாடி பழனிசாமி நேற்று கலந்துரையாடினார். ஆலைக்கு சென்று பட்டாசு உற்பத்தியையும் பார்வையிட்டார். ‘மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற முழக்கத்துடன் அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த 2 நாட்களாக விருதுநகர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். நேற்று காலையில் சிவகாசியில் உள்ள ஒரு மண்டபத்தில், அச்சக உரிமையாளர்கள், தீப்பெட்டி உற்பத்தியாளர்கள், பட்டாசு உற்பத்தியாளர்கள், காலண்டர் தயாரிப்பாளர்கள் மற்றும் வணிகர் சங்கத்தினருடன் எடப்பாடி கலந்துரையாடலில் ஈடுபட்டார். […]

Loading

செய்திகள்

தமிழகம் அதிக வளர்ச்சி என்பது தி.மு.க.வின் பொய், புரளி

சென்னை, ஆக.8- தமிழகம் அதிக வளர்ச்சி என்பது தி.மு.க.வின் புரளி என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– போட்டோசூட் நடத்தி, பெயர் வைப்பதில் சாதனை புரிந்துவரும் விடியா தி.மு.க. அரசு, ‘இந்தியாவிலேயே அதிக வளர்ச்சி பெற்ற மாநிலம் தமிழ் நாடு’ என்று ஒரு புதிய புரளியைக் கிளப்பிவிட்டு விளம்பரம் தேடுகிறது. மக்களைப் பற்றி கவலைப்படாமல்; மக்களுக்கான அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யாமல்; மக்களுக்கு வளர்ச்சித் திட்டங்கள் எதுவும் கொடுக்காமல் […]

Loading

செய்திகள்

பிரதமர் மோடியுடன், எடப்பாடி சந்திப்பு: ‘மக்களை காப்போம்’ பயணத்திட்டத்தில் மாற்றம்

சென்னை, ஜூலை.24- பிரதமர் மோடியுடன், எடப்பாடி பழனிசாமி சந்திக்க இருப்பதாக தெரிகிறது. எனவே அவர், தனது ‘மக்களை காப்போம்’ பயணத்திட்டத்தில் மாற்றம் செய்துள்ளார். பிரதமர் மோடி வருகிற 26 மற்றும் 27-ந் தேதி என 2 நாட்கள் தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்கிறார். அவர் 26ந் தேதி மாலத்தீவில் இருந்து புறப்பட்டு இரவு 7.50 மணிக்கு தூத்துக்குடி விமான நிலையம் வருகிறார். அங்கு அவர் விரிவாக்கப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை திறந்து வைக்கிறார். பின்னர் இரவு திருச்சி செல்கிறார். […]

Loading

செய்திகள்

கூட்டணி கட்சிகளை மு.க.ஸ்டாலின் விழுங்கிக்கொண்டு இருக்கிறார்: எடப்பாடி பழனிசாமி பேச்சு

கும்பகோணம், ஜூலை.22- காங்கிரஸ் தேய்ந்து விட்டது. கம்யூனிஸ்ட் கட்சிகள் கண்ணுக்கு தெரியவில்லை. கூட்டணி கட்சிகளை மு.க.ஸ்டாலின் விழுங்கிக் கொண்டு இருக்கிறார் என எடப்பாடி பழனிசாமி கூறினார். ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரச்சார பயணத்தில் நேற்று தஞ்சை மாவட்டம் கும்பகோணம் தொகுதியில் தனது பிரச்சாரத்தை அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டார். பிரசார பஸ்சில் நின்றபடி அவர் பேசியதாவது:- தி.மு.க. கூட்டணி பலமான கூட்டணி. அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில் தி.மு.க. தலைமையில் […]

Loading

செய்திகள்

எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் கே.என்.நேரு கண்டனம்

சென்னை, ஜூலை.20- கூட்டணி ஆட்சி என்று கூறும் அமித்ஷாவுக்கு பதிலடி தரமுடியாத, எடப்பாடி பழனிசாமிக்கு, தி.மு.க. கூட்டணியை பற்றி பேச தகுதி இல்லை என்று அமைச்சர் கே.என்.நேரு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அமைச்சர் கே.என்.நேரு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- … பழனிசாமிவிரித்திருப்பதுரத்தினக்கம்பளம்அல்ல. பாஜகவின்பாசிசரத்தக்கம்பளம்என்பதை திமுகவின்தோழமைகட்சிகளும்மக்களும்அறிவார்கள். கோவையில்பேசியவரும்சிதம்பரத்தில்பேசியவரும்ஒரேஆளா?’ என்றுவாக்காளர்மண்டையைப்போட்டுக்குழப்பிக்கொண்டிருக்கிறார்கள். கூட்டணிஆட்சிஎன்றுமூச்சுக்குமுப்பதுதடவைசொல்லிக்கொண்டிருக்கும் அமித்ஷாவிற்குபதிலடிதரமுடியாதகோழைபழனிசாமி திமுககூட்டணிக்கட்சிகளைப்பற்றிப்பேசஅருகதைஇருக்கிறதா? மாண்புமிகுநகர்புறவளர்ச்சித்துறைஅமைச்சர்கே.என்.நேருஅறிக்கை ‘மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் பயணம் போய்க் கொண்டிருக்கும் எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தினம் தினம் கேலிக் கூத்துகளை […]

Loading

செய்திகள்

அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

கடலூர், ஜூலை 18– கடலூரில் அண்ணா தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., சத்யா பன்னீர்செல்வம் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த 2016-2021ம் ஆண்டு வரை பண்ருட்டி தொகுதி அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,வாக இருந்தவர் சத்யா பன்னீர்செல்வம். இந்த காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது. அதுமட்டுமில்லாமல், இவரது கணவர் பன்னீர்செல்வம் நகர மன்ற தலைவராக இருந்த போது ஊழல் செய்ததாகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக கடந்த பிப்ரவரி மாதம் […]

Loading